ஞாயிறு, நவம்பர் 20, 2011

ஏ ஜோக்


நம் அனைவரின் மீதும் ஆண்டவனின் சாந்தியும், சமாதானமமும் உண்டாவுவதாக.


ஒரு சர்தார்ஜி 50 பேரை காரை ஏற்றி கொன்ற வழக்கில் பிடிபட்டு, வழக்கு விசாரணைக்கு வந்தது

நீதிபதி : எப்படி ஆக்ஸிடண்ட் ஆச்சு?

சர்தார் : ஒரே இருட்டு, நான் 80 கி.மீட்டர் வேகத்தில் வந்த போது தான் எனக்கு தெரிந்தது, என் காரில் பிரேக் பிடிக்கவில்லை நான் எவ்வளவோ முயற்சி செய்தும், வண்டிய என்னால நிறுத்த முடியல.

நீதிபதி : அப்புறம்?

சர்தார் : எனக்கு எதிர்த்தாப்புல ரோட்டுல ஒரு பக்கம், 2 பேர் நடந்து போனதையும், மற்றொருபுறம் ஒரு கல்யாண ஊர்வலத்தையும் பார்த்தேன். நீங்களே சொல்லுங்க நீதிபதி ஐயா, நான் என்ன செய்திருக்கனும்?

நீதிபதி : கண்டிப்பா குறைந்த உயிர் சேதத்துக்காக அந்த 2 பேர் மேலதான் மோதியிருக்கனும்.

சர்தார் : அப்படித்தான் சாமி நானு நெனச்சு செஞ்சேன்.

நீதிபதி : !?!?!?!?!?!?!?!?! அப்படினா, வெரும் 2 பேருதான செத்திருக்கனும், எப்படி 50 பேரு செத்தானுங்க?

சர்தார் : அப்படி கேளுங்க எசமான், நான் அந்த 2 பேருமேல மோதினபோது, ஒருத்தன் மட்டும் தப்பி அந்த கல்யாண ஊர்வலத்துக்குள்ள ஓடிட்டான். அதுல தான் அப்படி ஆயிடுச்சு.

நீதிபதி : ????????????!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
.
.
.
.
.

நான் நல்ல குடும்பத்துல பிறந்த பையன், “ஒரு நகைச்சுவை என்பதைத் தான் ஆங்கிலத்தில் தலைப்பாக போட்டுள்ளேன். அந்த மாதிரியான தப்பான நினைப்போடு வந்திருந்தால், நிர்வாகம் பொருபல்ல.

----------------------------------------------------------------------நல்ல பையன் – யாஸிர்.

2 கருத்துகள்: