திங்கள், ஜனவரி 13, 2014

ஆழ்வார் VS போக்கிரி.

நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
பொங்கள் என்றுதான் என் நினைவு, எட்டு வருடத்துக்கு முன்பு ஆழ்வாரும், போக்கிரியும் ரிலீஸ். தீபாவளி, பொங்களுக்கு எல்லோரும் சொந்த ஊருக்கு போய்விடுவதால், பெரும்பாலான இந்துப் பண்டிகைகளின் நான் பெங்களூரில் ஒண்டியாக இருப்பேன். நேரம் போகவேண்டுமே என்பதற்காக படத்துக்குப் போவதும் உண்டு. அஜித் படம் ஏதாவது ரிலீஸ் என்றால் 1000 ரூபாய் கடன்வாங்கியாவது ஒரு பத்து பேரை கூட கூட்டிசெல்வது வழக்கம்.

கட்சிக்காரர்கள் மாநாட்டிற்கு கூட்டிச்செல்வது போலத்தான் இதுவும், தியேட்டர் டிக்கெட், இடைவெளியில் முருக்கு, கூல்ட்ரிங்க்ஸ் அப்புறமாக இரவு சாப்பாடு என்று அனைத்தும் அடியேனின் செலவே. படம் சூப்பராக இருந்தால், இரவு சாப்பாடு அசைவமாக இருக்கும் இல்லன்னா இட்லியும், கட்டிச்சட்னியும் மட்டும்தான். எனக்கு தெரிந்து அசைவம் வாங்கிக்கொடுத்ததாக நினைவு இல்லை (பில்லா1 தவிர்த்து). சில (பல) படங்கள் ரொம்ப மொக்கையா இருக்கும், அந்த நேரத்துல எப்படிடா இவங்கிட்ட சாப்பாடு வாங்கி சாப்பிடுறதுன்னு எண்ணி, என்னுடய பில்லையும் சேர்த்து கூட்டிக்கொண்டுவந்த கொள்கை குன்றுகளே கட்டிவிடுவார்கள்.

இப்படி எல்லா செலவுகளையும் நானே ஏற்றுக் கொண்டாலும், அஜித் படம் என்றால் அல்லு கழண்டு, தெரிச்சு ஓடுவானுங்க. “போன படம்மாதிரி இருக்காதுடா, கண்டிப்பா சூப்பரா இருக்கும், நீ வேணும்னா பாரு, கண்டிப்பா 150 நாள்தாண்ட” என்று கெஞ்சி கூத்தாடி இஸ்துக்குன்னு போவனும். அதுவும் விசிலடிக்க தெரிஞ்சவனுங்களுக்கு எக்ஸ்ரா கொஞ்சம் செலவு செய்யனும். தல வர்ற நேரமா பார்த்து பக்கி தூக்கிரும், எழுப்பு விட்டு “விசில் அடிடா, அடிடா” ன்னு கத்துறதுக்குள்ள தல எண்ரி முடிந்து, வில்லன் முகத்த காட்டிருவானுங்க.

மேட்டருக்கு வருவோம்.

அந்த பொங்களுக்கு அஜித்தின் ஆழ்வாரும், விஜயின் போக்கிரியும் ரிலீஸ். “அஜித் படம் வருது, கண்டிப்பா இங்க இருந்தா இவன் படம் பார்க்கனும்னு தூக்கிட்டு போயிருவான்”னு பயபுள்ளைங்க சுதாரிச்சிட்டானுங்க. பாட்டி செத்ததுக்கு போகதவனுங்க கூட இந்த தடவ பஸ் ஏறிட்டானுங்க. ஆள் கிடக்காம ரொம்ப கஷ்டமா போச்சு. எனக்கு தெரிஞ்சு, அஜித் குமாருடைய படத்துக்கு என்னுடன் வெறும் ரெண்டே ரெண்டு ஜீவன்களை கூட்டிகொண்டு சென்றது ஆழ்வார் படத்துக்கு மட்டுமே.

நாங்க இருந்த இடத்துல இருந்து வெறும் 5 கி.மீட்டரில் லாவண்யான்னு ஒரு தியேட்டர் இருந்தது. “கண்டிப்பா, அங்க எல்லாம் டிக்கெடி கிடைக்காது. புஷ்பாஞ்சலி போகுறதுக்கு பதிலா மாரத்தாளி ஏரியாவில் இருக்கும் மல்டிபிளக்ஸ்க்கு போகலாம்” என்று அந்த இருவரிடமும் கூறினேன். அப்போது இருந்ததிலேயே ரொம்ப காஸ்டிலியான தியேட்டர் அதுதான். இந்தமாதிரியான சந்தர்ப்பத்தில்தான்,  என் புண்ணியத்துல அந்த தியேட்டரை பார்த்தால்தான் உண்டு என்று அவர்களுக்கும் தெரிந்திருந்தது. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பயணம் செய்து, தியேட்டருக்கு வந்தால். கூட்டம்னா, கூட்டம் அப்படி ஒரு கூட்டம். சுத்திப் பார்த்தா எல்லாம் அஜித் குமாரின் கட் அவுட் தான். விஜய்க்குன்னு அங்க ஒன்னு, இங்க ஒன்னு என்று இருந்தது. மற்றபடி தியேட்டரை சுத்தி தல போஸ்டர்தான், ஃபெலக்ஸ்தான், அஜித் படம் போட்ட கொடிதான். ஒரே திருவிழாக்கூட்டம்.

டிக்கெட் கவுண்டருக்கு கூட்டம் ஐநூறு மீட்டராவது இருக்கும். மற்ற இரண்டு கவுண்டர்களும் கிட்டத்தட்ட காலியாகவே இருந்தது. அந்த தியேட்டரில் ஹிந்தி, தெலுங்கு படங்களும் ஓடிக்கொண்டிருந்ததால், அது அந்த படங்களுக்கான கவுண்டர் என்று நினைத்துக்கொண்டு இந்த பெரிய்ய்ய்ய கியூவில் நின்று கொண்டிருந்தேன். என்னுடய முறை அரைமணி நேரத்துக்கு பின்பு வந்தது, நான் காசை நீட்ட, “இன்னைக்கு எல்லா ஷோவுக்கும் டிக்கெட் முடிந்துவிட்டது நாளைய ஷோவுக்கு டிக்கெட் தரவா?” என்று டிக்கெட் கொடுப்பவன் கேட்க, எனக்கோ “சே!!! தல படத்துக்கு, இம்புட்டு டிமாண்டா?” என்று மெச்சிக்கொண்டேன். “அண்ணே எஸ்வந்த்பூரா ஏரியாவுல இருந்து, பார்த்தா உன் தியேட்டர்ல தான் படம் பார்கனும்னு வந்திருக்கேன். சாயங்கால டிக்கெட் இல்லன்னாலும் பரவாயில்லை, நைட்டு 10 மணி ஷோவுக்காவது மூனு டிக்கெட் கொடுண்ணா....” பாவமா மூஞ்சை வச்சிக்கிட்டு கேட்க. “நான் என்னடா வச்சிக்கிட்டா வஞ்சனை பண்ணுறேன், இல்லடா, எல்லாம் புக் ஆயிடுச்சு, வேணும்னா, ஆழ்வார் படத்துக்கு தரவா, இந்த ஷோவுக்கே டிக்கெட் இருக்கு..”ன்னு சொல்ல. கொதிச்சிட்டேன் “அப்புறம் இம்புட்டு நேரம் நீ எந்த படத்த பத்தி சொல்லிகிட்டு இருந்த?”ன்னு பெருங்கோபம் கொண்டு கேட்டேன் (நெற்றிக் கண்ணை மட்டுந்தேன் தொறக்கல). அவன் ரொம்ப கூலாக “போக்கிரி” ன்னு சொன்னான்.

நம்முடய டிக்கெட் கிடைத்து, தியேட்டருக்குள்ள போனா...... என் வாழ்க்கையில முதல் தடவையா வெறும் பதினஞ்சு பேரோட பார்த்த ஒரே படம் இதுதான், அதுவும் ரிலீஸ் ஆன முதல் நாளில் (“வெங்காயம்”ன்னு ஒரு படம் அதுக்கு கூட ஒரு அம்பது பேரு இருந்திருப்பான்). சரி, அஜித்துக்குன்னு இந்த 15 பேராவது வந்தானுங்களேன்னு எண்ணி ஒரு சின்ன சந்தோசம். அஜித் எண்ரி சீனில் நான் (மட்டும்) கையை தட்டி ‘தல..............”ன்னு கத்த. அந்த பதினஞ்சு பேரும் திரும்பி விட்ட லுக்கு இருக்கே.................90 வயசு பாட்டிய ரேப் பண்ணினவனா பார்க்குறதுமாதிரி கொலவெறியோட பார்த்தானுங்க.

அப்புறமாத்தான் தெரிஞ்சுது, அவனுங்க எல்லாம் போக்கிரி படத்துக்கு, டிக்கெடி கிடைக்காம வந்து உக்காந்தவனுங்கன்னு. இடைவெளியில் எண்ணிக்கை ரொம்ப குறைஞ்சிடுச்சு. “பாய், பார்த்தீங்களா?, எவனுமே இல்ல, பேசாம நாமளும் போயிடுவோம்”ன்னு கூப்பிட்டு வந்த ஒரு அடிமை முன்மொழிய, அதை இன்னொரு அடிமை வழிமொழிய. “பாருங்கடா, செகண்ட் ஆஃப் தான் பயங்கரமா இருக்கும், கண்டிப்பா பல டுவிஸ்ட் எல்லாம் இருக்கும், உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்....”ன்னு ஏதேதோ சொல்லி பார்த்துவிட்டு வந்த படம் அது.

என்னோட டவுட்டு என்ன என்றால், போஸ்ர ஒட்டினவன், பிளக்ஸ் வச்சவன், கொடி கட்டினவன் எல்லோரும் எங்க போனானுங்க? என்றுதான். உங்க டவுட்டு என்ன என்பது எனக்கு புரியுது, கூட்டிகொண்டு போன அந்த ரெண்டு பேரும் இருக்கானுங்களா ? என்று தானே...


-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------யாஸிர்.

ஞாயிறு, ஜனவரி 05, 2014

மச்சி ஒரு குவாட்டர்....ஸ்சொல்லேன்.

நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.

எப்படி புருசன்-பொண்ட்டாட்டி, சர்தார்ஜி ஜோக்ஸ் எல்லாம் பிரபலமோ அதுமாதிரித்தான் குடிகாரர்களின் ஜோக்கும் ரொம்ப பிரபலம். புருசன்-பொண்ட்டாட்டி ஜோக்ஸ், சர்தார்ஜி ஜோக்ஸ், பெரும்பாலும் 90% கற்பனைத்திறன் கொண்டு சொல்லப்படுபவை. ஆனால் குடிகாரர்களின் ஜோக்ஸ் 99% உண்மையானதாகவே இருக்கும். தண்ணியப் போட்டுட்டானுங்கன்னா பயபுள்ளைங்க பச்சப்புள்ளையா மாறிடுவானுங்க, அந்த நேரத்துல எவனும் பொய்யே பேசமாட்டான். இதுல எனக்கு நல்ல அனுபவம் இருக்குது.

என் நண்பர்களுடய எல்லா பார்டியிலும் நான் இருப்பேன், நான் தண்ணி அடிச்சது கிடையாது (சொன்னா நம்பனும், அதுக்காக சூடம் ஏத்தி சத்தியமெல்லாம் பண்ணமுடியாது). எல்லா கேங்கிலும் என்ன மாதிரி ஒரு பலி ஆடு இருக்கும். சிக்கன் வாங்கிட்டு வர, ஆப்பாயில் போட்டு கொண்டுவர, சோடா வாங்கி வர, இப்படி எல்லா வேலைகளும் நாங்கதான் செய்யனும். அடுத்து, தண்ணியப்போட்டுவிட்டு மட்டயானதுக்கு அப்புறம், தூக்கிட்டுப்போயி அவ, அவனுங்கு பெட்டுல தூக்குப்போடுறது வரை என்ன மாதிரி பலி ஆடுங்கதான் செய்யனும். இதற்கு கூலி இல்லாம இருக்குமா?. இருக்கும், அவனுங்க வாங்குற 2 கிலோ சிக்கன் 65யில், ஒருகிலோ நமக்குத்தான், ஆப்பாயிலில் அனைத்து வெள்ளைக்கரு பகுதியும் நமக்குத்தான்.

புதுசா தண்ணி அடிக்கிறவனுங்க யாராவது நம்ம கேங்குல சேந்திட்டான்னு எனக்கு தெரிஞ்சுச்சுன்னா, அடுத்த பத்து பார்ட்டிக்கு நான் போகவே மாட்டேன். புது குடிகாரனுங்க, ஒரு 50 ரூபா பீர குடிக்குறதுக்கு 500 ரூபா நொருக்கு தீணிய திண்ணுடுவானுங்க. அந்த சிக்கனுக்கும், ஆப்பாயிலுக்கும்தான் அந்த அரசவையிலே கவிஞனாக இருப்பேன், அதுவும் இந்த புதுக்குடிகாரனுங்களால பங்கம் வந்திரும்.

எங்க கூட ஒருத்தரு வேலை செஞ்சாரு, அவர் தண்ணிபோட்டாத்தான் ஸ்டெடியா இருப்பாரு, உடலில் ஆல்கஹால் அளவு குறைஞ்சிடுச்சுன்னா, நாக்கு உளரும், நடை தள்ளாடும். இந்தமாதிரி ரொம்ப வித்தியாசமான ஆளு. சனிக்கிழமை ஆச்சின்னா, போச்சு. மேல சொன்னமாதிரி பச்சப்புள்ளையா மாறிடுவாரு மனுசன். அதுவும் கொஞ்சம் அதிகமாயிடுச்சுன்னா, பிறந்த குழந்தைமாதிரி மாறிடுவாரு. அப்புறமா நாங்கதான் பேண்ட், சர்ட் எல்லாம் மாட்டிவிடனும்.

அந்த ஆளு ரொம்ப பாசக்காரர், அதும் நான்னா அவருக்கு ஒரு தனி பாசம்தான். ஒரு சனிக்கிழமை இரவு, எதுவுமே வாங்காமல், பூஜையை ஆரம்பிச்சிட்டானுங்க. பத்து நிமிசத்து ஒரு தடவ என்ன கூப்பிட்டு, வாட்டர் பாட்டில் வாங்கிட்டு வா, சிப்ஸ் வாங்கிட்டு வா, கோக் வாங்கிட்டு வான்னு ஒரே இம்சை. ஒரு தந்தூரி சிக்கன கூட ஒழுங்க திங்கவிடல. இப்படி மாறி மாறி எல்லோரும் என்னிடம் வேலை ஏவ, எனக்கு நடக்கும் கொடுமையை கண்டு, நம்மாளுக்கு சாமி வந்து ஆடா ஆரம்பிச்சிட்டாரு, ‘என்னடா நெனச்சீங்க இவன என்ன முட்டாப்ப்.... நெனச்சீங்களா? இல்ல கிருக்க்க்க்.....ன்னு நெனச்சீங்களா?’ ன்னு எனக்கு சப்போர் பண்ணி சண்ட போடுறாரா இல்ல, என்னய சண்டைக்கு கூப்பிடுறாரான்னே தெரியாம, ‘ஙே’ ன்னு முழிச்சிக்கிட்டு நின்னேன்.

‘நீ இருடா தம்பி, இந்த தடவ நான் போய் வாங்கிட்டு வாரேன்’னு சொன்னாரு,

“இல்லண்ணே நானே போயி வாங்கிட்டு வாரேன், நீங்க இப்ப நிதானத்துல இல்ல.......’ன்னு சொல்லி முடிக்கிறதுக்குள்ள.

என் நிதானத்தப் பத்தி உனக்கென்னடா தெரியும், நான் சொல்லி நீ போனீன்னா, இவனுங்க உன்ன கேனக்க்க்க்....கிருக்க்க்கு......முட்டாப்ப்ப்.....ன்னு நெனப்பானுங்க’

இதுக்கு அவனுங்களே தேவலாம்னு மனுசுக்குள்ள நினைத்துக்கொண்டு ‘சரிண்ணே, நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும், நீங்களே போய்ட்டுவாங்க, அதுவரைக்கும் உங்க சிக்கனை நான் பாத்துக்குறேன்னு’ சொல்லி இரவு 9 மணிக்கு அனுப்பிவச்சோம்.

போன மனுசன் போனவன்தான், மணி 10 ஆச்சு, 11 ஆச்சு. ஆளக்காணோம். பத்து வீடு தள்ளி இருக்குற கடையில பெப்சி வாங்கப்போனவர காணோம்ங்குற கவலை, எல்லோருக்கும் அடுத்த ரவுண்டுக்கு பெப்சி இல்லங்குற போதுதான் தெளிஞ்சுது, சாரி......, தெரிஞ்சுது. மாடில நின்னு பார்த்தா, அண்ணன் வாங்கப்போன கடை முன்னாடி ஒரே கூட்டம். பதறிப்போய் எல்லோரிடமும் சொன்னேன்.

ஏற்கனவே, அந்த கடக்காரனுக்கும் நம்ம அண்ணனுக்கும் ஆகாது, அக்கம்பக்கத்துல வேற கடை இல்லை என்பதற்காக, அவன் எல்லாப் பொருட்களின் மீதும் ஒரு ரூபாய் அதிகம்வைத்தே விற்பான். இது நம்ம அண்ணனுக்குப் பிடிக்காது, ‘ஒரு சந்தர்ப்பம் மட்டும் கிடைக்கட்டும், இவன ஒரு வழி பண்ணுறேன்னு’ அடிக்கடி சொல்லிக்கிட்டே இருப்பாரு. இந்த விசயம் நினைவுக்கு வர, கூட்டம், அண்ணன் இருந்த நிலை எல்லாம் ஒன்னு கூடி, ‘போச்சுடா, ஏழரைய கூட்டிட்டாருடா, செத்தாண்டா அந்த கடைக்காரன், போலிஸ் கேஸ் ஏதாவது ஆகிடுச்சா?, பாட்டில எடுத்து மண்டய பொழந்திருப்பாருரோ?,” இப்படி ஆளாளுக்கு பல கேள்விய எங்களுக்குள்ளேயே கேட்டுக்கொண்டு, கூட்டத்தை விலக்கி அண்ணனைத்தேடுனா....................

அண்ணன் பாதாள சாக்கிடையில பல்டி அடிச்சி கிடந்தாரு. “நான் தலைகீழாத்தான் குதிப்பேன்” ங்குறமாதிரி, கட்டை மேல ஏறிப்போகாமல், ஜம்ப் பண்ணி, சாக்கடைகுள்ள போய்ட்டாரு. தூக்குங்கடான்னு தூக்கி கொண்டுவந்து, குளிப்பாட்டி பெட்டுல போட்டு தூங்கவைக்குறதுகுள்ள, அடிச்சவனுங்களுக்கெல்லாம் இறங்கிடுச்சு. தானம், தர்மம் செய்யுறதுல, இவர மிஞ்ச எவனும் இல்ல. கர்ணன் எல்லாம் வந்து கையேந்தனும் அந்த அளவுக்கு வள்ளல். ஒரு ஞாயிற்றுக்கிழமை ரூமை கிளீன் பண்ண வந்த 5 லேபர்களின் சட்டையைப் பார்த்து, போதையில் இருந்த மனுசன் ‘என்னடா சட்டை இது, எங்கிட்ட வேலைபாக்குறவனுங்க இப்படி இருக்கக்கூடாது, நல்லா டிப் டாப்பா இருக்கனும்’னு சொல்லி, துவச்சி காயப் போட்டிருந்த எங்க சட்ட, பேண்ட் எல்லாத்தையும் எடுத்து தானம் கொடுத்திட்டாரு. அந்த ஒரு வாரம் அவனுங்க இஞ்சினியர் மாதிரி டிப் டாப்பா இருந்தானுங்க, நாங்க லேபர் மாதிரி திரிஞ்சிக்கிட்டு இருந்தோம்.  

இப்படி அவரு அலும்பலுக்கு அளவே இல்லாம போய்கொண்டிருந்தது. அவர் சொன்ன ஒரு கதை.
ஒரு பார்ல ஒருத்தன் ஓவரா தண்ணியப் போட்டுவிட்டு, சேர்ல இருந்து எழுந்து நடக்க கூட முடியாமல், தள்ளாடி தள்ளாடி கீழே விழுந்துகொண்டே இருந்தானாம். இத பார்த்த பக்கத்து சீட்டுக்காரன். இவனுக்கு ரொம்ப ஓவராகிடுச்சு, நடக்க முடியாத அளவுக்கு குடிச்சவன் எப்படி வண்டி ஓட்டி வீட்டுக்கு போவான்னு இரக்கப்பட்டு, அவன் வீட்டு அட்ரஸை கேட்டு, அவனை வீட்டில் விடப்போனானாம். அவன் வீடு வந்ததும், அவனின் மனைவி ‘என் கணவனை வீட்டில் பத்திரமா கொண்டு வந்ததுக்கு, கோடி புண்ணியம், ஆனா, அவருடைய வீல் சேரை எங்கே?”ன்னு கேட்டாளாம்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------யாஸிர்.

செவ்வாய், டிசம்பர் 31, 2013

'தேம்ம' செய்யதுவும், காலித் vs பாத்திமாவும்.


நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.

எனக்கு ஒரு பிளாக் இருக்குதுங்குறதே அடிக்கடி மறந்து போயிடுது. ஏதாவது ஒரு நல்லவுள்ளம், ரெண்டு வருசத்துக்கு முன்னாடி நான் கிறுக்கினத படிச்சி கமெண்ட் எழுதும் போது, அது நம்மளோட மெயிலுக்கு வரும். அத பார்த்தபின்னாடிதான், “ஆத்த்தி நாமளும் பிளாக் வச்சிருக்கோம்ல”ன்னு ஞாபகம் வரும். இன்னைக்கு கூட அப்படித்தான் ஏதோ பழைய போஸ்ட பார்த்து பாராட்டி வந்த மெயிலில் புண்ணியத்தில நினைவு திரும்பியது.

பேஸ்புக் வந்தபின், புது பொண்டாட்டி பின்னாடி அலையுற புது மாப்பிள்ளை மாதிரி ஆகிடுச்சு. அதனால பிளாக்கை ஏற்றெடுத்துகூட பார்க்கமுடியவில்லை. பிளாக்னா கம்பராமாயணம் மாதிரி கத கதையா எழுதனும், அந்த கஷ்டம் பேஸ்புக்குகு இல்ல திருவள்ளுவர் மாதிரி ரெண்டே ரெண்டடியில சொன்னா போதும். பத்து கமெண்டு (எதுவும் நல்லவிதமா இருக்காது), பதினைந்து லைக்குன்னு அலப்பரபண்ணலாம்.

இப்பெல்லாம், பேஸ்புக்குல ரெண்டு லைன் போஸ்ட் போடுறதுக்கே வக்கத்து போய் திரியவேண்டியதாயிருக்கு, இதுல பிளாக்குல என்ன எழுத? எங்கூடி எழுத?. ஒரு காலத்துல கற்பனைத்திறனும், கவித்திறனும் கரைபுரண்டு ஓடுச்சு, இப்ப கஞ்சிக்கு வழியில்லாம காய்ஞ்சிபோய் கிடக்குது. ஆனாலும் எழுதனுமேன்னு எழுதுறதுதான் இது. அதையும் நீங்க படிக்கனுமேன்னு படிச்சிக்கிட்டு இருக்கீங்க.

“தேம்ம செய்யது” ன்னு ஒரு ஆளு எங்க ஊருல இருந்தாராம், அவரைப்பற்றிய கதைகள் எங்க ஏரியாவில் ரொம்ப பிரபலம். அது உண்மையான கேரக்டரா? இல்ல நம்மாளுங்க உருவாக்குனதா? என்பது எல்லாம் நமக்கு தேவையில்லை. ஏரியாவுக்கு ஏரியா அந்த பெயர் மாறியிருக்கும் ஆனா கதை ஒன்னாத்தான் இருக்கும். அவருக்கு வேலை வெட்டின்னு எதுவுக் கிடையாது, சும்மா தேம்மேன்னு இருப்பாரு. இதுதான் ‘செய்யது’ “தேம்ம செய்யது” ஆன கதை.

இந்தமாதிரி சும்மா இருக்குற ஆளுங்களுக்குத்தான் ஊருல நடந்த, நடக்குற, நடக்கப்போகுற அனைத்து விசயமும் தெரியும். கிட்டத்தட்ட அவர் எங்க ஊரின் என்சைக்லோபிடியா. இந்த வீட்டுல யார் யாரு இருக்கா, என்ன என்ன செய்யுறாங்க என எல்லா டீட்டெய்ல்லும் அத்துபடி. இம்புட்டு திறமை இருக்குற ஒரு ஆளு சும்மா இருக்குறது எங்க ஊரு இன்னொரு பெருசுக்கு பொறுக்கல, தேம்ம செய்யதுகிட்ட போய் அவருடைய திறமையை எல்லாம் எடுத்து சொல்லி, “நீ ஏன் ஒரு கல்யாண புரோக்கரா ஆகக்கூடாது? கல்யாணம் பண்ணிவச்சதுமாச்சி, உனக்கு புரோக்கர் கமிசன் கிடச்சதுமாச்சி” என ஆலோசனையை வழங்க, தேம்ம செய்யதுக்கு ‘ச்சே, நமக்குள்ள இம்புட்டு திறம இருந்தும் தேம்மேன்னு இருந்துட்டோமே” ன்னு எண்ணி, புரோக்கரா உருவாகிட்டாரு.

முதல் ஆர்டர், கைத்தரி ஆலிமூசா மகன் காலித். பல இடத்துல சுத்தி, தேம்ம செய்யது புரோக்கரா புரமோட் ஆனத கேள்விப்பட்டு, அவர்கிட்ட வந்து நின்னிருக்கானுங்க. கல்யாண மாலை புரோக்கிராமுல வர்றது மாதிரி ஆலிமூசா தன்னுடைய பைய்யனைப் பற்றி “என் பையன் பேரு காலித், 10ம் வகுப்பு காலாண்டு பரீட்சை வரை படிச்சிருக்கான், அழகான, மாமனார், மாமியாரை அனுசரிச்சு போகுற பெண்ணா எதிர்பார்க்குறோம்” ன்னு சொல்லுறதுக்கு முன்னாடியே, “இவ ஓ புள்ள காலித்துதாண, போனவாரம் சந்தனக்கூடு விழாவுல, 10வது தெருல 12ம் நம்பர் வீட்டு புள்ளய கையப்புடிச்சி இழுத்து அடிவாங்குனவந்தான” என புள்ளிவிவரத்தை சொல்ல, மிரண்டுபோச்சு மாப்பிள்ளை வீடு,

ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் பண்ணி வைக்கனும், ஆனா முதல் கஸ்டமர் என்பதால் கூட ஒரு பூஜ்ஜியத்தை கடைசியில் சேர்த்து, அல்லாப்பிச்ச மகள் பாத்திமாவுக்கு கல்யாணம் செய்து வைத்துவிட்டார். அதுல இருந்து தேம்ம செய்யது ரொம்ப அதிகமா பிரபலம். குறைந்த காலத்தில் செஞ்சூரி அடிச்ச விராத் ஹோலி சாதனையை எல்லாம் நம்மாளு அந்தக்காலத்துல தூக்கி எறிஞ்சவருக்கு, மனசுல சின்ன உருத்தல் மட்டும் இருந்துக்கிட்டே இருந்தது.

அது என்னன்னா, முதலில் கல்யாணம் பண்ணிவச்ச காலித்-பாத்திமா ஜோடிக்கு வயித்துல ஒரு புளூ, பூச்சி உண்டாகலையேன்னு தான். இருந்தாலும் அவரு அதை பெரிசுபடுத்தல. தேம்மே செய்யதுவின் வரவால், மிரண்டு வரண்டு போன புரோக்கர்கள் அவரை காணும் இடமெல்லாம் அதை சொல்லிச் சொல்லியே கடுப்பேத்திக் கொண்டிருந்தார்கள்.பல நேரங்களில் பொறுமையாக இருந்தவர், அன்று, அதிகாலை தொழுகை முடித்துவிட்டு சாயக்கடையில் சாய குடித்துக்கொண்டிருந்த போது, மேரேஜ் அசம்பிளர் சங்க தலைவர், சுமார் நூறு பேர் கூடியிருந்த அந்த சபையில் “என்னப்பா செய்யது, நீ முதல்முறையா செஞ்சுவச்ச கல்யாண ஜோடிக்கு புள்ள இல்லாம ஆயிடுச்சே?” என தேம்ம செய்யதுவை சீண்டியிருக்கிறார்.

“இங்க பாரு, கரைசேராததுக்கும், காலங்கழிஞ்சு போனதுக்கு கல்யாணம் பண்ணிவைச்சதே பெருசு, கல்யாணம் பண்ணி வைக்குறதோட என் வேலை முடிஞ்சுது, அவனுக்கு புள்ள இல்லங்குறதுக்காக, ராத்திரி அவன் ரூமுக்குல்ல உக்காந்துக்கிட்டு “எல காலித்து நீ கைலிய தூக்கு, எலா பாத்துமா நீ பாவடைய தூக்கு” ன்னாடா சொல்லிக்குடுக்கமுடியும்.” ன்னு பொங்கி எழுந்துட்டாரு.

விவேகானந்தரின் ஐ.நா சபை சொற்பொழிவும், அண்ணாவின் பாராளுமன்ற பேச்சும் எவ்வளவு பிரசித்தியோ அதுமாதிரி தேம்ம செய்யதுவின் அந்த எதுகை மோனை பேச்சு அவ்வளவு பிரபலம் எங்க ஏரியாவுல.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------யாஸிர்.

செவ்வாய், நவம்பர் 19, 2013

பங்காராம்


நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.

என் நினைவு சரி என்றால் அது 2006, பெங்களூரில் வேலை செய்துகொண்டிருந்தேன். அங்கு இரண்டு தெலுங்கு இஞ்சினியர்களும் இருந்தார்கள். ஆனால் அதில் ஒருத்தன் தான் நம்ம தோஸ்த். அவனுக்கும், எனக்கும் ஒரு ஜெண்டில்மேன் அக்ரிமெண்ட் இருந்தது, என்னன்னா, அவன் எனக்கு தெலுங்கு கற்றுக்கொடுக்கவேண்டும், அதற்கு பதிலா நாம என்ன இங்கிலீஸையா கத்து கொடுக்கமுடியும், தமிழ்தான். அவனுக்கு ஏற்கனெவே குஞ்சும், குஞ்சும் தமிழ் தெரியும், அதற்கு காரணம் அவன் எம்.டெக் சென்னையில் படித்திருந்ததால். குஞ்சம் குஞ்சம் தமிழ் என்றால், டேய் ஸ்......, பொறம்போக்கு, தே.....லே, போட்டாங்க்..... மாதிரியான சங்க இலக்கிய சொற்கள் மட்டுமே. எனக்கு அது கூட தெரியாது (தெலுங்கில்). பாய்ஸ் படத்தில் வரும் “தெங்கனா கொடுக்கா”வின் அர்த்தமே அவன் சொல்லிக்கொடுத்துத்தான் தெரிந்தது.

அது சரி........... பெங்களூருல போய் கன்னடத்தை கத்துக்குறத விட்டு விட்டு நீ எதுக்குடா, தெலுங்கு கத்துக்க ஆசைப்பட்டன்ன நீங்க கேக்கலாம். ஆனா நான் சொல்லமாட்டேன், அப்படின்னு சொன்னா நீங்க மிச்சத்தையும் படிக்கமாட்டீங்க என்பதால் சொல்லுறேன். அதுக்கு 2 காரணம் ஒன்னு, அப்ப சிவில் இஞ்சினியர்களுக்கு பெங்களூரை விட்டா, ஹைதராபாத், விசாகப்பட்டினத்தில் தான் வேலை வாய்ப்பு அதிகமா இருந்தது. பெங்களூர் ரொம்ப பிடித்த நகரம் என்றாலும், காவிறியில தண்ணி வந்தாலும், அவன் கக்கூஸ்ல தண்ணி வரலைன்னாலும் ஒருவாரத்துக்கு வெளி இடத்துல தலைகாட்டமுடியாது. அடுத்த காரணம், அப்போது மலையாளத்தை விட கில்மா படம் எல்லாம் தெலுங்குலதான் அதிகமா வந்துகொண்டிருந்தது. அந்த படத்துக்கெல்லாம் வசனமாடா முக்கியம்னு நீங்க முக்குறது தெரியுது, ஆனாலும் எனக்கு வசனத்தோட படம் பார்த்தாத்தான் கொஞ்சம் இது. சரி மறுபடியும் டியூசன் மேட்டருக்கு வருவோம்

நாம கொடுத்த டிரெய்னிங்கில் அவனிடம் சரஸ்வதி சம்பளம் போட்டு உட்கார்ந்துவிட்டாள். ஆனா நாம கொஞ்சம் வீக்கு (கத்துக்குறதுல). ஒரு நாளுக்கு, பத்துவார்த்தை உதாரணத்தோடு சொல்லித்தருவான், மறுநாள் மறந்திடும். அதுக்கு காரணம் சைடுல இன்னொருத்தன் கூட இதேமாதிரியா டீலிங்க் வச்சி ஹிந்தியும் கற்றுக்கொண்டிருந்தேன். அதுனால என்னாச்சின்னா, தெலுங்கு சேனல் வரவேண்டிய நேரத்துல ஹிந்தி சேனல் ஓப்பன் ஆகிடும், ஹிந்தி சேனல் வரவேண்டிய இடத்துல, தெலுங்கு சேனல் ஓப்பன் ஆகிடும். அப்படி இருந்தும், அவனுடைய தீவிரமான பயிற்சியில படிச்சதுதான் ‘பாகவுண்ணாரா’ ‘போஜ்ஜனமாயிந்தா’ ‘தெல்லேது’ ‘தெலுசு’ ‘சம்பிஸ்தானு’..... போன்றவார்த்தைகள். நான் சினிமா பைத்தியம் என்பதை கண்டுகொண்டு, தெலுங்கு படம் பார்த்தால் தெலுங்கு சீக்கிரம் கத்துக்கொள்ளலாம் என்றான். நானும் அதுவரைக்கும் எந்த தெலுங்கு சினிமாவும் பார்க்காததால் டபுள் ஓ.கே சொல்லிவிட்டேன்.

அதுக்கும் காரணம் இருந்தது, அந்தகால கட்டங்களில் தான் நடிகர் விஜய் தெலுங்கில் ஹிட்டான கில்லிகாரு, வசிகராகாரு.... போன்ற படங்களை தமிழில் விட்டு வெற்றிபெற்றுக்கொண்டிருந்தார். “பங்காராம்’ இதுவும் தரணி இயக்கிய படம், தெலுங்கில் எடுத்தபின்பு தமிழில் ‘தங்கம்’ என்ற பெயரில் எடுப்பதாக இருந்தது. இந்த விவரத்தை எல்லாம் என்னிடம் என் நண்பன் சொல்லி, படம் பார்க்க சம்மதிக்கவைத்தான். சரி நாமளும் தமிழில் ரிலீஸ்ஸாவதற்கு முன்பு பார்த்தமாதிரி இருக்கும் என்று சம்மதித்தேன். ஆந்திரா நண்பன் பவன் கல்யாணின் தீவிர ரசிகன். பவன் ‘அப்படி ட்ரஸ் பண்ணியிருப்பாரு, இப்படி ஸ்டைலா இருப்பாருன்னு’ என்கிட்ட வந்து ரொம்பதடவை டார்ச்சர் பண்ணுவான். எனக்கு பவன் கல்யாண் எல்லாம் யாருன்னு தெரியாது, தெரிஞ்சது சிரஞ்சீவி மட்டும்தான் என்று சொன்னாலும், விடாமல், ‘சிருவோட (சிரஞ்சீவி) சொந்த தம்பிதான் பவன்’னு ஹிஸ்டரி, ஜாக்கிரபி எல்லாம் சொல்லுவான்.

கிடைக்கிற ஒரு நாள் லீவுலதான் நான் நல்லா தூங்குவேன், ஞாயிற்றுக்கிழமைன்னா 11.30க்குத்தான் எழுந்திருப்பது. ஷோ டைம் 11.00 மணி என்று சொன்னதால், அவனுக்காக 10.க்கு அலாரம் வைத்துவிட்டு தூக்கியிருந்தேன். திடிரென ஒரு குரல் ‘ஏமிரா, ஒஸ்தாவா? லேதா?’, யாருன்னு பார்த்தா, நம்மாளு பவன் ஸ்டார் கெட்டப்புல நின்னுகிட்டு இருந்தான். அலாரம் அடிக்காம ரொம்ப நேரமா தூக்கிட்டோமோன்னு நினைச்சு மணிய பார்த்தா, 7.00. வந்துச்சே கோபம், எனக்கு தெரிஞ்ச ஒரே ஒரு தெலுங்கு கெட்டவார்த்தையை டிஜிட்டெல் சவுண்டுல கத்தி திட்டுனேன். 

“இப்பவே போனாத்தான் 11.00 மணி காட்சிக்கு டிக்கெட் இருக்கும் ராடா” ன்னு போர்வையை இழுத்துகொண்டிருந்தான். ‘சரிடா, போர்வையை ரொம்ப இழுக்காதே பிறகு வேற படம் பார்க்குறமாதிரி ஆகிடும், நீ போய் ஹால்ல உட்காரு நான் வர்றேன்’னு சொல்லி அனுப்பினேன். 8.00 மணிகு தியேட்டருக்கு போனா அடேய்ய்ய்ய்ங்கப்பா, நிக்குறானுங்க நாலு தெருவுக்கு. அந்த நேரத்துல என் நண்பனோட, நண்பனும் படத்துக்கு வந்திருந்தான் ரெண்டு பேரும் தெலுங்குல என்னோமோ பேசிக்கிட்டனுங்க. கூட நின்ன எனக்கு ஜெமினி டிவியில செய்தி பார்த்தமாதிரி இருந்துச்சு. அவங்கிட்ட பேசினபின்னாடி என் நண்பன் பயங்கரமா திட்ட ஆரம்பிச்சிட்டான். ‘பாரு அவன் மதியம் 1.30 ஷோவுக்கு இப்பவே வந்திட்டான், உன்னாலதாண்டா லேட்டு, இன்னைக்கு மட்டும் படம் பார்க்கல, உன்னை சும்மாவிடமாட்டேன்’னு தெலுங்குலேயே திட்டினான், இத எல்லாத்தையும் நான் ‘ஜம்பிஸ்தானு’ங்குற ஒரு வார்த்தையைக் கொண்டு கண்டுபிடிச்சேன்.

யாரு செஞ்ச புண்ணியமோ, அன்னைக்கு டிக்கெட் கிடைத்தது. உள்ள போனா, எல்லா சேரும் ஃபிரியா இருக்கு, எல்லா பக்கிகளும் நின்னுக்கிட்டே படம் பார்த்தானுங்க. சும்மா சொல்லக்கூடாது, ஹீரோ, வில்லன், காமெடியன் என எவனுக்கும் பாகுபாடு பார்க்காம ஹோ, ஹோன்னு கத்துனானுங்க. “யாருடா ஹீரோ?, இவனா?, இவனா?’ ன்னு கேட்டு கேட்டு ஓஞ்சுபோன எனக்கு ‘கதை என்னடான்னு கேக்குறதுக்கு என் உடம்புல தெம்பு இல்லை”. படம் ஆரம்பிக்கும் போது, தி.மு.க காரனுங்கமாதிரி ஹோ, ஹோ, ஹொன்னவனுங்க, ஒவ்வொரு தொகுதி நிலவரம் வரும் போது கலவரம் ஆனதுமாதிரி, கப்சிப்புன்னு அடங்கிட்டானுங்க. படம் பப்படம் மாதிரி நொறுங்கிடுச்சு. இடைவெளியின் போது ஒரு பய வாய்திறக்கல. படம் நல்லா இல்லைங்குறதுனால நமக்கு கிடைக்கவேண்டிய கூல்டிரிங்ஸ்ஸும், முருக்கும் போச்சு. “பர்லேதுடா, செகண்ட் ஆஃப் பாகவுந்தி’ ன்னு அவனை தைரியப்படுத்தினேன். அதுக்கப்புறம் தான் கோன் ஐஸ் வாங்கி கொடுத்தான்.

முதல் ஆஃப் பாக்கும்போதே தெரிஞ்சு போச்சு எனக்கு, செகண்ட் ஆஃப் வேலைக்காகாதுன்னு. அதேமாதிரித்தான் நடந்தது. அவனுக்கு இருந்த அந்த கொலவெறியில எனக்கு கேட்கனும்னு தோணுன அந்த கேள்விய மட்டும் நான் கடைசிவரை கேட்கவே இல்லை.

அது என்ன கேள்வின்னா ‘இ படத்துலு நானு தெலுங்கு கத்துக்குறதுக்கு ஏமிடா உந்தி?’

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------யாஸிர்.