செவ்வாய், ஜூலை 26, 2011

என்ன தெரியும் அவர்களுக்கும், இவர்களுக்கும்


Standing applaud for Ajith’s Speech by Rajnikanth in Pasathalaivarukku Parattu Vizha
வணக்கம், ஆண்டவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாவுவதாக.

நடிகர் விஜய் இராஜபக்சேக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவக கையெழுத்து போடாததற்கு விடுதலைச்சிருத்தைக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளதாக ஒரு தகவல் படிக்கக் கண்டேன். என்ன மடத்தனமான ஒரு விஷயம், இவர்களுக்கு முதலமைச்சரிடமோ, அல்லது தமிழகத்தில் இருக்கும் எம்.எல்.ஏவிடமோ வாங்க துப்பில்லை, பாவம் இலங்கையை மேப்பில் மாட்டுமே பார்த்து பழகிய ஒன்றும் தெரியாத நடிகர்களின் கையெழுத்தை வைத்து என்ன செய்துவிடப்போகிறார்கள் என்றே தெரியவில்லை. இந்த இயக்கத்த்தின் தலைவர் திரு தொல். திருமாவளவன் இலங்கை சென்றிருந்தபோது அந்த ராஜபக்சேவிடம் ஒரு கேள்வி கேட்கவே துப்பில்லாமல், அவர் கொடுத்த ப்ரியாணியை ஒரு கட்டு கட்டிவிட்டு, தமிழகம் வந்ததும், சிங்களர்கள் சரியில்லை, அந்த பிரதமர் அப்படி இழக்காரமாக பேசுகிரார் இப்படி அசிங்கப்ப்டுத்திப் பேசுகிரார் என்று தன் வீரத்தை காட்டியவர். சரி நீஙகள் அப்பொது அந்த சந்திப்பினை கண்டித்து வெளிநடப்பு ஏன் செய்யவில்லை என்று கேட்டால், என் நாட்டு பெயரை காப்பற்றவே அவ்வாரு செய்யவில்லையாம். என்ன ஒரு பச்சோந்தி தனம்.

இவரைப் பற்றி ஒரு முகப்புபுத்தகம் (FACEBOOK) விமர்சன்ம் நான் படித்தது, "நல்ல வேளை இவர் கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றி பெரவில்லை, இல்லயென்றAல் பல கோணங்கலில் இவர் போஸ் கொடுக்கும் ப்பளக்ஸ்கள் சென்னை சாலையை நிரப்பிருக்கும்". ஆக இவர்களின் வீரம் என்பது வெரும் ப்பளக்ஸில் மட்டும் தான். தன் கூட்டணிக் கட்சிகளைக் கூட புலிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வைக்க முடியவில்லை இவர்களால்.என்ன செய்ய போகிரார்கள் இந்த கையெழுத்தை மட்டும் வைத்து கொண்டு????. கண்டிப்பாக இந்த மாதிரியான கட்சிகள் அல்லது இயக்கங்கள் நடத்தும் இது போன்ற பேனa மை ஏன் குருதி கையெழுத்து காகிதங்கள் கூட அவர்களின் காக்கூஸில் சுத்தம் செய்யமட்டுமே பயன்படுத்தப்படும். நான் அனைத்து இயக்கங்களையும் சொல்லவில்லை இது போன்ற தனக்கு ஒரு கொள்கை, மக்களுக்கு ஒரு கொள்கைனு இருக்கிரவர்களை மட்டும் தான்.

சரி இதுபோன்ற முதுகெலும்பில்லாதவர்கள் ஏன் மீண்டும், மீண்டும், சினிமா பிரபலங்களையே தொந்தரவு செய்ய வேன்டும், ஏனில் அவர் போன்றவர்களால் தான் மக்களின் கவணத்தை ஈர்க்க முடியும், மேலும் முக்கியமனது தங்களின் எதிர்ப்பை அவர்களிடம் உடனடியாக காட்டிவிடமுடியும், சூட்ட்ங் நடத்தும் இடத்திற்கு போய் ரகளை செய்வது, இலலனா திரைப்பட்த்தை எதிர்ப்பது போன்றவை. உதாரணத்திற்கு ரஜினியின் பாபா படம், அது என்னமோ ப.ம.க எதிர்ததால் தான் ஓடவில்லை என்று, ஆனால் ப.ம.க ஆதரித்தால் கூட அது ஓடியிருக்காது என்பது நம்மில் பலருக்கும் தெரியும். எதாவது ஒரு எதிர்ப்பை பதிவு செய்யனும்னா உட்னே நடிகர், நடிகைகளை கூப்பிடு.... என்ன இது, கஜால் அகர்வாலுக்கு, காவிரி பிரச்சனை என்னனு தெரியும், இல்ல இலியானாவுக்கு இலங்கை பிரச்சனை பற்றி என்ன தெரியும்????. சரி போராட்டத்துக்கு போகுரதுக்கு எதுக்குயா மேக்கப்பு, ஏதோ பாஷன் சோவுக்கு வர்ரமாதிரி உடைவேர. கூப்பிட்டவனுக்கு அவங்க எப்படி வரனும்னு கூடவா சொல்லதெரியல?.

என்னைக்காவது நமிதாகிட்ட மைக்க கொடுக்க போறானுங்க, அது, காவ்ரி தண்ணிக்கு மக்கல் சாவ்து, வெல்ல பில்லை பிரபாகரன் மச்சான் அதுக்கு போர்ராடுத்துன்னு சொல்ல போகுது அதோட இவங்க ஆட்டம்முடியுது.

இதுக்கு காரணமா இந்த மாதிரியான அரசியல்வாதிகளை மட்டும் சொல்ல முடியாது, முக்கிய காரணமே மக்கள் தான் (நாம தான்). அஜித்குமரா படத்துல ரசிக்கிரொதோட விடாம, தினசரி வழ்க்கையெலும் ரசிக்க ஆரம்பிசிடுரான். 50 ரூபா டிக்கெட் கொடுத்து 50 கோடி படத்த மக்களுக்கு இனி அந்த நடிகர் அடிமைய்னு அரசியல்வாதி அதவெச்சு அரசியல் பண்ன ஆரம்பிச்சுக்குரான். கேரளவில அந்த மக்கள் ரொம்ப தெளிவா இருக்கான், இதனலத்தான் அங்க அரசியலும் நல்லா இருக்கு, படங்களும் நல்லா இருக்கு. அங்க எந்த நடிகனும் எந்த கட்சிக்கும் ஓட்டுபோட சொல்லமாட்டான், அதேநேரத்துல எந்த கட்சியும் ஒரு நடிகனோட வீட்டுல போய் திக்காது, ஏன்ன அவனுக்கு தெரியும் இவன் சொன்னான்னா விழுர ஓட்டும் விழாதுன்னு. நம்ம மட்டும் தான் ஒரு மணிநேரம் பேசினா 60 நிமிசம் சினிமாபற்றியே பேசி தொலைக்கிரோம். தமிழ் நாட்டு முதல்வர் யாருன்னு கேட்டா, மன்மோகன் சிங்குன்னு கரெக்டா சொல்லுறது நம்மாலுங்க தான், அதயும் மீறி ஜெயலலிதானு சொன்னா எப்போ மாத்தினaனுங்கனு கோபம் வேரு (மாற்றும்போது இவர்ட கேக்கலனு).

அப்புறம், நடிகர்கலின் அரசியல் சார்புத்தன்மை, ஆளும்கட்சிக்கு ஆதரவ இருக்கலாம், ஆன ஆளுங்கட்சிக்கு ஜால்ராவா இருக்குறது தான். முதல்வர் படுத்தா பாராட்டு விழா, நடந்தா நன்றி விழா...... இப்படி எடுத்தா, பிறகு கேணய கூட உங்கல வச்சு கேரம்போர்டு விளையாடத்தான் செய்வான். தெலுங்கான விவகaரத்துல்ல கூட மக்கள் அவங்களா தான் போரடுராங்கலே ஓழிய எந்த நடிகனிடமும் கைகெட்டி நிக்கல, ஆனா அது மட்டும் நம்ம் மாநிலத்துல்ல நடந்திருக்கட்டும், ரஜினி உணணாவிரதம் இருக்கனும், கமல் ஆதரவா அறிக்க விடனும், பிறகு எல்ல நடிகர், நடிகைகளும் கைகோர்த்து மனித சங்கிலி அமைக்கனும்னு அல்லோலப்பட்டிருக்கும். கேரளaவில் நடிகர் சங்கம் முதல்வருக்கு எதிரா அறிக்கை விட்டு கமலஹாசனின் விருது விழாவையே புரக்க்கணித்தது, ஒரு நடிகரும் செல்லவில்லை அவ்வள்வு ஒற்றுமை, எனக்கு தெரிந்து உலகத்திலயே ஒரு நடிகனுக்கு சக கலைஞர்கள் ஒருவரும் இல்லாமல் வெரும் அரசியல்வாதிகள் மட்டுமே எடுத்த பாராட்டு விழான்னா அது அந்த விழாவாகத்தான் இருக்கும்.இதுமாதிரி ஒன்னு இங்க நடந்தா, அறிக்க விட்டவன் நடக்கமுடியாது!!!!.


எதோ வி.சி, ப.ம.க போன்ற கட்சிகளின் தோல்வியால், மக்கள் ஜாதி கட்சிகளை புரக்கணித்துவிட்டார்கள் என்று சொல்லுவதெல்லாம் சும்மா. வேண்டும் என்றால் இந்த முறை இந்த கட்சிகளை புரக்கணித்திருக்கலாம் ஆனால் ஜாதியை மட்டும் புரக்கணிக்கவில்லை. ஆம் ஒரு கட்சியின் செட்டியார் தோற்று இன்னொரு கட்சியின் செட்டியார் வெற்றி பெற்றார், அதுபோலதான் தேவர், பள்ளர், கோனார், அய்ய்ர்....... 

திங்கள், ஜூலை 25, 2011

சுயநலம்.

வணக்கம், ஆண்டவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாவுவதாக,

"சுயநலம்".பொதுவாக இந்த வார்த்தையை நாமோ, இல்ல நம்ம நண்பர்களோ அதிகம் பிறரைப்பார்த்து உபயோகிப்பதுண்டு, ஆனால் எந்த நேரத்திலும் நாம் நம்முடைய சுயந்லனைப்பற்றி பேசியதோ ஏன் யோசித்திருப்பதோ இல்லை. பகட்டுக்கு வேண்டுமென்றால் நான் அந்தமாதிரி இல்லைனு சொல்லிக்கொள்ளலமே ஒழிய உண்மையிலேயே அப்படி இருக்காது. 

ஒரு தவறு செய்துவிட்டு பின் அதில் மாட்டிக்கொண்டு முழிக்கும் போதும் நாம் நம்மை காப்பாற்ற மீண்டும் மீண்டும் பொய் சொல்லுவது கூட ஒரு சுயநலம்தான், ஆம் நான் தான், நான் மட்டும்தான் யோக்கியன் என்ற சுயநலம். என் பள்ளிப் பருவத்தில் என் நண்பனிடம் ஒரு புது பேனவை காண்பித்து பார்தியா இது ரொம்ப புதுசு, ஆனா வெரும் 3 ரூபை தானு சொல்லிவிட்டேன், ஆனால் அதின் உண்மையான விலை 8 ரூ மேல். இதை ரொம்ப பெருமையாக அனைவரிடமும் (பொய்) சொல்லி, சொல்லி ஆனந்தம் பேரானந்தம். அதில் மட்டும் ஒரு நண்பன் திடீர்னு பைல கைவிட்டு 3 ரூ எடுத்து நாளைக்கு எனக்கு ஒன்னு வாங்கி வானு சொல்லிட்டான், ஆனால் அதின் உண்மையான விலை 8 ரூ மேல். இதை ரொம்ப பெருமையாக அனைவரிடமும் (பொய்) சொல்லி, சொல்லி ஆனந்தம் பேரானந்தம். அதில் மட்டும் ஒரு நண்பன் திடீர்னு பைல கைவிட்டு 3 ரூ எடுத்து நாளைக்கு எனக்கு ஒன்னு வாங்கி வானு சொல்லிட்டான், அவ சொன்னதுதான் தாமதம் கண்னுலாம் இருட்டிடுச்சு, கை, காலு எல்லாம் ஒரே பொசிசன்ல நின்னுரிச்சு. அவனிடம் வாக்கு கொடுத்தா நம்ம கைல இருந்து 5 ரூவா போயிடுமே, என்னை நான் காப்பத்திக்க அவனிடம் சொன்ன பொய் என் வாழ்க்கையில என் அப்பாகிட்ட கூட சொன்னது இல்ல, அந்த கடை ரொம்ப தூரம், கடகாரன் அப்பா செத்துட்டான் 10 நாள் கடைக்கு லீவு, இப்படி பல கிலோ பைட்ல ஆரம்பிச்சு, மெகா, ஜிகா, டெகா பைட் அளவுக்கு பொய் சொல்லி அவனிடம் தப்பிக்கிரதுக்குள்ள உயிர் போய் உயிர் வந்திடுச்சு. அதன் பிறகு கொஞ்ச நாளைக்கு அவன பார்த்தா அய்யா 10 ச்டெப் பேக்.

தான் என்று சுயநலமா ஒருத்தன் இருக்கிரன்னா கண்டிப்பா அவன் ரொம்ம்ப பொய் சொல்லவேன்டியிருக்கனும். ஆக பொயின் பிறப்பிடம் அதுதாங்க அப்பன், ஆத்தா சுயந்லமகத்தான் இருக்கவேண்டும். ஒருவகைலனு சொல்லுரதே தவறு, பல வகைல நாமும் சுயந்லத்துடன் தான் இருக்கிரோம். நம்மல்ல பல பேர் பாத்திரிக்கை படிக்கும் போது பல செய்திகள் பார்க்கல்லாம், ஒரு சின்ன சண்டை ஒரு கொலைல முடிந்தது என்று, ஆன அது நேற்று அந்த இடத்தில் அது சின்ன சண்டயா இருக்கும் போதே நாம பர்த்துக்க்கொண்டு இருந்திருப்போம்

அத தடுக்காம நம்ம பிகரு வெய்ட்டு பண்ணிக்கிட்டு இருக்கும்னு சுயனலம இருந்துருப்போம் அதன் விலை அல்லது விளைவு ஒரு உயிர்.

இன்ன ஒன்று சுயநலம் டரக்ட்லி புரப்போசனல் டு அவசரம். ஒருவன் ஒரு பேருந்து நிலயத்தில் பஸ்ஸுக்காக காத்திருந்தான் அவனும் நம்ம மாதிரிதான், தானக்கு தான் முதல்ல சீட்டுகிடைக்கனும்னு, அவசர அவசரமா, முன்டியடிச்சு ஜன்னலோர சீட்டுல உட்காந்து 10 கி.மீ போனதுக்கப்புரம், சுரண்டைக்கு 1 டிக்கெட்னு நீட்டுனா, சொங்கி இது செங்கோட்ட போறதுலனு பாதிவலில இறக்கிவிட்டுடாங்க, அதுக்கப்புறம் என்ன 200 ரூக்கு ஆட்டோ புடிச்சு வீட்டுக்கு வந்தாரு. அவனுக்கு நமக்கு பஸ்ஸுல சீட் கிடக்கனும்னுதான் நினச்சான், ஆன எந்த பஸ்ஸுலன்கிரத பாவம் அவசரத்துல பாக்க விட்டுட்டான்.

ஞாயிறு, ஜூலை 24, 2011

முயற்சி திருவிணையாக்கும்

வணக்கம், ஆண்டவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாவுவதாக

பிளாக் ஆரம்பிப்பதற்கு என் அப்பா சொல்லிய ஒரு விஷயத்தை என் முந்தய பதிவின் போது சொல்லி இருந்தேன், இன்று என் அப்பா சொல்லாத ஒன்றை என் முயற்சியால் கண்டுபிடித்துள்ளேன். அது, ஒரு விஷயம் ஆரம்பிகிறது எவ்வளவு கடினமோ அதை விட கடினம் அதை நடத்துவது. 

பிளாகில் எழுதுவதற்காகவாவது அதிக புத்தகம் படிக்க வேண்டும் என்று நினைத்து நேற்று ஒரு புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன், சொன்ன நம்ப மாட்டிங்க முதல் பக்கம் தான் அதக்கூட முழுசா முடிக்கல அப்படி ஒரு தூக்கம். எப்போ தூங்கினம்னே எனக்கு தெரியல னா பாருங்களேன். ஆக புத்தக வார்த்தைகளை மேற்கோள் காட்டி எதுவும் எழுத வாய்ப்பு இல்லை. சரி காலேஜ் ல் நடந்த விஷயத்த எழுதலாம்னா ம்ம்மம்ஹும் அச்சிலேயே ஏத்த முடியாது. அதையும் மீறி பல விஷயங்கள் எனக்குள்ள பீறிக்கிட்டு வருது ஆனா குணா படத்துல சொல்லுற மாதிரி வார்த்த, வார்த்த தான் வரமாட்டேன் என்கிறது. டைப் அடிக்கும் போது வார்த்தை வரலன்னாலு பரவா இல்ல பேப்பர்ல எழுதிவச்சு அடிச்சிடலாம், அனா ஆஆஆஅ டைப் அடிக்கவே வரலன்னா எப்படி?, பல விஷயம்னு டைப் பண்ணினா, பலான விஷயம்னு டைப் ஆகுது, நிவாரணம்னு அடிச்சா நிர்வாணம்னு வருது கணினில பிரச்சனையா?  இல்ல என்கிட்டயானு? முடிவுக்குவரவே இரண்டு டி ஒரு பிஸ்கட் பாக்கெட் காலியாகிடுது. ஒரு முடிவுக்கு வந்து பேபெர்ல எழுதிவச்சு, டைப் அடிக்கிறதுக்கு முன்னாடி பாத்ரூமுக்கு போய்வருவோம்னு போய்விட்டு திரும்பினா, என்னைக்கும் இல்லா மகராசன் ஆபீஸ் பாய் அன்னைக்கு தான் என் மேசைய காண்ணாடி மாதிரி தொடசிகிட்டு இருந்தான், அவன் கடமை உணர்சிய கட்டி பொரண்டு  கட்டுபடுத்தி இங்க இருந்த பேப்பேர கேட்டா பே பே நு முழிசிகிட்டே அவன் கைல இருந்த கசிங்கிபோனத என் கைக்கு கைமார்த்திவிட்டான், அந்த முயற்சியும் தோல்வியில் வெற்றிகரமாக முடியவே, இனி நாட்டாம டு பங்காளி, பங்காளி டு நாட்டாம நு முடிவு பண்ணி நேரடிய டைப் பண்ண ஆரம்பிச்சு, பாத்து லைன் போனதுக்கப்புறம், அடுத்த புண்ணியவான் எலெக்ட்ரிக் கரெண்ட கட் பண்ணிட்டான். அக அந்த பத்து லைன் ஸ்வாகா ..........

ஒரு விஷயத்த பற்றி எழுதவேண்டும் என்று நினைத்தவுடனேயே எழுதிவிட வேண்டும், இல்லனா கக்கூஸ் போயி காரியம் நடக்குற சமயத்துல கதவ தட்டுனா, காரியம் முடியாம கைய மட்டும் கழுவிட்டு போகுறமாதிரி ஆகிவிடும் ஒரு நாலு வரிக்கே நாக்கு தள்ளுது எப்படித்தான் நாலாயிரம் பக்க புத்தகம் அடிக்கிரங்கலோவ்வ். காலேஜ் பரீட்சைக்கு படிக்கும் போது, இந்த புக் எழுதுனவ ..................................... (அட ஆமா சென்சாறுதான்  கரெக்டா கண்டுபிடிச்சிட்டீங்க)நு சொன்னதுக்கு அவங்ககிட்ட மன்னிப்பு கேட்குற வாய்ப்பா இத எடுத்துக்கலாம். இந்த கஷ்டத்த எல்லாம் என் நண்பன்ட சொல்லலாமுன்னா அவன் சொல்லுறான், முதல்ல நினக்கனுமாம் அப்புறம் வார்த்தைகள் எல்லாம் வாயில இருந்து கொட்டுமாம். என்வாயில வேற எதாவது வந்திரப்போகுதுன்னு அவன பார்வயாலயே காரிதுப்பி அனுப்பிவிட்டு,மீண்டும் கடைசி சீன்ல வருகிற போலிஸ்ங்க மாதிரி கடமையுணர்ச்சியோடு ஆரம்பித்தது தான் இந்த வெளியீடு.

நாம ஒன்னு நெனச்சா ஆண்டவன் ஒன்னு நெனப்பானு சொல்லுறாங்க, ஆனா இங்க போஸ்ட் பண்ண நான் பத்து விஷயம் நெனச்சேன் ஆனா ஆண்டவன் தடுக்கனும்கிற ஒரே நெனப்பதான் இருந்திருக்கான்.

அது சரி தமிழ் சினிமா மாதிரி நீ போட்டுருக்குற தலைப்புக்கும் போஸ்டுக்கும் என்ன சம்பந்தம்னு கேக்கலாம். சிங்கத்துக்கும், சிங்கம் மார்க் ஊருகாய்க்கும் உள்ள சம்பந்தம் தான்.

இந்த தலைப்பை பற்றி தான் எழுதவேண்டும் என்று நினைத்து டைப் செய்தது, ஆனால்  படித்தது எல்லாம் கேள்வி தாளைப்பார்ததும் மறந்து போகுமே அதுமாதிரி ஆகிடிச்சு. இங்க உள்ள எல்லாத்தையும் இரண்டு முறைக்கு மேல் டைப் செய்தது அந்த தலைப்பைத் தவிர, குறிப்பா முதல்சொன்ன வணக்கம் எண்ணிக்கையில் அடங்காது, இனி என்னால் அந்த வார்த்தையை மட்டும் கிபோர்ட் பார்க்காமல் அடிக்கமுடியும். இருந்தாலும் என் முயற்சி எனக்கு விணையாகாமல் திருவிணயனதாக எடுத்துக்கொண்டு, நம் வழ்க்கையெனும் தோட்டத்தில், துன்பம் என்ற துர்நாற்றம் தூரம்போகட்டும், சந்தோஷம் என்ற சந்தனக்காற்று வீசட்டும் என்று கூறி இந்த பதிவிற்கு முற்று.

வாழிய யாம்,

வாழிய யெம்மொழி பல்லாண்டு.


சனி, ஜூலை 23, 2011

தொடக்கம்

அனைவரின் மீதும் ஆண்டவனின் சந்தியும் சமாதானமும் உண்டாவதாக

நண்பர்கள் சில பேர் பிளாக் வைத்திருந்த போது நாமும் ஏன் முயற்சி செய்து பார்க்ககூடாதுன்னு ஒரு ஆர்வம், எதற்கு ஆரம்பிக்க வேண்டும் என்ற ஒரு சோம்பேறித்தனம் இப்படியாக இருந்த சமயம் தொலைபேசியில் என் அப்பாவுடனான உரையாடலில் என் அப்பா சொன்னது ஒரு புது தொடக்கம் தான் நம்மை நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்று காட்டும் என்ற ஒரு வார்த்தை. சரி அப்பா பேச்சை எப்போதும் கேட்டு (சரி சரி...) வளர்ந்த பய்யன் என்பதால் இந்த பிளாக் ஆரம்பம் எந்த விஷயத்தை கற்று கொடுக்கப்போகிறது என்ற மமதையோடு ஆரம்பிதேன். 

முதல் நாலு பூர்த்தி செய்ய வேண்டிய கட்டங்கள் முடிந்த பின் அடுத்த கேள்விக்கு தயார் ஆனேன். அது தான் "உங்களைப்பற்றி" என்ற ஒரு கேள்வி. என்ன எழுதுவது............ அதை எழுதலாமா, சே, சே, அது மோசம் சரி இதை எழுதலாம் என்று நினைத்தால் அது அதை விட மோசம். இப்படியாக யோசித்து யோசித்து ஒரு வாரங்களுக்குப் பிறகு  நான் என்னைப்பற்றி எழுதியது தான் என் புகைப்படத்துக்கு அருகில் உள்ள தேடிக்கொண்டு  இருக்கிறேன். ஆகா ஒரு வாரம் கழித்து தான் நான் அறிந்து கொண்டேன் எனக்கு என்னைப்பற்றியே தெரியவில்லை என்று. ஆகா எங்க அப்பா சொன்னதுபோல இந்த பிளாக் தொடகத்தினால் எனக்கு தெரிந்தது எனைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என்பது, அதோடு அப்பாக்கள் எல்லோரும் கிரேட் என்றும்.

என் இருக்கைக்கு அருகில் ஒரு எகிப்து நாட்டு நண்பரிடம் நான் ஒரு சமயம் ஒரு கேள்வி கேட்டேன் ஏன் உங்கள் மக்கள் சந்தோசமாக இருக்கும் போது எங்களப்போற்று பாடல்களை முனுமுப்பது இல்லை என்று அதற்கு அவர் சற்றும் யோசிக்காமல் உடனே சொன்னார் உங்களுடைய வாழ்க்கை நிறைய கலை, இசை சம்பத்தப்பட்டது என்று, அட ஆமா இல்லன்னு எனக்கு நானே சொல்லுக்கொண்டு இடத்தை காலி செய்தேன். இதை ஏன் சொல்லுகிறேன் என்றால், நம் சினிமாக்களில் கடந்த ஒரு எட்டு வருடங்களாகதான் அப்பாக்களை கொஞ்சம் frienlya காட்ட தொடங்கினார்கள் அதற்கு முன்பு, அப்பான்னா கைல தடி, மூஞ்சி நிறைய சிடு சிடு, பெரிய மீசை, அவரு சொல்லுவாரு பையன் எதிர்த்து பேசாம கேட்டு நடப்பாரு....... இப்படி காட்டியே நாம அப்பாகள  கெடுத்து வசிட்டனுங்க. அப்பாகள போலிஸ் மாதிரியே பார்த்து பழகிவிட்ட நமக்கு எதாவது கேள்வி கேட்டு பதில் சொல்லும்போது வார்த்த வராம வெறும் காத்து தான் வந்து அடி வாங்கின அனுபவம் பல பல. அப்பா என்ன சொன்னாலும் கேக்கணும் நாங்க எதுவும் பேசகூடதா என்று அம்மா கிட்ட வீரத்தை காமிக்கும் 24 ம் புலிகேசிதான் நாம்.எந்த நேரத்திலும் நாம் என்ன சொன்னோம் அவரு கேக்காம போயிட்டாருன்னு யோசிச்சதே இல்ல (அட  நாம எதுவும் சொல்லாமலேயே அவரு கேக்கலைன்ன எப்படி)


முடிவாக அப்பவ லவ் பண்ணுங்க சார் லைப் நல்ல இருக்கும்....