செவ்வாய், ஜனவரி 31, 2012

அன்புடன் அழைக்கின்றோம்....,

நம் அனைவரின் மீதும் ஆண்டவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
என்னுடைய சொந்தக்கார பெண்ணாக இருந்தாலும், இந்த பொண்ணு தான் நமக்கு மனைவியா வரப்போகிறாள் என்று எனக்கு தோன்றியதே இல்லை. சொந்தத்தில் பெண் எடுக்க கூடாது என்று எனக்கு முன்னாடி ஒரு எண்ணம் இருந்ததாலோ என்னவோ, எனக்கு இந்த பெண் மீது அப்படி ஒரு எண்ணம் வந்ததே இல்லை. இதுல பெரிய கொடுமை என்னவென்றால், இந்த பெண்ணுக்கு எனக்கு முன்னாடி வந்த மாப்பிள்ளைகள் பற்றி, இவளின் அண்ணன் என்னிடம் விசாரிச்சது தான். இதுல நான் வேற இரண்டு பேரை ரெக்கமண்ட் செய்தது, கொடுமயின் உச்சம்.

இன்னும் அத நினைச்சா காமெடியாகத்தான் இருக்குது. சிகரெட் பிடிப்பான் என்ற ஒரே காரணத்திற்காக ஒருவனை வேண்டாம் என்று சொல்லிவிட்டவர்கள் என்னிடம் எப்படி ஏமாந்தார்கள் என்று எனக்கு இதுவரை தெரியவில்லை. யாருக்கு, யாருன்னு ஆண்டவன் எழுதிவைத்திருப்பான் என்பது உண்மைதான். சொந்தத்தில் பெண் எடுக்க கூடாதுன்னு இருந்த நீ, என்ன இதுக்க்க்க்க்கு இப்போ ஒத்துக்கிட்டன்னு நீங்க கேட்கலாம். எனக்கு வேற வழி தெரியல.

ஆமா, அதிக வித்தியாசத்துல பொண்ணு பார்க்க கூடாது, கூடுமான வரை வெளியூராக இருக்கவேண்டும், பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும் என்ற மூன்று மட்டுமே என்னுடைய கட்டிசனாக இருந்தது. இதுல இரண்டாவது கண்டிசனுக்கு, என் அம்மாவால் ஆப்பு அடிக்கப்பட்டது. பொதுவாக எங்க ஊருல, ஒருத்தனுக்கு உள்ளூருல பொண்ணு கிடைக்கலன்னா, ஏதோ தெய்வ குத்தமாதிரி பேச ஆரம்பிச்சுடுவானுங்க, இது அக்மார்க், எங்க ஊருக்காரியான எங்கமாவுக்கும் பொருந்தும். வெளியூரில் இருந்து ஒரு பொண்ணு வந்தா, நமக்கு சொல்லுறதுக்கு முன்னாடியே, பொண்ணு வீட்டுக்கு முடியாதுன்னு சொல்லிவிடுவார்கள்.

ஆனா மற்ற இரண்டு ஆப்சன்களை நான் விட்டுக் கொடுப்பதாக இல்லை. அதிகமா போச்சுன்னா பெண்ணுக்கும், எனக்கும் 4 வருச இடைவெளிதான் இருக்கவேண்டும் என்று கண்டிப்பாக இருந்தேன். அது எங்க ஊரு மற்ற மணவான்களால் மண்ணல்லிப் போடப்பட்டது. எவனும் பொண்ணு காலேஜ் முடிந்தபின்னாடி கல்யாணம் பண்ணிக்கலாமுன்னு நினைக்கிறது இல்லை. கல்யாணம் முடிந்த பின்பு, காலேஜிக்கு அனுப்பிவைத்து அழகு பார்கிறார்கள். சில பேரு கொஞ்சம் இதிலும் பாஸ்ட், பொண்ணுங்க +2 படித்துக்கொண்டிருக்கும் போதே கல்யாண சாப்படு போட்டுவிடுவார்கள். நான் தேடி, தேடி அலைந்து அலுத்துப் போயி, 4 வருட இடைவெளி, 5 ஆகி, 6 ஆகி ..... ஒரு கட்டத்தில் பொண்ணு கிடச்சா போதுங்குற நிலமைக்கு வந்திட்டேன்.

பொண்ணு தேடி அலையும் போது நண்பர்கள் செய்யும் உதவிய மட்டும் மறந்திடவே முடியாது, முடியாது இல்ல கூடாது. அதுவும் ஊருல 5 வருசமா டாப்படிக்கும் நண்பர்களிடம், பாய்ஸ் படத்தில் வரும் செந்திலிடம் இருக்கும் டேட்டா பேஸ் மாதிரி பொண்ணுங்க இருக்கிற வீடு பத்தி, அவங்க குலம், கோத்திரம் பற்றிய ஒரு டேட்டா பேஸ் இருக்கும். அவங்களோட அந்த இன்பர்மேசன் இஸ் வெல்த். அவங்களிடம் நம்முடைய எதிர்பார்பை சொல்லிவிடவேண்டும், சொன்ன சில மணி நேரத்திலேயே ஒரு 10 வீட்டு பொண்ணுங்களைப் பற்றி சொல்லிவிடுவார்கள். அதுல நாம நல்ல குடும்பமா தேர்வு செய்து, பொண்ண பார்க்கலாமுன்னு முடிவு பண்ணி அவங்ககிட்ட சொன்னமுன்னா, அவங்க கூட்டிக்கிட்டு போற இடம் ஏதாவது, ஸ்கூல் முன்னாடி இருக்கும். மண்ட காய்ஞ்சிடும் எனக்கு,

“என்னடா........ இது எனக்கு வயசு 29, அந்த பொண்ணு +2 ன்னா, அவ வயசு 18, 11 வருச வித்தியாசமா??...... முடியாவே, முடியாது

“டேய் நீ சொன்ன கண்டிசனுக்கு, ஒத்துவருகின்ற பொண்ணுல அதிக வயசு இந்த பொண்ணுக்குத்தான், இவ வேணாமுன்னா அடுத்து நாம எலிமண்ரி ஸ்கூலுக்குத்தான் போகனும், பேசாம உன் கொள்கையை கொண்டு குப்பையில போட்டுவிட்டு உங்க அக்கா சொல்லுற உன் மாமி பொண்ணு பெனாசிரையே கட்டிக்க....

மூடிக் கிடந்த என் அறிவுக் கண்ண என் நண்பன் அன்னைக்கு திறந்து வச்சான். அதுக்கபுறம் இந்த பெண்ண பார்க்கும் போதெல்லாம், பட்டாம் பூச்சி பறக்கும், விளக்கு எறியும், வேதியல் மாற்றங்கள் நிகழும், காதுல மணி சத்தம் கேட்கும், ரேடியோவில் லவ் சாங்க் ஒலிக்கும்..................

முதல் பக்கம்
கவர் பேஜ்

கடைசிப் பக்கம்
திருமணத்திற்கு பொண்ணு கிடைக்கின்றது எவ்வளவு கஷ்டமோ அந்த அளவிற்கு கஷ்டம் கல்யாண பத்திரிக்கை அடிப்பது. கலர் செலக்ட் பண்ணுறதுல இருந்து, கார்டுக்கு டெக்ஸ்ட் (எழுத்து) செலக்ட் பண்ணுறவரைக்கும் நாக்குத்தள்ளிரும். நண்பர்கள் பல பேரின் திருமண அழைப்பிதலை, ஸ்கேன் செய்து அனுப்ப சொல்லி எதுவும் பிடிக்காத்தால், இன்னொரு நண்பனிடம், அவனுக்கு பிடித்த பத்து கார்டுகளை அனுப்ப சொல்லி, அதிலிருந்து ஒன்றை செலக்ட் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

லெட்டருக்கான விசயங்களை இங்கிருந்து அனுப்பி, பெங்களூரில் பிரிண்ட் செய்வதற்கு முன்பான டிராப்ட் காபியில் ஒரு 10 முறை கரெக்சன் செய்து முடிப்பதற்கு இரண்டு வாரங்களாகிவிட்டது.

நான் வேறு, அந்த பொண்ணு வேறு கிடையாது, ஆகையால் என் பெயர் எவ்வளவு பெரியதாக இருக்கிறதோ அதே அளவில் அவள் பெயரும் இருக்கவேண்டும். எழுத்து ஸ்டைலில் கூட எங்களுக்கிடையே வித்தியாசம் வந்துவிடக்கூடாது, ஆகையால் என்ன மாதிரியான பாண்ட் ஸ்டைல் எனக்கு யூஸ் பண்ணுகின்றாயோ, அதே மாதிரியான பாண்ட் ஸ்டைலில் பெண்ணுடைய பெயரையும் போடு........................., இப்படியா என்னமோ உருகி, உருகி காதல் செய்தவன் கல்யாணம் செய்வது போல, அத்தனை கரெக்சன்ஸ்.

எனக்கு எப்படி பொண்ணு கிடைத்தது என்பது மட்டும் பிரிண்டிங்க் பிரஸ்காரனுக்கு தெரிந்திருந்தால், கடுப்புல,  “உனக்கெல்லாம் எதுக்குடா கார்டு, பேசாம எல்லோருக்கும் கைல எழுதி கொடுன்னு கண்ணா பிண்ணான்னு திட்டியிருப்பான்".
நடுப்பக்கம்
பிரிண்ட் ஆகி துபைக்கு வர, மங்களகரமான வெள்ளிக் கிழமையில் இருந்து சொந்தக்காரர், தெரிந்தவர், அறிந்தவர், நண்பர், நண்பரின் நண்பர், நலம் விரும்பி என பார்த்து பார்த்து திருமணத்திற்கு அழைப்பு விடுத்துக்கொண்டிருக்கின்றேன். எவ்வளவு தான் நெருக்கமாக பழகியிருந்தாலும், திருமணத்திற்கு அழைக்கும் போது ஒரு வெக்கம் வருது பாருங்க...........காலேஜ் ஹாஸ்டல்ல ஜட்டியோட ஓடுன போதுகூட நமக்கு வராத வெக்கம், நாம வெக்கப் படுவதை பார்த்து நம்மள நண்பர்கள் கட்டய கொடுக்கும் போது வழியிர வழியிருக்கே.........அதெல்லாம் நினைச்சுப் பார்த்தா, கூச்சத்துல மிச்சமிருக்கும் சிலருக்கு அழைப்பிதல் கொடுக்குறதுக்கே சங்கூச்சமா இருக்கு.

பிப்பிரவரி 19ல் நடைபெறவிருக்கும் கலயாணத்திற்காக ஆண்டவனி நாட்டப்படி, இங்கிருந்து (யு.ஏ.ஈ) பிப்பிரவரி 09ம் தேதி கிளம்பவிருக்கின்றேன். அனைவரையும் முடிந்தவரை நேரில் அழைக்க கடமைப்பட்டவனாக இருக்கின்றேன், ஆனால் திருமண வேலைகளில் காரணமாக சிலரை நேரில் அழைக்க இயலாவிட்டால், அவர்கள் இந்த அழைப்பினை என்னுடைய நேரடி அழைப்பாக கருதி ஏற்றுக்கொண்டு என் திருமணத்திற்கு வந்து எங்களை வாழ்த்துமாரு எனது சார்பாகவும், என்னவளின் சார்பாகவும் வேண்டிக்கொள்கின்றேன்.
.

.

.

அவள் என் முதல் மகளாக, நான் அவளின் முதல் மகனாக இருந்து என் வாழ்க்கையை ஆரம்பிக்க எல்லாம் வல்ல ஆண்டவனிடம் பிராத்தனை செய்தவனாக,

-----------------------------------------------------------------------------------யாஸிர்

6 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. @பிரியா,

      வாழ்த்தியமைக்கு நன்றி, வருகையை எதிர்நோக்கி....

      நீக்கு
  2. சலாம்......

    மணவாழ்வு சிறக்க இறைவன் துணைபுரிவானாக....வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ ஹாஜா மைதீன்,

      தங்களின் வாழ்த்துக்கு நன்றிகள் பல,

      நீக்கு
  3. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

    அன்பின் முஹ‌ம்ம‌து யாசிர் அர‌பாத்‍‍ & பெனாசிர் ‍

    தாங்க‌ள் இருவ‌ரும் இணைந்த‌ மண‌வாழ்வு எல்லாவ‌ல்ல‌ இறைவ‌ன் அருளால் ச‌ர்வ‌ பாக்கிய‌ங்களும் அமைந்ததாக‌ இருக்க‌ட்டும்.

    ஆமீன். ஆமீன். ஆமீன்.


    வாஞ்சையுடன் வாஞ்ஜூர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @வாஞ்ஜூர்,

      வாழ்த்தியமைக்கு நன்றி பாராட்டி மகிழ்கின்றேன்.

      நீக்கு