திங்கள், நவம்பர் 28, 2011

துப்புக்கெட்ட துரைமுருகன்....

நம் அனைவரின் மீதும் ஆண்டவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவுவதாக.


தி.மு.கவின் தெனாலி ராமன் என்றால் அனைவருக்கும் அறியப்படும் நபர் தான் திரு துரைமுருகன். கடந்த தி.மு.க ஆட்சியில் பல துறைகளுக்கு மாற்றப்பட்டு அசிங்கப்படுத்தியும், அசராமல் சிரித்தமுகத்துடன் துடைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தவர் இவர். கிண்டல் பேச்சு, நக்கல், நையாண்டிகள் இவரின் கைவந்த கலை. தி.மு.க, காங்கிரஸுடனான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சிவார்த்தையில் இவர் அள்ளிப்போட்ட ஒரு வார்த்தைக்காகவே, கேட்ட 63 தொகுதியையும் கொடுத்துவிட்டு, தேமேன்னு முழுச்சிக்கிட்டு நின்னது தி.மு.க.


அவர் ஒன்னும் பெருசா சொல்லிரல, காங்கிரஸ் 90 சீட்டு கேட்டவுடன், இவர் சொன்னது “சரி கொடுக்குறதுல ஒன்னும் பிரட்சனையில்லை, அவ்வளவு தொகுதியில நிக்கிறதுக்கு உங்க்கிட்ட ஆளு இருக்க்கா?. பொதுவா தி.மு.கவில் பிரபலமாகனும்னா, ஒன்னு அவர் சிறந்த பேச்சளராக இருக்கவேண்டும் இல்லனா ஒரு போராட்ட்த்தில் அதிகளவில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவராக இருக்கவேண்டும். ஆனால் துரைமுருகன் அது போல எந்த ஒரு செயலையும் செய்யாமல் கழகத்தின் முக்கிய அந்தஸ்தை பெறக் காரணம் ஜெயலலிதா மட்டுமே. என்னடா அப்துல் காதருக்கும், அம்மாவசைக்கும் முடிச்சி போடுறன்னு நினைக்காதீங்க.

எம்.ஜி.ஆர் மறைந்த பின்பு ஏற்பட்ட, தி.மு.க ஆட்சியில் இருந்தபோது, சட்டசபையில், ஜெயலாலிதாவின் சேலையை உருவி, ஜாக்கெட்டை கிழித்து தன்னை அதிகளவில் பிரபலப்படுத்திக் கொண்டவர் இவர். இப்போ சொல்லுங்க ஜெயலலிதா எவ்வளவு நல்லது செஞ்சிருக்காங்க. எங்க அமைச்சர் பதவி கொடுக்கலன்னா, நம்ம வேஷ்டிய உருவிருவானோன்னு பய்ந்துதான் கருணாநிதியும் அமைச்சர் பதவியெல்லாம் கொடுத்து அழகு பார்த்திருப்பார் போல.

இந்த வார ஆனந்தவிகடனில் “செவன் ஹில்.... கேப்டன் தில் னு ஒரு பக்கம், அதில் பிரபலமான 5 பேர்களிடத்தில், 6 கேள்வி கேட்டு அதற்கு அவர்கள் பதில் சொல்லக்கூடியது மாதிரியான ஒரு நிகழ்சியின் கட்டுரை. நான் விகடனின் இணையதளத்தில் உறிப்பினராக இணைந்திருக்கின்றேன். என்னதான் சொல்லுங்க புத்தகமா படிக்கிறதுல இருக்குற சுகம், கணினியில பார்த்து படிக்கிறதுல வராது. அதனால முக்கியமான கட்டுரைகள் மட்டும் படிப்பதுண்டு. இந்த வார 5 பிரபலங்களில் நம்ம துரைமுருகனும் ஒருவர், விஷால், திபக் (சின்னத்திரை நடிகர்), தாப்ஸி, ஜோஸ்னா சின்னப்பா (ஸ்குவாஷ் வீராங்கனை) மற்றவர்கள்.

இதில் துரைமுருகன், ஜோஸ்னா தவிர மற்றவர்கள் அனைவரும் திரைத்துறை சம்பந்தமானவர்கள். பொதுவா எனக்கு இவனுங்க அரசியல் பற்றி பேசினா நான் விரும்புவது இல்லை, எதுவும் தெரியாது என்பதை விட தெரிந்துகொள்ள விரும்பாதவர்கள் என்பது என்னுடய அபிப்பிராயம். இந்த பக்கத்தை நான் வார வாரம் படித்து நம்முடய அறிவு எப்படியிருக்குன்னு தெரிஞ்சிக்கிறதுண்டு (குறைந்த்து 5 க்கு 2 வது கரெக்டா இருக்கும்).

மற்ற நாலு பேரைவிட கண்டிப்பாக உள்ளூரில் இருந்து உலக விசயங்களில் அறிவு பெற்றிருக்கவேண்டும் ஒரு அரசியல்வாதியான துரைமுருகன். ஆனால் நடந்தது வேறு. இவருடன் ஒப்பிடும் போது, சினிமாகாரர்கள் பரவாயில்லை என்றாகிவிட்ட்து எனக்கு.
இப்பதான் உடற்பயிற்சி முடித்துவிட்டு வருகின்றேன், ரொம்ப பிரஷ்ஷா இருக்கேன், கேள்விய கேளுங்கன்னு அவர் சொன்னவுடனே கண்டிப்பா எல்லாத்துக்கும் கரெக்டா சொல்லப்போராருன்னு நம்பி படிக்க ஆரம்பித்தேன்

கேள்வி 1 : ஐஸ்வர்யா ராய்க்கு பிரசவமான மருத்துவமனையின் பெயர் என்ன (செவர் ஹில்ஸ்)
அதுக்கு இவரோட பதில், சினிமாவபத்தி எங்கிட்ட கேட்டா எப்படி அதில் நான் பெயில் தான். அடுத்த கேள்வி கேளுங்கன்னு சொல்ல. படித்த எனக்கு அதுவும் சரிதான், சினிமாவுக்கும் இவருக்கும் என்ன சம்பந்தமுன்னு எனக்கு நனே ஆருதல் படுத்திக்கொண்டேன்.

கேள்வி 2 : 10 வகுப்பு தேர்வில் ஆள்மாராட்டம் செய்த புதுவை அமைச்சர் பெயர் என்ன (கல்யாண சுந்தரம்)
அட அமா நானும் கேள்விப்பட்டேன், ''ஏதோ கல்யாணம்னு வரும். என்ன கல்யாணம்?''.(ம்ம்ம் அறுபதாங் கல்யாணம்) இந்த பதிலைக் கேட்டு எனக்கு வந்ததே கோபம். பரதேசிக்கு அரசியல்வாதியா இருந்துகிட்டு இதுக்கு கூட பதில் தெரியல,இந்த பதில்ல என்ன கொஞ்சம் சுரண்டி பார்துட்டார்.

கேள்வி 3 : '7ஆம் அறிவுபடத்தில் வில்லன் பெயர் என்ன? (டாங்க்லீ)
''வெளிநாட்டுக்காரத் தம்பி ஒருத்தரு ரொம்ப நல்லா நடிச்சிருந்தாரு. அவரு பேரு என்னனு விசாரிக்காம விட்டுட்டேன்!'' மன்னிச்சிட்டேன் ஏன்னா இது சினிமா சம்பத்தப்ப்ட்ட்து என்பதால்.
கேள்வி 4 : சசிகலா குடும்பத்தில் எத்தனை 'கரன்கள் இருக்கிறார்கள்... அவர்கள் பெயர் என்ன? (திவா'கரன்’, தின'கரன்’, பாஸ்'கரன்’, சுதா'கரன்)
''இதை எதுக்கு என்கிட்ட கேக்கு றீங்க... அவங்க வீட்ல எத்தனை கரன் இருக்காங் கனு கணக்கு எடுக்குறதுதான் என் வேலையா?''. மற்றவர்கள் பெயர் தெரியலனா கூட பரவாயில்லை, வளர்ப்பு மகன் சுதாகர் பெயர், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தினகரன் பேரு கூட தெரியவில்லை இவனுக்கு. (மரியாத என்னவேண்டிகிடக்கு)

கேள்வி 5 : சமீபத்தில் திவால் ஆகும் நிலைக்கு வந்ததாகப் பரபரப்புக் கிளம்பிய தனியார் விமான நிறுவனம் எது? அதன் உரிமையாளர் யார்? (கிங்ஃபிஷர் - விஜய் மல்லையா)
''இப்போதான் ஏதோ ஒரு கம்பெனியை மூடின தாச் சொன்னாங்க. என்ன கம்பெனினு பேரு தெரியல!''. ஒரு சின்னபிள்ளையை கேட்டா கூட சொல்லிரும் இந்த கேள்விக்கான பதிலை. இதிலிருத்து தான் தெரியுது இவர் சன் நியூஸ் கூட பார்பதில்லை என்று. (இவங்களுக்கு தேர்தலுக்கு காசு கொடுத்திருந்தா தெரிஞ்சிருக்கும்)

கேள்வி 6 : சமீபத்தில், சினிமா பாணியில் காவல் நிலையத்துக்குச் சென்று, தன் கட்சித் தொண்டர் களை மீட்டு வந்த அரசியல்வாதி யார்? (மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி!)
''இந்த செந்தமிழனும் வளர்மதியும்தான் ஸ்டேஷனுக்குப் போய் யாரையோ கூட்டிட்டு வந்ததாக் கேள்விப்பட்டேன்!''. மற்ற கேள்விக்கு சொன்ன பதிலையாவது நான் மன்னிச்சிருவேன், ஆனா இந்த கேள்விக்கு கூட இவருக்கு பதில் தெரியலையேன்னு நினைக்கும் போது, இவனெல்லாம் நம்மள 5 வருசமா ஆண்டிருக்கானேன்னு வெக்கப்படவேண்டியிருக்கு ச்சே.
2,3,5,6 வது கேள்விகளுக்கு எனக்கே பதில் தெரிஞ்சிருக்கு, 4வது கேள்விக்கு சுதாகரன், தினகரன் பேர்கள் தெரிந்திருந்த்து.
என்னத்தசொல்ல, சொன்னா ஏதாவது ஆகப்போகிறதா என்ன, இல்ல 2016-2021ல் இவர் உயிருடன் இருந்தா கொடுக்கப் போகும் அமைச்சர் பதவி, கொடுக்கப்படாமல் இருக்கப் போகிறதா என்னா?
இதயெல்லாம் யாராவது இவர்கிட்ட கேட்டா என்ன சொல்லுவாரு?
.
.
.
.
ஹி, ஹி, ஹி அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.......
ஏதோ கருகின வாசனைவருதா?, ஒன்னுமில்லை
என்வயிரு எறியுது
-----------------------------------------------------------------------------------யாஸிர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக