திங்கள், ஜனவரி 16, 2012

அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்.


நம் அனைவரின் மீதும் ஆண்டவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
கல்யாண தேதியை அறிந்துகொண்டதிலிருந்து அரண்டுபோயிருக்கும் எனக்கு, மேலும், மேலும் பீதியை கூட்டிக்கொண்டிருக்கின்றது இணையதளங்கள். ஏதாவது ஒரு விசயத்திற்கு நான் கம்யூட்டரில் உட்கார்ந்து, எதையாவது தேடும் போது, திருமண சம்பந்தமான விசயங்களே மேல்நோக்கித் தெரிகின்றன. மனைவியிடம் நடந்து கொள்வது எப்படி?, மனைவியிடம் நற்பெயர் வாங்குவது எப்படி? என்பனவாக இருக்கின்றது. பொண்ணு பார்பதற்கு முன்னாடி கூட இந்த மாதிரியான கட்டுரைகள் வந்திருந்திருக்கலாம், ஆனா என் கண்ணுலபட்டது என்னவோ, இப்பத்தான்.

சரி இதயெல்லாம் படித்திவிட்டு நம்ம வீட்டம்மாவ அசத்திடலாமுன்னு பார்த்தா, பத்து பாய்ட் இருக்கும் ஆபிஸர்ஸ், அதுல ஒன்னக் கூட நம்மால செய்யவே முடியாது. உதாரணத்துக்கு, காலை காபி கண்றாவியாக இருந்தாலும், ஆஹா, பேஷ், பேஷ், ரொம்ப நன்னா இருக்கு!!!! என்று ஆரம்பிக்க வேண்டுமாம். இப்படி ஆஹா, ஓஹோன்னா, சரி, அய்த்தானுக்கு நம்ம காபிமேல அம்புட்டு இஷ்டமுன்னு அதே மாதிரியல்லவா, தினமும் காபி கிடைக்கும்!!!!!!!!!!!. (கூறுகெட்டவனுங்க ஏதாவது எழுதனும்னு எழுதிடுறானுங்க).

ஒரு கட்டுரையில் மனைவியிடம் கணவன் எதிர்பார்பது, கணவனிடம் மனைவி எதிர்பார்பது என்று ஒரு 30 விசயங்களை எழுதியிருந்தார்கள். அந்த 30ல் எனக்கு பிடித்த (கணவன் எதிர்பார்ப்பது) ஒரு 15 பாயிண்டை (மீதமுள்ள 15 குணங்கள், எனக்கு ஒன்றும் பெரியதாக தெரியாததால், அதனை விட்டுவிட்டேன்). போல்ட், மற்றும் அண்டர் லைன் செய்து என்னவளுக்கு அனுப்பியிருந்தேன். அதே போல நீ எதிர்பார்கும் குணங்களை (மனைவி எதிர்பார்பது) அந்த 30ல் என்னைப் போல அண்டர் லைன், போல்ட் செய்து அனுப்பு என்று மெயில் செய்திருந்தேன். மாலையில் பதில் வந்தது. சும்மா சொல்லக் கூடாது, இந்த காலத்து பொண்ணுங்க ரொம்ப விபரம், கொடுத்திருந்த 30 பயிண்டுடன் இவள் ஒரு 6 பாயிண்ட் சேர்த்து மொத்தம் 36 ஐயும் போல்ட் செய்து, இடாலிக் செய்து, அண்டர் லைன் செய்து, ஃபான்ட் சைசை பெரிதாக்கி அனுப்பி வைத்தாள்!!!!!!!!!!?????????????!!!!!!!!!!!!!!!!!!!!
இது நமக்கு சரிபட்டு வராது, வேறு ஏதாவது இணையதளத்தில் சென்று திருமணம் பற்றிய நல்ல தகவல்கள் இருக்கின்றனவா? என்று தேடிப்பார்த்ததில்................. ஒன்னுமே கிடைக்கலை. தத்துவங்கள் மட்டும் கொட்டிக்கிடக்கின்றன. தத்துவங்கள் வாழ்கயில் ஏதாவது ஒரு காலத்தில் ஒத்துப்போகும், சிலவற்றிர்க்கு கொஞ்சம் நாள் ஆகும். கீழ் காணும் தத்துவத்தில் மூன்றாவது நிலையை நான் கடந்துவிட்டேன்.

தத்துவம் 1
கல்யாணம் என்பது பப்ளிக் டாய்லட் மாதிரி, வெளியே நிக்கிறவனுக்கு உள்ள போகனுமுன்னு அவசரம், உள்ளே போனவனுக்கு நாத்தம் தாங்கமுடியாம வெளியே வந்திடனுமுன்னு அவசரம்.

தத்துவம் 2
என் மனைவியிடம் கூற எனக்கு ஒரு வார்த்தை உள்ளது, ஆனால் அவளிடம் ஓராயிரம் வாக்கியங்கள் உள்ளது.

தத்துவம் 3
உன் மனைவியின் பிறந்த நாளை ஞாபகம் வைத்துக்கொள்ள எழிய வழி, ஒரே ஒரு முறை பிறந்த நாளை மறந்துவிடுவது தான்.

தத்துவம் 4
உனது தவறு என்றால் காலில் விழுந்துவிடு
நீ சரி என்றால் மூடிக்கிடு இருந்துவிடு.

தத்துவங்களை படித்தபின்பு, ஒரே பட படபடப்பாக வந்தமையால், கொஞ்சம் ரிலாக்ஸுக்காக ஜோக்ஸ் படிக்கலாமுன்னு போனா, அங்கேயும் கல்யாணம் சம்பந்தமான ஜோக்ஸ்தான் அதிகமாக இருக்கின்றது. உண்மையிலேயே நீங்க நல்லா பார்த்திருந்தால் தெரியும், சர்தார்ஜி ஜோக்ஸை விட திருமணம் சம்பந்தமான ஜோக்ஸ், கணவன்-மனைவி ஜோக்ஸ்தான் இணையத்தில் அதிகமாக இருக்கும். ஜோக்ஸ் நனைத்து படித்தால் சிரிப்பு வருவதற்கு பதில் ஒரு மரண பயமே வந்துவிடும் அப்படியா நான் படித்த ஒரு ஆங்கில ஜோக்
கொஞ்சம் நன்றாக கூர்ந்து பாருங்கள் (ஏதாவது புலப்படுகிறதா?)
அது ஒரு சிறிய கிராமம், அங்க யாருமே கணவன் மனைவியாக அதிக வருடங்கள் இருந்ததில்லை. அதிகமா போனா ஒரு 10 வருசம் வரை தான் இருப்பார்கள் அதன் பின்பு ஏதாவது சண்டை வந்தோ அல்லது உருவாக்கிக்கொண்டோ பிரிந்துவிடுவார்கள். ஆனால் அங்கேயும் ஒரு ஜோடி 50 வருசம் சேர்ந்து வாழ்ந்திருந்தது கேள்விப்பட்டு, கல்யாண வயதுள்ள இளைஞர்கள், இவர்கள் நமக்கெல்லாம் ரோல் மாடல், ஆகவே இவர்களின் 50வது கல்யாண நாளை வெகு விமர்சியாக கொண்டாடவேண்டும் என்று எண்ணி, தடபுடலாக ஏற்பாடு எல்லாம் செய்தார்கள். அந்த நாளும் வந்தது அனைவரும் விழாவினை சிறப்பித்து வீட்டுக்கு செல்ல, ஏற்பாடு செய்த இளைஞர்கள், தாத்தவை மட்டும் தனியா தள்ளிக்கொண்டு போய், சீக்கிரட் ஆப் தி சக்சஸ் என்னனு கேட்டார்கள். அதற்கு தாத்தா சொன்னார் “பொறுமை தான், மனைவி என்ன செய்தாலும் அதை பொறுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இளைஞர் கூட்டம் கேட்டது “அதெப்படி தாத்தா தப்பு செய்தாலும் பொறுமையா இருக்கிறது? உங்களால் எப்படி அது சாத்தியமானது?

தாத்தா தன்னுடைய தேனிலவு காலத்திற்கு நினைவை ஓடவிட்டார். நானும், எனது மனைவியும் தேனிலவிற்காக ஊட்டி சென்றிருந்தோம், அப்போது என் மனைவிக்கு குதிரை சவாரி செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டதால், எனக்கொரு குதிரை, அவளுக்கொன்று என்று வாங்கிக்கொண்டு, சவாரி செய்துகொண்டிருந்தோம். அப்போது திடிரென்று என் மனைவின் குதிரை பிளிரிக்கொண்டு வேகமாக குதித்து என் மனைவியை கீழே தள்ளிவிட்டது, எழுந்து குதிரையைப் பார்த்து அவள் சொன்னால்

இது “முதல் தடவை

பின்னர் ஏறிக்கொண்டு சிறு தூரம் சென்ற பின்னாடி மறுபடியும் குதிரை என் மனைவியை கீழே தள்ளியது, மீண்டும் எழுந்து குதிரையைப் பார்த்து சொன்னாள்

இது “இரண்டவது தடவை

பின்பு மறுபடியும் குதிரையின் மீது ஏறிக்கொண்டு சவாரி செய்து கொண்டிருந்த போது, மூன்றாவது முறையும் குதிரை அவளை கீழே தள்ளிற்று. பயங்கர கோபம் கொண்ட என் மனைவி, தன் கை பையில் இருந்த துப்பாக்கியை எடுத்து ‘டுமீல், டுமீல் என்று குதிரையை சுட்டுவிட்டால்,

இதனை சற்றும் எதிர்பார்க்காத நான், “அறிவிருக்கா உனக்கு, ஒரு வாயில்லா ஜிவனை இப்படி சுட்டுகொன்னுட்டியே, ராட்சசி, உனக்கு ஒழுங்கா உட்காரத் தெரியலைனா பாவம் இந்த குதிரை என்ன செய்யும், பைத்தியக்காரி, பொரம்போக்க்கு,.........

அத்தனை திட்டுகளையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டு என் மனைவி என்னிடம் சொன்னால்,

இது “முதல் தடவை

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

----------------------------------------------------------------------------யாஸிர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக