புதன், நவம்பர் 04, 2015

முஹம்மது ரெட்டி.

‘’யு.ஏ.யி’’ல் ரொம்ப கஷ்டமான விஷயம் ஓட்டுனர் உரிமம் எடுப்பது. இதை, டிரைவிங்க் லைசன்ஸ் எடுப்பது என்று தமிழிலும் கூறலாம். ரொம்ப ஈஸியான விசயம் பிலிப்பைன்ஸ் பெண்ணை செட் பண்ணுவது. இதை, செட் பண்ணுவது என்றுதான் தமிழிலும் கூறவேண்டும். மேலும், ‘’உன் அழகுக்கும், அறிவுக்கும் இரண்டுமே ஈஸிதானே ‘’ என்று கூறி எரியுற நெருப்பில் எர்வாமேட்டினை ஊற்றவேண்டாம். துபாய், அபுதாபி ஒரே நாட்டில் இருந்தாலும், துபாயில் ஒரு சிஸ்டம், அபுதாபியில் ஒரு சிஸ்டம். நான் டிரைவிங்க் லைசென்ஸ் எடுப்பதைப் பற்றி சொல்கிறேன். டி.லைசன்ஸ் எடுத்தால் உங்க வாழ்க்கையில் மாற்றம், முன்னேற்றம் அன்புமணி உண்டாகும் என எங்க கேப்டன் அண்ணாத்துரை மருக்கா மருக்கா சொன்னதால், லைசன்ஸ் எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டேன்.

இந்தியா லைசன்ஸை வைத்து, அபுதாபி லைசென்ஸ் எடுப்பது கொஞ்சம் எளிது என்ற முன்னோர்களின் அறிவுரைப்படி, கஷ்டத்தில் கபடியாட விண்ணப்பித்தேன். இந்தியாவில் இருக்கும் போது பைக் லைசன்ஸ் எடுப்பதற்காகத்தான் டிரைவிங்க் ஸ்கூலுக்குச் சென்றேன். அங்கு, பைக் லைசன்ஸிற்கு 2,500 ரூபாய், கார் லைஸன்ஸிற்கு 2,000 ரூபாய் என்று சொன்னார்கள். மேலும், கார் லைசன்ஸ் எடுத்தால் பைக் லைசன்ஸ் ப்ரியாக எடுத்துக்கொடுக்கப்படும் என்ற ஆபரைப் பற்றி சொன்னதால், கார் லைசன்ஸ் எடுத்தேன். எனக்கு, அந்த டிரைவிங்க் ஸ்கூல் ஜீப்பில், டிரைவிங் படிக்கப் போவது, ஏனோ கரகாட்டக்காரன் படத்தில் ராமராஜன் வாத்தியக் கோஷ்டிகளுடன் சொப்பன சுந்தரி காரில் போவது போன்ற உணர்வு ஏற்படும். ஆனால் சிலருக்கோ சொப்பன சுந்தரியிடமே போகிற உணர்வு.

அந்த ‘’L’’ போர்டு வண்டியின் தனிச் சிறப்பு என்னவென்றால், ரோட்டோரமாக எந்த டீக்கடையைப் பார்த்தாலும் வண்டி ஆஃப்பாகிவிடும். ஒரு டீ, ஒரு வடை சாப்பிட்ட பின்புதான் வண்டி மறுபடியும் ஸ்டார்ட் ஆகும். டிரைவிங்க் படிக்க 2,000 ரூபாய், டீ, வடைக்கு 5,000 ரூபாய் என மொத்தம் 9,000 ரூபாய் செலவு. ரோடு டெஸ்ட்டின் போது, ஆர்.டி.ஓ ‘’அடுத்த புளியமரத்து பக்கத்துல நிறுத்து’’ என்று சொன்னார், ஆனால் நான் புளியமரத்திலேயே நிப்பாட்டினேன். இருந்தும் லைசன்ஸ் கிடைத்தது. (இப்போது 2,000 தையும், 5,000 தையும் கூட்டிப்பாருங்கள் 9,000 வரும்). லைசன்ஸை கையில் தரும்போது டிரைவிங்க் ஸ்கூல் ஓனர் என்னிடம் சொன்னதுதான், எனக்கு அபுதாபியில் லைசன்ஸ் அப்ளிகேசனில் சைன் பண்ணும்போது நியாபகம் வந்தது. ‘’உன்னோட நல்ல நேரம் உனக்கு லைசன்ஸ் கெடச்சிருச்சி, இனி ரோட்டுல போறவனுக்கு கெட்ட நேரம் தான்’’.

இங்கு, முதல் ஒரு வாரம் தியேரி கிளாஸ் நடக்கும். அதில், ‘’ரைட்டுல இண்டிகேட்டர் போட்டா, ரைட்டுல திரும்பனும், லெப்டில் இண்டிகேட்டர் போட்டா லெப்டில் திரும்பவேண்டும், ஸ்பீடா போகனும்னா ஆக்ஸிலேட்டரை மிதிக்கனும், வண்டியை நிருத்தவேண்டும் என்றால் பிரேக்கை மிதிக்கனும்...’’ இதை கேட்கும்போதே சொல்லிக்கொடுப்பவனை தூக்கிப்போட்டு மிதிக்கனும்னு தோணும். இதுக்கு ஒரு எக்ஸாம், அதில் பாஸானவுடன் நேராக ரோடு டெஸ்ட்தான். இந்திய லைசன்ஸ் இல்லாதவர்களுக்கு தியேரி கிளாஸ் டெஸ்ட், சிக்னல் டெஸ்ட், பார்க்கிங்க் டெஸ்ட், அந்த டெஸ்ட், இந்த டெஸ்ட் எல்லாம் முடித்து ரோடு டெஸ்ட் வருவதற்கு, ‘’வாலு’’ பட ரீலிஸ் மாதிரி நாலு வருசம் ஆகிடும்.

ரோடு டெஸ்டிற்கு முன்னாடி ‘’L’’ போர்டு வண்டியில் நன்றாக பயிற்சி எடுக்கவேண்டும். அதற்கு ஒரு மணி நேரத்திற்கு 60 திர்ஹம்ஸ். எங்க கம்பெனியில் எல்லோரும் ரெட்டியின் ‘’L’’ போர்டு வண்டியில்தான் டிரைவிங்க் கற்றுக்கொண்டார்கள். ஓட்டினா ரெட்டி வண்டியத்தான் ஓட்டுவோம் என்று சூழுரைப்பதற்குக் காரணம் ரெட்டி இந்தியர் என்பதால் அல்ல, பாக்கிஸ்தானி இல்லை என்பதால். இங்கு அதிகமாக ‘’L’’ போர்டு வண்டிகள் பாக்கிஸ்தானிகளிடம்தான் இருக்கும். அவர்களிடம் சென்றால், அவர்கள் சொல்லிக்கொடுப்பதுபோல ’’ஏக் காவ்மே ஏக் கிசான் ரஹ தாதா’’ என்று ஓட்டிக்காட்டவேண்டும். மாறாக ‘’....................ரகு தாத்தா’’ என்று ஓட்டிவிட்டால், சோலி சுத்தம். ஒரு எல்லைதாண்டிய பயங்கரவாதம் நடந்துவிடும். 60 திர்ஹம்ஸ் கொடுத்து அடியும் வாங்கிவிட்டு ‘’பாருடா சீமான்ட சொல்லி திட்டசொல்லுரேன்’’ என அழுதுகொண்டே வரவேண்டும்.

ஆனால் ரெட்டி அப்படியல்ல, கலகலப்பு பட அமிதாப் மாமா மாதிரி. அடிவாங்குரதுக்குன்னு அளவு எடுத்து செஞ்ச மாதிரி இருப்பாரு. வண்டில ஏறுவதற்கு முன்னாடி, வண்டிய வெளிப்பக்கமா சுத்தி காட்டி ‘’இந்த பம்பர் பப்படமாக்கினது உங்க நண்பர் Mr.வித்யாதர், பின் கதவு பொளந்துக்கிட்டு நிக்குதுல்ல அது Mr.எல்லப்பா செஞ்சது, etc., என நண்பர்கள் வச்சி செஞ்ச கதையை சொன்னார். இப்படி பல பேர், அவங்களால எவ்வளவு முடியுமோ அவ்வளவு அடிச்சி எங்கிட்ட ஒரு மீன்பாடி வண்டில அனுப்பி வச்சாங்க.

முதல் நாள், “ஊர் லைசன்ஸ் வச்சி அப்ளைபண்ணி இருக்கீங்க, ஊர்ல நல்லா வண்டி ஓட்டுவீங்களா?’’ என்று கேட்டார். புளியமரத்தை காரில் தள்ளின உண்மையைச் சொன்னால், எக்ஸ்ரா 10 திர்ஹம்ஸ் கேட்டுவிடுவாரோ? என்ற டரியலில், ‘’விஷால் ஊருவிட்டு ஊர் போய் ரவுடிகளை அடிக்கிறதுக்கு நான்தானே வண்டில கொண்டுபோய் விடுவேன்’’ என்று சொன்னேன். ஆனால் அந்த பொய் பத்து நிமிடத்திற்குகூட தாக்கு பிடிக்கவில்லை. ரோட்டில், அடுத்த லேனுக்கு மாற, லெப்ட் இண்டிக்கேட்டர் போடச் சொன்னார். இண்டிக்கேட்டர் பட்டன், ஸ்டீரிங்கின் இடதுபக்கம் இருக்கும், நானோ வலது பக்கத்து பட்டனை அழுத்த, முன் பக்க வைப்பர் கனஜரூராக வேலை பார்த்துக்கொண்டிருந்தது. ஜீலை மாத 50 டிகிரி வெயிலில் வைப்பர் போட்டுக்கொண்டு வண்டி ஓட்டும் அழகை அபுதாபியே ஆனந்த புன்னகையுடம் பார்த்துக்கொண்டிருந்தது.

ரெட்டி முறைப்பதில் இருந்தே வைப்பரை ஆப் செய்ய சொல்வதை புரிந்துகொண்டு, வேறுபட்டனை அழுத்தினேன். இம்முறை சரியாக பின்புற வைப்பர் வேலை செய்தது. என்னுடய செயலில் அவருடய பொருமை கொஞ்சம் செயல் இழந்து போயிருக்க கூடும். நிருத்தும்படி சொன்னார். நிருத்தச் சொன்னால், ரோட்டு ஓரமாக பார்க்கிங்க் இண்டிகேட்டர் போட்டு நிருத்தவேண்டும் என்பது எனக்கு அப்போது தெரியாது, மேலும் கற்றுக்கொடுக்கும் ஆசான் சொல்லும்போது என்ன செய்வது? ‘’குருவே சரணம்’’ என்று கூறி, நடு ரோட்டில் பிரேக் போட்டு, ஹாண்ட் பிரேக்கையும் இழுத்துவிட்டேன். பிரேக் போட்டு ஒரு செகண்ட் கூட ஆகவில்லை சுற்றியும் ‘’க்க்கீய்ய்ய், க்கீய்ய்ய்.............’’ சவுண்டுகள். நல்லவேளை பின்னாடி வந்த லாரிக்காரன் சுதாரித்துக்கொண்டு சைடில் திரும்பிவிட்டான், இல்லை என்றால், ‘’குருவே சரணம்’’, குருவுக்கே மரணம் ஆகியிருக்கும்.

புளியமரத்தான் என்பது நான் சொல்லாமலே அவருக்கு புரிந்துவிட்டது, கலா மாஸ்டர் மாதிரி ஹிந்தியில், கிழி, கிழி என்று திட்டி கிழித்துவிட்டார். அவர் திட்டியதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை, ஏனென்றால் எனக்கு ‘’உதர் போ, இதர் வா....’’ என்ற லெவலில்தான் ஹிந்து மாலும்ஹே. கொல்டிகள் எந்த பாஷையில் திட்டினாலும் அவர்களையும் மறந்து ‘’தெங்கனா கொடுக்கா’’ என்ற தெலுங்கு கெட்டவார்த்தை வந்துவிடும், ஆனால் ரெட்டி திட்டும் போது அந்த வார்த்தை வரவில்லை, அதிலிருந்தே அவர் கெட்டவார்த்தையில் திட்டவில்லை என்பது ரொம்ப ஆருதலாக இருந்தது. ரெட்டிக்குப் பதிலாக பாக்கிஸ்தானியிடம் மாட்டியிருந்தால் என் நிலை?. ஊரில் ‘’இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜீவூன்’’ என பாத்திஹா ஓதி கறி, சோறு திண்டுகொண்டிருந்திருப்பார்கள்.

ஆளே இல்லாத ரோட்டில் கார் ஓட்டச் சொல்லிக்கொடுக்கும் போதே, ஒரு பாட்டில் தண்ணீரை ஒன்றாக குடிப்பார். ‘’U’’ டெர்ன், ரவுண்டா போர்ட் பற்றிய பயிற்சியின் போது, ஐந்து கேக், ரெண்டு பாட்டில் நிரைய தண்ணீர், ஒரு ஜீஸ் என மினி மெஸ்ஸையே காருக்குள் கொண்டுவருவார். இப்படித்தான் ஒரு முறை கத்தி கத்தி தொண்டை வரண்டு, ஆள் இல்லாத நேர் மெயின் ரோட்டில் வந்தவுடன் ‘’நேர பார்த்து வண்டி ஓட்டு’’ என்று சொல்லிவிட்டு, வாய் வைக்காமல் அன்னாந்து தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தார். அந்த நேரம் சர்வீஸ் ரோட்டில் ஒருவன் கொடூற வேகத்தில் மெயின் ரோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தான். சர்வீஸ் ரோடில் வருகிறவன்தான் நின்று வரவேண்டும் என்று மூளைக்குத் தெரிந்தும், மோதிவிட்டால்? நிலைமை மோசம் (அதனுடன் மோசனும்) போய்விடும் என்று மனசு சொல்லியது. நாமதான் பாட்ஷா மாதிரி மனச கேட்டு வேலை செய்றவங்களாச்சே, போட்டேன் பாருங்க பிரேக். க்க்கிகிகிகிரீரீரீரீச்ச்ச் என்ற சபத்துடன் வண்டி நின்றது. அப்பாட...!!!! வண்டி தப்பிச்சது என்று திரும்பினால், தண்ணீர் குடித்துக்கொண்டிருந்த குருஜி, குளித்து முடித்திருந்தார். அப்புறம் என்ன? அடுத்த அரைமணி நேரம் ‘’ஹர ஹர மகா தேவிக்கிய்....’’

ரொம்ப தங்கமான மனுசன் நம்ம ரெட்டி. ‘’ரெட்டிகாருன்னு கேள்விபட்டிருக்கேன், ஆனா ரெட்டியோட கார இப்பத்தான் பாக்குரேன்’’ என்று ஒரு ஜோக் சொன்னேன். இத தமிழில் படித்துவிட்டு ‘’இதெல்லாம் ஒரு ஜோக்காடா?’’ என தலையில் அடிக்கும் நீங்கள், ஹிந்தியில் நான் சொன்னதைக் கேட்டு  ரெட்டி சிரிச்ச சிரிப்பை பார்த்திருந்தால், கூட ஒரு பத்து கிளாஸ் போகலாம் என்பீர்கள். ஏதாவது ஒரு நாள் அதிசயமாக கொஞ்சம் வண்டிய அவர் சொல்லிக் கொடுத்தமாதிரி நல்லா ஓட்டுவேன், அன்னைக்கு நல்ல மூடில் பழைய விசயங்களை எல்லாம் பேசுவார். அப்போதுதான் அவரின் முழுப்பெயர் முஹம்மது ரெட்டி என்பதை தெரிந்துகொண்டேன். இஸ்லாத்தில் ஷியா, சுன்னா பஞ்சாயத்தே பெரிய பஞ்சாயத்தாக இருக்கையில், இதுல ரெட்டி வேறயா? என்று குழப்பத்தில் இருப்பதை ரெட்டி, வண்டி வடக்கும் தெற்குமாக நிலையில்லாமல் போவதின் மூலம் உணர்ந்து அந்த கப்பி பிளாஷ்பேக்கை சொன்னார். அவருடைய பழைய முதலாளியிடம் சண்டை போட்டதால், அந்த முதலாளி இவருடய பாஸ்போர்டை கிழித்துவிட்டானாம், பின்னர் தலைமறைவாகி, புது பாஸ்போர்ட் எடுக்க உருவாக்கிய பெயர்தான் முஹம்மது ரெட்டி.

எவ்வளவு மோசமா வண்டி ஓட்டினாலும், ‘’உன்னால முடியும், உன் பிரண்ட் வித்யாதருக்கு நீ எவ்வளவோ மேல்’’, ‘’கணேஷோட கம்பர் பண்ணினா நீ தான் பெஸ்ட்’’ என உத்வேகம் கொடுப்பார். அப்புறமாகத்தான் தெரிஞ்சுது, ‘’உன்னோட கம்பேர் பண்ணுறதுக்குகூட யாஸிர் லாயிக்கில்ல’’ என்று கணேஷ்யிடம் சொன்னது. கிட்டத்தட்ட அவரிடம் 70 கிளாஸ் பயிற்சி எடுத்து, ரோடு டெஸ்ட்க்கு போகும் போது, அவருக்கு ரொம்ப நம்பிக்கை இருந்தது ‘’நான் பெயிலாயகிவிடுவேன்’’ என்று. ஆனா, விதி வலியது நான் பாஸாகிவிட்டேன். புளியமரத்துல நிப்பாட்டி லைசன்ஸ் வாங்க தெரிஞ்சவனுக்கு, கேவலம், லைட் போலில் வண்டிய முட்டுக்கொடுத்து நிப்பாட்டி லைசன்ஸ் வாங்க தெரியாதா?. தென்காசியில் பரமசிவன் என்றால் அபுதாபியில் அகமது. யார்கிட்ட?


----------------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

18 கருத்துகள்:

  1. // மாற்றம், முன்னேற்றம் அன்புமணி உண்டாகும் //
    என்னவே சொல்லுதே, அன்புமணி உண்டாகுமா!??.. தலகீலா நிண்டாலும் உண்டாகாதுவே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படி குண்டக்க மண்டக்க கேள்வி கேட்டா குடிசய எரிச்சிருவோம். மைண்ட் இட்.

      நீக்கு
  2. நெஜமா சொல்றேன்
    நீங்க காமெடி ட்ராக் எழுத முயற்சி
    பண்ணுங்க யாஸிர்

    பதிலளிநீக்கு
  3. நீங்க என்ன பொய்யா சொல்லப்போறீங்க. மேல எழுதுனது கூட காமெடி டிராக்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன். அவ்வளவு சீரியசாவா இருக்கு?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் சினிமாவுக்கு காமெடி ட்ராக் எழுத முயற்சி
      பண்ணுங்க சொன்னேன்

      உங்க எழுத்தில் இருக்கிற நையாண்டி குறும்பு நக்கல் இதுக்கே கண்டிப்பா சினிமால சான்ஸ் கிடைக்கும்

      நீக்கு
    2. இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒன்னுமில்லாம பண்ணிருவீங்க போல.

      நீக்கு
  4. செம்ம்ம யாசிர் நிறைய சிரிச்சேன்.

    பதிலளிநீக்கு
  5. As usual I like vey much sure you will move to next step i.e cinema and wirting books etc.

    A Abdul Rahim

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அப்துல் ரஹிம். பவர் ஸ்டாரிடம் கால்ஷீட் கேட்டிருக்கேன், தந்தால் உடனே ஷூட்டிங் கிளம்பிடவேண்டியதுதான்.

      நீக்கு
  6. Mind blowing man, can't control my laughing. In fact after long days laughed loudly, thanks. God bless.

    பதிலளிநீக்கு
  7. I just can't control laughing at office....
    Really awesome humor...

    பதிலளிநீக்கு