செவ்வாய், செப்டம்பர் 06, 2011

வாத்திகளை வாழ்த்தி



இன்று நம்முடைய நாடே ஆசிரியர் தினம் கொண்டாடிக் கொண்டு இருக்கும் போது நம்ம மட்டும் எப்படி கொண்டாடாம இருப்பது, அது தப்பாச்சேன்னு எண்ணி, இந்த பதிவின் மூலமாக எனது மனம் கவர்ந்த ஆசிரியர்களைப் பற்றி எழுதி, அவர்களுக்கு நன்றி சொல்வதன் மூலமாக அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் வாழ்த்துக்களையும் சொல்லிவிடலாமுன்னு நினைத்து இதை ஆரம்பிக்கின்றேன்.

ஆசிரியர்களை என்னால் இரண்டு விதமான வகையில் பிறிக்க முடியும். ஒன்னு பள்ளி ஆசிரியர்கள், இன்ன ஒன்னு கல்லூரி ஆசிரியர்கள். இவங்க இரண்டு பேருக்குமே எனக்கு தெரிந்த வித்தியாசம், பள்ளி ஆசிரியர்களிடம் பிரம்பு இருக்கும், அப்படியே கட் பன்னி கல்லூரியில ஓப்பன் பன்னினா அந்த பிரம்பு, மாணவனிடம் இருக்கும் (ஆனா எங்க காலேஜில எல்லாம் அப்படி இல்ல). எனக்கு தெரிந்து என் பள்ளி நாட்களில் எந்த வாத்தியாரும் பிரம்பை மறந்துவைத்து விட்டு வகுப்புக்கு வந்தது மாதிரியெல்லாம் தெரியல. 

என்னுடைய பள்ளிக் காலம் முடிந்து சுமார் 11 வருடம் இருக்கும். இந்த இடைப்பட்ட காலங்களில் ஆசிரியருக்கும், மாணவர்களுக்கும் இடையிலான உறவில் பல மற்றங்கள் வந்ததாகவே எனக்கு தோன்றுகின்றது, காரணம் எங்க பள்ளிக்காலங்களில் வாத்தியார் அடிச்சிட்டாரு, மாணவன் தந்தை போலிஸில் புகார்னு ஒரு செய்தி வந்தது இல்ல, ஆனா இப்போ தின மலர் தலைப்பு செய்தியே "ஆசிரியர் டுமீல், மாணவன் டமார்னு" 2 நாளுக்கு ஒரு தடவையாவது வந்துவிடுகின்றது, இந்த அரசியல், சினிமா கிசு, கிசுக்னு தனி ரிப்போர்ட்டர்கள் இருப்பது போல இந்த விசயத்த பத்தி செய்தி சேகரிக்கன்னு ஒரு தனி குழு இருக்கும் போல....

எனக்கு என்னமோ இந்த காலத்து ஆசிரியர்களுகுக்கு பொறுமை குறைந்துவிட்டதாகத் தோனவில்லை, மாறாக இந்த காலத்து மாணவர்களுக்கு ஆசிரியரின் பொறுமையை சோதிக்கிற அளவு, மற்றும் ஒரு கொடூர குணம் இருக்குமுன்னு நினைக்கிறேன். இந்த மாதிரியான குணம் படைத்த ஒரு சில மாணவர்கள் நான் படிக்கும் போதும் உண்டு

அந்த டீச்சர் பேரு சாந்தி(மல்லிகா டீச்சர் இல்லையான்னு எல்லாம் கேக்க கூடாது), பொறுமைனா அப்படி ஒரு பொறுமையான டீச்சர், கணக்கு பரிட்சை ஹாலில் அறிவியல் பாட பதில் எழுதுவது தெரிந்தும் எக்ஸ்ரா பேப்பர் கொடுத்து 15 நிமிடம் அதிகம் ஆனாலும், பொறுமையா இருந்து வாங்கிட்டுத்தான் போகும், பாருங்க எந்த அளவுக்கு பொறுமன்னு. அப்படி பட்ட டீச்சரையே பொங்கி எழ வச்சிட்டான் என் சக மாணவன் ஒருவன். மூல விஷயம் எல்லாம் எனக்கு மறந்து போச்சு, ஆனா 25 17 போச்சின்னா எத்தனை வரும்ங்கிரது தான்,
மூர்த்தி எந்திரிச்சு பதில் சொல்லு.... 

ம்ம்ம்ம்ம் 10 டீச்சர்

எப்படிப்பா 10 வரும். சரி உன்கிட்ட 25 ரூபா இருக்கு, 17 ரூபா செலவாகிடுச்சினா எவ்வளவு இருக்கும். 

ம்ம்ம்ம்ம் 12 ஆ டீச்சர்

உப்ப்ப்ப்ப்.... எப்படிடா 12 இருக்கும், சரி உன்கிட்ட 25 காரு இருக்கு, 17 கார வித்துட்ட அப்ப மிச்சம் எவ்வளவு இருக்கும்?. 

ம்ம்ம்ம்ம்ம்ம்........
 .
.
.
இப்படியா பல உதாரணங்களுக்கு அப்புரம்

உங்கம்மா உனக்கு 25 இட்லி வக்கிராங்க, அதுல நீ 17 இட்டிலிய சாப்பிட்டுட்டா எத்தன மீதி இருக்கும்? ணு கேட்டு முடிக்கல நம்மாலு 8 நு டான்னு சொல்லிட்டான். வந்திச்சே டீச்சருக்கு கோபம், ஏன்டா ராஸ்க்கல், பணம், புஸ்தகம்னு அவ்வளவு உதாரணம் சொல்லும் போது எல்லாம் தப்பு தப்பா சொல்லிட்டு, தின்ங்கிர ஐட்டம் சொல்லும் போது தான் உனக்கு தெரியுதா......ன்ன்னு, பொங்கி எழ ஆரம்பிச்சிருச்சி. வாழ்க்கைல நான் பார்த்த மோசமான அடி, இல்ல பேரடி அப்பத்தான். 

 இத மாதிரி 8 வகுப்பு அப்பத்தான் போயிருக்கு, B செக்ஸன் தான் வேணும்னு அடம்பிடித்து முதல் நாள் கிளாஸுக்கு போயாச்சு. மூக்கையா சாருக்காகத்தான் அந்த கிளாசுக்கு அவ்வளவு டிமான்ட், ஏன்னா யாரையும் அதட்டி கூட பேசமாட்டாருன்னு எல்லோருக்கும் தெரியும். முதல் நாள், முதல் வகுப்பு, 7 வகுப்பில் வேற, வேற, செக்ஸனில் படித்தவர்கள் வந்திருப்பதால், எல்லோரும் அவர், அவர்களை அறிமுகப்படுத்துமாறு, சார் சொல்ல, எல்லோரும் அறிமுகப்ப்டுத்திக் கொண்டோம், அப்போது தான், ஒருவன் எழுந்து பே பேன்னு முழிச்சுக்கிட்டே இருந்தான், சார் பார்த்துவிட்டு

உன் பேர் என்ன அத முதல்ல சொல்லு?

எ பேரு, ம்ம்ம்ம் எ பேரு..... சொல்லமாட்டான் சார்.

எந்த பேருனாலும் பரவாயில்லடா சொல்லு?

எ பேரு, ம்ம்ம்ம் எ பேரு..... சொல்லமாட்டான் சார்.
.
.
.
என் பொறுமையை சோதிக்காதே, டேய் சொல்லிரு?

சொல்லமாட்டான் சார்.

என் இத்தனை வருச சர்வீசுல, முதல் முறையா என்ன அடிக்கும் படி வச்சிராத, ஒழுங்கா மாதிரியா சொல்லிரு, பேரூ என்ன?

சொல்ல மாட்டன் சார்.

வாத்தியாருக்கு பொறும தாங்க முடியாம, அத்தன வருஷ விரதத்தை கலச்சிட்டாரு.

அடின்னா அடி அப்படி அடி ஒரு கொக்காமக்கா அடி.

அடிச்சு கலச்சுப் போயி, மறுபடியும் கேட்டாரு

உன் பேரு என்ன?

சொல்லமாட்டன் தான் சார், சொல்லமாட்டன் தான் சாருன்னு பாவம் அழுது ஒப்பாரி வச்சபின்னாடி தான், அவனுடையா நண்பன் எழுந்து சார், அவன் பேரு, சுடலை மாடன் சார்,

அதத்தான் அவன் அப்படி சொல்லுரான்னு சொல்ல, வகுப்புல ஒரே சிரிப்பு சப்தம் தான். இருந்தாலும் அவரு அடிச்ச அடி, எப்பேய்ய்ய்ய்ய்ய்........ இன்னைக்கு வரைக்கும் மறக்கமுடியல.


என்னை கவர்ந்த ஆசிரியர்கள்.

6 ஆம் வகுப்பு வரை நான் என் ஊரிலயே படிச்சிருந்தாலும், நினைவில் வைத்துக் கொள்ளும் படியான வாத்தியார்கள் இருந்தது 7 வகுப்பில் இருந்து தான்.

1.ஆண்டாள்
ஸ்ரீ கைலாசா நடு நிலைப்பள்ளியில் நான் 7 & 8 ம்  வகுப்பு படித்த போது, 8ம் வகுப்பு கணக்கு டீச்சர் தான் இவங்க. அதுக்கு முன்னாடி எல்லாம் கணக்கு என்றாலே அஜித் குமாருக்கும், டான்ஸுக்கும் உள்ள இடைவெளி தான். இவங்க பாடம் எடுக்க ஆரம்பித்த பின்பு, கமலுக்கும், ஹீரோயின் உதட்டுக்கும் உள்ள இடைவெளி அளவிற்கு வந்துவிட்டது. பிரம்பு சும்மா பேருக்கு இருக்குமேயொழிய, அத வச்சு அடிக்குரது எல்லாம் இல்ல. ரொம்ப சிம்பிலா சொல்லித்தருவாங்க, அதே போல ரொம்ப தெளிவா சொல்லி தருவாங்க. கணக்கு பாடத்து கூட படம் வரைந்து சொல்லி கொடுத்திருக்காங்கன்னா பாருங்களேன். மாணவர்களை அழைப்ப்தில் ஒரு கண்ணியம் இருக்கும், சில வாத்தியார்கள் அழைப்பது போல், எலே, ஒலே லாம் கிடையாது, என்னய்யா, போப்பா, வாப்பா தான். அதுனால தான் மாணவர்களுக்கு ரொம்ப பிடிக்கும்.

2. முருகன் 
இவர் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் மேல்நிலைப் பள்ளியில் நான் 9 டு 12ம் படித்த போது, 10ம் வகுப்பு கணக்கு வாத்தியார். கொஞ்ச வயசுக்காரர், 9ம் வகுப்பில் எனக்கு அறிவியல் பாடம் எடுத்தவர். ஓரளவிற்கு கணக்கு பாடம் நல்லா பன்னிவேன்னு நினைத்து, ரொம்ப பாசம் இருந்தது, எந்த ஒரு நமக்கு பிடித்த விஷயமானாலும், அதுல ஒரு பிடிக்காத விசயமும் இருக்கும், அதுபோலத்தான், கணக்குல எனக்கு பிடிக்காத விசயம் இந்த  cos@, sing@, tan@.... அவர் வைத்த வாரந்திர டெஸ்ட் எல்லாத்திலயும் குறைந்த மதிப்பெண் பெற்றுவந்ததால், என்னைப் போல குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, தனியா பாடம் நடத்தி, மறுபடியும் டெஸ்ட் வைத்திருந்தார், அன்று பள்ளியில் அனகோன்டா படத்திற்கு கூப்பிட்டு போவதால், டெஸ்ட் இருக்காது என்று எண்ணி படிக்காமல் பள்ளி சென்று படமும் பார்த்துவிட்டு, சீட்டை விட்டு எழுந்த சமயத்தில், தியேட்டர் திரையில் "10B மாணவர்கள் டெஸ்ட் எழுதிவிட்டு வீட்டிற்கு செல்லவும்" என்ற மெஸஜை பார்த்துவிட்டு, அடிவயிற்றில் ஏற்பட்ட இரசாயன மாற்றத்தை வெளிக்காட்டாமல், டெஸ்ட் எழுதி முடித்தவுடன், அடுத்த ஷாக். இவர் அப்பவே பேப்பரையும் திருத்த ஆரம்பித்து விட்டார். சரிதான்னு முதுகு பக்கத்த நல்ல விறப்பாக்கிக் கொண்டு திருத்தின பேப்பர வாங்கிப் பாத்தா பேரதிர்ச்சி, 10 மார்க்கு தான் வரும்னு பார்த்தா 15 மார்க் (100க்கு தான்). இருந்தாலும் விழுந்த அடில ஒன்னும் குறையில்ல, தயாராக்கி வச்சிருந்த முதுகு தவிற எல்ல இடத்திலயும் கணக்கு பாடம் நடத்திவிட்டார். மறுநாள், நான் அடிக்கும் போது எவனோ பூனை மாதிரி கத்தினானே யாரு அதுன்னு? கேட்டது தான் தாமதம் எல்லோரும் யாஸிருன்னு ஏகோபித்த குரலில் சொன்னது இன்னும் காதில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது.

3. சிவன்
 
மெப்கோ பொறியியல் கல்லூரியில் நான் படித்த போது, 2ம் ஆண்டில் எங்களுக்கு C புரோக்கிராம் பிராக்டிக்கெல் பேப்பர் இருந்தது. அதுல எல்ல பயபுள்ளைங்களயும் பாஸாக்கிப் போடனும்னு ரொம்ப கஷ்டப்பட்ட ஜீவன். இதுக்கு முன்னடி சொன்ன எல்லோரும், எங்கள கொஞ்சம் கஷ்ட்டப்படுத்தியவர்கள், ஆனா இவர் எங்களிடம் ரொம்ப கஷ்ட்டப்பட்டவர். இவரும் சிவில் லெக்சரர் தான், இருந்தாலும் கம்பூட்டர் பத்தி கொஞ்சம் தெரிந்ததால், எங்கள சமாளிக்க சொல்லி மேல் மாட்டம் அனுப்பியிருந்தது. 3ம் வருடம் சிவில் சம்பந்தமான ஒரு பேப்பரும் எடுத்திருந்தார். இவர் 3ம் வருட மாணவர் ஹாஸ்டலுக்கு வார்டனாகவும் இருந்திருந்தார், அந்த வருசத்துல தான் நான் எழுதிய அப்பாலஜி லெட்டர் அதிகம். இவருடன் நாங்கள் சென்ற 3ம் ஆண்டு சுற்றுலாவையும் மறக்க முடியாது. இவர் மளையாலி, இவர் பேசும் தமிழ், இப்ப நமிதா மேடம் பேசுராங்கலே, அதுமாதிரி இருக்கும். "என்னே யாசிர் சாரே, நல்லா இரிக்கா" .னு அவர் அன்பா கேட்டத கூட அவர்கிட்ட சொல்லி கிண்டல் பண்ணியிருக்கோம்.

கண்டிப்பா இவர்கள் என்ன மாதிரியான 1000 மாணவர்களைப் பார்த்திருப்பார்கள், ஆனால் நான் பார்த்த சுமார் 50 ஆசிரியர்களில் இவர்கள் முக்கியமானவர்கள், பிடித்தமானவர்களும் கூட.
மீண்டும் ஏதாவது ஒரு சந்திப்பில் சந்திப்பதற்காக காத்திருக்கும் பழைய மாணவன் புது வெர்ஷனில்


அனைவருக்கும் ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள் 

--------------------------------------------------------------------------------------------------------------------------------------
யாஸிர்

2 கருத்துகள்:

  1. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. Well said Yasir.. I am so proud of you..
    The way you are writing is very fantastic..
    And I have created my own blog only because of you.. I am looking another face of yours..

    All the very best my Bro..

    Ever Yours Vivek..

    பதிலளிநீக்கு