வெள்ளி, டிசம்பர் 29, 2017

விவேகம் அட்ராசிட்டீஸ்.


இந்த படத்த பாக்குறதுக்கு முன்னாடி நான் அஜித்தின் ‘’தீவிர ரசிகன்’’னா இருந்தேன். இப்ப தீ போயி ‘’விர ரசிகனா’’ இருக்கேன் (எஸ், அந்த பயர் போயிருச்சு). இது பரவாயில்ல, அஞ்சிநேயா, ஜி, ஜனா.....ன்னு ஒரு காலம் இருந்துச்சு. அப்பெல்லாம் தீ, வி, ர என எல்லாம் போயி ‘’கன்’’ மட்டும் இருந்துச்சு. சுப்ரமணிய புரம் சித்தன் மாதிரி ஏதாவது கோவில் திருவிழா காண்ராக்ட் கெடக்காதான்னு தலயில துண்டு போட்டு காத்துக்கிட்டு இருந்தோம். வரலாறுன்னு ஒரு படம் வந்த பின்னாடி மறுபடியும் தீவிர ரசிகனா மீண்டு எழுந்தோம்.
எனக்கு, அஜித்தோட எல்லா படத்தையும் முதல் நாளே பாக்குறது வழக்கம் ஆழ்வார், அசல் பார்த்தபின்னாடி கூட அந்த எண்ணம் மாறல. விவேகம் படம் வருவதற்கு முன்னாடியே படம் ஹாலிவுட் ரேஜ்சுக்கு இருக்கும், தல அப்படி பண்ணியிருக்காரு, இப்படி பிண்ணியிருக்காருன்னு ரொம்ப ஓவரா ஊசுப்புனாய்ங்க. அடுத்து அனிரூத் ‘’சர்வேவா’’ பாடலை ரிலீஸ் பண்ணவுடனே ஒட்டுமொத்த தமிழ்நாடும் ‘’வ்வ்வ்வாவ் வாட்ட சாங்க்’’ன்னு சொல்லுச்சு. ஆனா எனக்கு ‘’**த்தா என்னடா சாங்கு இது’’ன்னு தோனுச்சு, அவ்வளவு இரச்சல். ஆனா அத வெளிய சொன்னா, சுத்தியிருக்குற எஸ்.பி.பி, ஜேசுதாஸ்கள் ‘’போடா, ஞான சூனியம்’’னு சொல்லுவானுங்க, எதுக்கு வம்புன்னு இருந்துட்டேன். அப்பவே முடிவு பண்ணிட்டேன் அஞ்சாநேயாவுக்கு ஒரு டஃப் கொடுக்கப் போறாய்ங்கன்னு.
விவேகம் வந்த முதல் நாள், ரோட்டுல ஒருத்தன நாலு பேரு அடிக்கும் போது, அந்த வழியில போறவ, வாறவ எல்லாம் சைக்கிள நிப்பாட்டிட்டு வந்து அடிச்சிட்டுப் போறமாதிரி சோசியல் மீடியாவுல ஒன்னு கூடிட்டானுங்க. ‘’நான் அஜித் ரசிகன் இல்ல, அஜித்த புடிக்கும் அவ்வளவுதான்’’ அப்படின்னு சொல்லி தப்பிக்கலாம்னு பார்த்தேன். அதெல்லாம் கெடயாது ‘’பச்ச சட்ட போட்ட அடிப்போன்’’னு உறுதி மொழி எடுத்துட்டு வந்து கும்முனானுங்க. பதிலுக்கு நம்ம ஜாதிக்காரனுங்க புளு சட்ட, சாரு நிவேதிதான்னு ஓட்டர் லிஸ்டுல இருந்து பேர எடுத்து வன்முறை வெறியாட்டம் நடத்துனானுங்க.
படம் ரீலிஸாகி ரெண்டு வாரம் கழிச்சு, தஞ்சாவூருக்கு ஃபிரண்ட் வீட்டுக்கு போயிருந்தேன். நண்பர் எதார்த்தமா ‘’நைட்டு படத்துக்கு போகலாமா?’’ ன்னு கேட்க, நானும் பதார்த்தமா ‘’விவேகத்துக்கு போகலாம்’’னு சொன்னேன்.  அவருக்கு ‘’ஏண்டா கேட்டோம்’’னு ஆயிடுச்சு பாவம். நைட்டு சாப்பிடும் போது நண்பரோட அம்மா, ‘’கூட ரெண்டு சப்பாத்திச்ச் வச்சுக்கப்பா’’ ‘’படத்துக்கு வேற போற, கூட ரெண்டு சப்பாத்திச்ச் வச்சுக்கப்பா’’ன்னு மருக்கா மருக்கா சொல்லுச்சு. அதுக்கு அர்த்தம் அப்ப புரியல, படம் பார்த்த பின்னாடிதான் புரிஞ்சுது. ‘’அடி வாங்குறதுக்கு உடம்புல தெம்பு வேணாமா’’ன்னு நேரடியா சொல்லி இருந்தா, கூட ரெண்டு இல்ல நாலு சப்பாத்தி சாப்பிட்டுருப்பேன். என்னா அடி.
படம் வந்து ரெண்டு வாரமாகியிருந்தாலும் ஓரளவு கூட்டம் இருந்துச்சு. தியேட்டர சுத்தி தீனா குமார், பில்லா பாலா, வரலாறு வசந்த்...........ன்னு கொஞ்சப்பேரு பேனர், பிளக்ஸ் எல்லாம் வச்சிருந்தானுங்க. ஒரு லொல்லு சபா எபிசோட்டில், எம்.ஜி.ஆர் டபுள் ஆக்ட் படத்தில் ஒரு எம்.ஜி.ஆரா சந்தானமும், இன்னொரு எம்.ஜி.ஆரா மண்ட மனோகரையும் போட்டு, இவங்க ரெண்டு பேரும் ரெட்டப் பிறவி, பாக்குறதுக்கு ஒன்னுபோல இருப்பாங்கன்னு சொல்லியிருப்பானுங்க. அதுமாதிரி பிளக்ஸ்ல இது அஜித்தா இல்ல அவர் ரசிகர் விவேகம் வினோத்தான்னு சந்தேகம் வர்ர மாதிரி ரெண்டு பேரும் ராணுவ யூனிபார்மில் போஸ் கொடுத்திருந்தாங்க. படத்தப் பார்த்த பின்னாடியும், எப்படி அந்த பிளக்ஸ கழட்டாம இருக்கான்னு? எனக்கு ஒரே அசுவையா இருந்துச்சு.
தியேட்டருக்குள்ள போனவுடனே தேசிய கீதம் போட்டானுங்க. எழுந்து நின்ன என்னப் பார்த்து ‘’எழுந்து நிக்கனுமா என்ன?’’ன்னு நண்பர் கேட்டார். ‘’சிவான்னு பேரு வச்சவங்களுக்கு எப்படின்னு தெரியல, ஆனா முஹம்மது யாசிர்னு பேர வச்சிக்கிட்டு நான் உக்கார்ந்திருக்க முடியாதுன்னு’’ சொல்லிட்டேன்.
இங்கிலீஷ் படமாட்டம் இருக்குன்னு எந்த அடிப்படையில சொன்னானுங்கன்னு தெரியல. அத நம்பி நாலு ‘’சீன்’’னாவது இருக்கும்னு நம்பி போனேன். ‘’ச்சீ’’ன்னு ஆயிடுச்சு. ஹாலிவுட் படத்துல ஹீரோ கோர்ட் சூட் போட்டு கவர் பண்ணி வருவாரு, ஹீரோயின் அவர கவர் பண்ணுறமாதிரி டிரஸ் போட்டுக்கிட்டுவரும். ஆனா, இந்த படத்துல அது உல்டா. கடைசி பைட்டுல அஜித் கழட்டி நிக்குறாரு, காஜல் அகர்வல் கழண்டு போய் நின்னுச்சு. ஒரு முத்த சீன், பயங்கர எதிர்பார்ப்போட இருந்தேன், தல அந்தப்புள்ள நெத்தியில முத்தம் கொடுத்து மொத்தத்தையும் கெடுத்துட்டாரு.
படத்துல ஹீரோ பஞ்ச் பேசலாம் தப்பில்ல, ஆனா பேசுறது எல்லாம் பஞ்சா இருந்தா எப்படி தாங்கிக்குறது?. அதுவும் ரெண்டு சப்பாத்தி சாப்பிட்டு படத்துக்கு வர்ற கதி என்னவாகும்?னு எவனாவது யோசிக்கிறானா?. காஜல் கூட ‘’வாழ்க்கன்னா என்ன தெரியுமா?’’, ‘’குடும்பம்னா என்ன தெரியுமா?’’ ‘’குடும்ப கட்டுப்பாடுன்னா என்னன்னு தெரியுமா?’’ந்னு பாடம் எடுக்குது. ஒரு கட்டத்துல சுகி சிவம் நிகழ்ச்சிக்கு எதுவும் வந்திட்டமோன்னு டவுட் வந்திரிருச்சு. படத்துல ஒரே ஒரு ஆருதல் அக்ஷரா ஹாசன் தான். அது எப்படியோ டைரக்டருக்கு தெரிஞ்சு போச்சு, இண்டெர்வெல்லேயே அந்த கேரக்டர் சோலிய முடிச்சிட்டானுங்க.    
மற்ற படத்துலயெல்லாம், கதையை எழுதிட்டுத்தான் வசனம் எழுதுவானுங்க. இந்த படத்துல வசனம் எழுதிட்டு கதை எழுதியிருக்கானுங்க போல. வசனம் எல்லாம், டி.வி விவாத நிகழ்ச்சிகள்ல பி.ஜே.பிக்காரனுங்க பதில் சொல்லுற மாதிரியே ‘’இத எதுக்குடா இப்ப சொல்லுறானுங்க’’ந்னு இருந்துச்சு. அதுவும் கன் பாயிட்டுல 500 வெளிநாட்டு போலிஸ்கிட்ட மாட்டுனதுக்கு பின்னால ‘’இந்த உலகமே உன்ன பெயில் ஆயிட்டன்னு சொன்னாலும் நீ ரி வேலுவேசன் போட்டு பாஸாகுற வரக்கும் நெவர் எவர் கிவ் அப்’’ந்னு தமிழ்ல வசனம் பேசுவாரு.  அவனுங்க டிக்ஸ்னரி எடுத்து அர்த்தம் பாக்குற கேப்புல இவர் பெரிய்ய்ய்ய்ய பாலத்துல இருந்து குதிச்சுருவாரு. கலகலப்பு படத்துல வர்றமாதிரி ‘’இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு?’’ந்னு ஒருத்தன கேட்டேன். ‘’முதல்ல நானும் நம்பல, ஆனா இத நம்புனாத்தான் அஜித் ரசிகன்னு சொன்னாங்க, அதனால நானும் நம்பிட்டேன்’’னு சொன்னான். ‘’வாவ் வாட்ட ஜம்ப்’’ந்னு நானும் ஜம்ப் அடிச்சுட்டேன்.
பரபரப்பா வேல பாக்குறோம்ங்குற பேர்ல விவேக் ஓபராய் கும்பல் கத்துறத நிருத்துன உடனே, பேக் ரவுண்ட் மியூசிக்னு கதறவுடுரானுங்க. ‘’உங்க தம்பி பசுபதி நம்ம டீச்சர வச்சிருக்காருங்க’’ந்னு சொல்லி முடிக்குறதுக்குள்ள கவுண்டர் காதுல ‘’குய்ய்ய்ய்ய்’’ந்னு ஒரு சவுண்ட் வருமே அதே சவுண்டு கொஞ்சம் A+ ரத்தத்தோட சேர்ந்து வந்துச்சு. ஐஸ்வர்யா ராய உசார் பண்ணி வச்சிருந்த விவேக் ஓபராயா இப்படி ? ரொம்ப டெலிகேட் பொசிசன்.
படம் முடிஞ்சுதேன்னு எல்லோரும் ஒருவழியா வெளிய வந்தானுங்க, நான் மட்டும் ஒரே (உடல்) வலியா வந்தேன். அஜித்துக்கு அடுத்த படமும் சிவா கூடத்தானாம், இவனுங்க மறுபடியும் நம்மள ‘’கன்’’ல கொண்டுவந்து நிப்பாட்டாம அடங்கமாட்டானுங்க போலிருக்கு.
வெயிட்டிங் பார் விஸ்வாசம்
---------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

செவ்வாய், ஜூலை 25, 2017

அவர் பீட்டி (P.T) வாத்தியார்.

எவ்வளவு அவசர வேலையாக வெளியே சென்றாலும் சரி, ஏதாவது ஒரு விளையாட்டுத் திடலைக் கண்டால் ஒரு நொடியாவது நம்முடய வேகம் தடைபடும். அங்கு யாராவது விளையாடினால், 5 நிமிடமாவது பார்க்கத் தோன்றும். அதுவும், நாம் விரும்பும் விளையாட்டு என்றால் ‘’ஸ்கோர் என்னாச்சு தல?’’ என்று கேட்டுவிட்டு நம்மை அறியாமலேயே அரை மணி நேரமாவது ரசித்து நிற்போம். எனக்கு, ஜித்தாவில் ரொம்ப பிடித்த விஷயமே ஒரு ஏரியாவில் குறைந்தது 4 புட்பால் திடலாவது இருக்கும். சாயங்காலங்களில் வயது வித்தியாசமே இல்லாமல் விளையாடிக் கொண்டிருப்பார்கள்.
உடல் எடையை குறைப்பதற்காக மாலை நேரங்களில் ஜாக்கிங்க் போகிறேன். போகும் வழியில் இருக்கும் கிரவுண்டில் அரபிக்காரர்கள் புட்பால் விளையாடுவார்கள். ‘’பார்ப்பதற்கே மனசுக்கு சந்தோஷ் சுப்ரமணியமா இருக்கே, கொஞ்ச நேரம் விளையாடினால் மனசு லேசா லேசாகுமே’’ என ஏங்கிய நாட்கள் உண்டு. அன்று, ஜாக்கிங்க் போகும் போது பந்து மைதானத்தை விட்டு பறந்து என் பக்கத்தில் வந்தது.  பந்தை தூக்கிப் போடும்படி ஒரு அரபி பையன் சைகை காட்டினான். நானும் ரொம்ப சந்தோசமாக பந்தை உதைத்தப் பின், கால் ரொம்ப லேசாக இருந்தது. “அதெப்படி? மனசுதானே லேசாகனும்’’னு நீங்க யோசிப்பது புரிகிறது. பட், பறந்தது பந்து அல்ல என்னோட வலது கால் ஷு (SHOE). கடைசியில் நான் பந்தை கையில் எடுத்துக்கொண்டு போய் கொடுக்க, அவன்  ஷுவை எத்தி தள்ளினான். அந்த வரலாற்று நிகழ்வுக்குப் பின்பு, அந்தப் பக்கம் எட்டிக்கூட பார்ப்பதில்லை.
எல்லாப் பள்ளிகளிலும் மைதானம் இருக்கும் ஆனால் நான் 9 டு 12 வரை படித்த பள்ளிமட்டும்தான் மைதானத்திற்கு உள்ளே இருந்தது. எங்க விளையாட்டு வாத்தியார் பெயர் நெல்லை நாயகம். பல மாணவர்களோட ஆதர்ச நாயகன். எங்க செட்டிலும் சரி, எங்கள் முன்னாடி செட்டிலும் சரி +2 முடித்தபின்பு, குறைந்தது 4 மாணவர்களாவது விளையாட்டு வாத்தியாருக்கு (Physical Training) படித்தார்கள் என்றால் அது, இவருடய இன்ஸ்பிரேசனால் தான். பெரிய சைஸ் கடாயை கவுத்தி வைத்தது போல இருக்கும் அவர் வயிறு. சிம்பிளாகச் சொல்ல வேண்டும் என்றால், தும்பிக்கையில்லா புள்ளையார் மாதிரி இருப்பார்.  ஆனால், குனிந்து முட்டி மடங்காமல் கால் விரலைத் தொட்டு விடுவார். கெட்ட வார்த்தை பேசினால் அவருக்கு பிடிக்கவே பிடிக்காது, ஏனென்றால் அனைத்து கெட்டவார்த்தையையும் அவர் மட்டும்தான் பேசுவார்.
பாடங்களை முடிக்கவில்லை என்பதற்காக, பீட்டி வகுப்புகளை யாருக்கும் கொடுக்க மாட்டார். ‘’போன மாசம் எவனும் நல்லா விளையாடல, அதனால உங்க கிளாஸ தாங்கன்னா, உ கெமிஸ்ட்ரி வாத்தியான் தருவானால? பெற என்ன மயித்துக்கு அவனுக்கு நாங் குடுக்கனும்?’’ என்று கெத்தாக பேசக்கூடிய மனிதர். கெமிஸ்ட்ரி வாத்தியாருக்கு பீட்டி பிரியடை கொடுக்கமாட்டார் என்பதைத் தாண்டி, இவரை கொண்டாட ஒரு மாணவனுக்கு வேறு என்ன காரணம் வேண்டும். நாங்கலெல்லாம் கொண்டாடினோம் அந்த மனிதரை. மழைக் காலங்களில் கூட யாருக்கும் தன்னுடய கிளாஸை கொடுப்பதில்லை. மழை நாட்களில் கிளாஸ் ஈஸா தியான மண்டபமாக இருக்கும். நிறைய அட்வைஸ் கொடுப்பார், விளையாட்டு சம்பந்தமாக பேசுவார். ‘’ஒரு நாளைக்கு இங்கிலீஷ்ல ஒரு வார்த்தை படி, வருச கடைசில உனக்கு 365 வார்த்தை கிடைக்கும், அவ்வளவுதாம்ல இங்கிலீஷு’’ என்றெல்லாம் சொல்லியிருக்கிறார். அப்படிக் கத்துக்கொண்டதுதான் ‘’ஏக் காவ்மே ஏக் கிஸான் ரெஹதாத்தா’’
அந்த ஸ்கூலில் பெரிய பேஸ்கட் பால் கிரவுண்ட் உண்டு. சேர்ந்த பல மாணவர்கள் அந்த கிரவுண்டைப் பார்த்து அதில் விளையாடுபவர்களைப் பார்த்து சேர்ந்தவர்களாகத்தான் இருக்கும். நான் உட்பட. 9ம் வகுப்பு சேந்த புதிதில் யார், யாருக்கு எந்த விளையாட்டில் இஷ்டம் என்று தெரிந்து கொண்டு, லிஸ்ட் எடுத்தார். கிளாஸில் எல்லோரையும் உயரப்படிதான் உட்கார வைப்பார்கள். 9டி கிளாஸில் முதல் பெஞ்சில் நான் இரண்டாவது ஆள், அப்போ நான் கொஞ்சம் குள்ளமா இருப்பேன் (“இப்பவரைக்கும் நீ அப்படித்தானடா இருக்க?”ங்குற உங்களோட மைண்ட் வாய்ஸ் கேட்சிங்). என்னவிட குள்ளமா இருந்தவன் பெயர் மகாராஜா. பேஸ்காட் பால் விளயாட கை தூக்கினான். ‘’எந்திச்சு நிக்க வக்கில்லாதவனுக்கு வப்பாட்டி வக வகயா கேக்குதாம்’’ன்னு சொல்ல, அவனைப் பார்த்து கை தூக்க நினைத்தவன் அப்படியே கையை இறக்கிவிட்டேன். என்னவென்றே தெரியாமல் வாலிபாலுக்கு பெயர் கொடுத்தேன்.
வாலிபாலுக்கு எங்கள் பள்ளியில் முன்பாகவும், பின்பாகவும் இரண்டு கிரவுண்ட் உண்டு. பின்னாடி இருக்கும் கிரவுண்டில் மேடைபோன்ற திண்டு இருக்கும். அதில் இருந்துதான் நாங்கள் விளையாடுவதைப் பார்ப்பார். அவர் வயிறு இருக்கும் சைசிற்கு, பத்து மீட்டருக்கு சுத்தி கீழே என்ன இருந்தாலும் தெரியாது. அந்த திண்டின் மீது ஏறினால் 100 மீட்டர் சுற்றளவிற்கு எதுவும் தெரியாது. ஒரு தடவ சுந்தர்ராஜன் என்பனை கூப்பிட்டார்.  கூப்பிட்டு முடிப்பற்குள் திண்டின் பக்கத்தில் போய்விட்டான். சாரோட வயிரு சுந்தர்ராஜனை மறைக்க, அவன் நிர்பது தெரியாமல், மறுபடியும் ‘’அந்த அருதலிய வரச் சொல்லுல’’ன்னு சொல்ல, நாங்க எல்லோரும் ‘’அவ கீழதான் சார் நிக்கான்’’ன்னு சொன்னோம். ‘’மூதி, கூப்புட்டா, கண்ணு முன்னாடி வந்து நிக்கனும், அதவுட்டுட்டு காலு முன்னாடி, பூ# (18+) முன்னாடி வந்து நிக்கக்கூடாது’’ என்ற செம்மதுர தமிழோசை இன்னும் காதில் தேனாக சொட்டுகிறது.
‘’காலும், கையும் நம்ம இடத்தில் இருந்தாலும், கண்ணு மட்டும் எதிரி இடத்தில் எப்போதும் இருக்கனும்’’, ‘’கண்ணு ஒருத்தன பார்க்கனும், ஆனா கை, மூளை சொல்லுறத கேட்டு பந்த இன்னொருத்தங்கிட்ட அனுப்பனும்’’.......என பல டெக்னிக் எல்லாம் சொல்லுத் தருவார். அதை எல்லாத்தையும் கேட்டுவிட்டு கரெக்டா தப்பு பண்ணுவோம். சுத்தி இருக்கும் எல்லா ஊர் ஸ்கூலுக்கும் கூட்டிப் போய் மேட்ச் ஆடவைப்பார். மூன்று பிரியட் பெர்மிஷன் கேட்டுச் சென்றாலும் முதல் பிரியட் முடிவதற்குள் அடிச்சு துவச்சு மீன்பாடி வண்டில ஏத்திவிட்டுருவானுங்க. தோத்துப் போன பின்னாடி சார் திட்டுவாரோன்னு பயந்து போய் நின்னா ‘’விடுங்கல, ஜெயிச்சிட்டா அதுல கத்துக்க ஒன்னு இருக்காது, தோல்விலதாம்ல நெறய பாடம் தெரிஞ்சிக்கலாம், அடுத்த வாரம் வடகர மேட்சுல பாத்துக்கலாம்’’ என ஆருதல் சொல்லுவார்.  மூனு நாளு கழித்து கூப்பிட விடுவார் ‘’மேட்சுப் %&$%@& யாடா விளையாண்டிங்க, சூப்பிப் போனவ %*&%#க்கு எண்ண தடவுன மாதிரி.....................’’ன்னு ‘’டோட்டல் பேமிலி டேமேஜ்’’ஆகுற மாதிரி அர்ச்சனை நடக்கும்
எந்த ஊரு மேட்ச்சுக்குப் போனாலும், சாப்பாடில் மட்டும் குறையே இருக்காது. ஆம்லேட் என்றால் டபுள் ஆம்லேட்தான், புரோட்டா என்றால் கொத்து புரோட்டாதான். ஒவ்வொரு ஸ்கூலும் காலாண்டு இடைவெளியில், இவ்வளவு போட்டி நடத்த வேண்டும் என்ற விதி இருக்கிறது. ஆனால், சில சமயங்களில் போட்டி நடத்தாமலேயே அவர்களுக்குள்ளாகவே, நீங்க வின்னர், நீங்க ரன்னர் என முடிவெடுத்து கல்வி விளையாட்டுத் துறையில் இருந்து சர்டிபிக்கேட் வாங்கிவிடுவார்கள். அதை காலை பிரேயரில் வைத்து எல்லோரயும் கை தட்டச் சொல்லி கொடுப்பார்கள். அந்த மாதிரியான அசிங்கம் கலந்த ஆனந்தம் கூட  ஒரு விதமான அனுபவம்தான். எங்க பீட்டி சாருக்கு வாலிபாலை விட பேஸ்கட் பால் கேமில்தான் அதிக ஆர்வம். அவர்களுக்கு தனி கோச்சிங்க் எல்லாம் கொடுப்பார். இப்போது எப்படி என்று தெரியவில்லை, நான் படிக்கும் போது திருநெல்வேலி மாவட்டத்தில் பாஸ்கட் பால் ஸ்கூல் டீம் மொத்தம் பத்திற்கும் குறைவாகத்தான் இருக்கும். அதனால் அவர்களுக்கு டிஸ்டிக் லெவல் மேட்ச் எல்லாம் கிடைக்கும். அதுல நிறைய கப் வாங்கியிருக்கிறார்கள். வாலிபாலுக்கு எல்லாம் மேலே சொன்னா மாதிரி  ஏதாவது கிடைத்தால்தான் உண்டு. அவர் ரூமில் இருக்கும் கப்புகளை பார்க்கும் போது சொன்னார் “கப்பு வெயிட்டு கையோட நிக்கனும், தலைக்கு கொண்டு போனா, துதான் நம்ம கடைசி கப்பு”
வாலிபால் மேட்ச் என்றால் அதற்கு இரண்டு நாள் முன்பாக, ஸ்கூல் முடிந்தவுடன் சீனியருடனோ, அல்லது ஸ்டாப் டீம்வுடனோ பயிற்சி மேட்ச் நடக்கும். ஸ்டாப் டீமில் முருகன் சார்னு ஒருத்தர் இருந்தாரு. சத்தியராஜ் தோளில் ரகுவரன் ஏறி நின்றால் என்ன உயரம் இருக்குமோ அந்த உயரம். என்னோட உயரத்துக்கு நானெல்லாம் குறுக்கால கட்டியிருக்கும் நெட்டை டச் பண்ணாமலேயே அடுத்த கோர்ட்டிற்கு போய்விடுவேன். அவர்களோடு மேட்ச் ஆடச் சொல்லி கதற விடுவானுங்க. ‘’எத்தன பேருக்குள்ளது அத்துக்கிட்டு உருண்டு ஓடப்போகுதோ....’’ங்குற பீதிலேயே விளையாடுவோம். முருகன் சார் அவர் இருக்குற ஹைட்டுக்கு ஜம்ப் பண்ணி வேற அடிப்பாரு. 8000 கி.மீ ஸ்பீடுல பால் இறங்கும். அவரு ஜம்ப் பண்ண போறாருன்னு தெரிஞ்சுச்சுனாலே நாங்க கோர்ட்டுக்கு வெளியே போயிருவோம்.
என்னோட ஹைட்டுக்கு நான் ஒன்பதாவது வகுப்பில் இருந்து பனிரெண்டாவது வகுப்பு படிக்கும் வரை வாலிபால் ஜீனியர் டீமில்தான் விளையாடினேன். பனிரெண்டாவது படிக்கும் போது ஒன்பதாவது, பத்தாவது படிக்கிறவனுங்க கூட விளையாடனும். மேட்ச் எங்காவது போனால், நாயகம் சார் என்னை ஒன்பதாவது வகுப்பு மாணவன் என்றே பெயர் கொடுக்கச் சொல்லுவார். மற்றவர்களிடம் ‘’இவன ஒம்பதாப்புன்னு சொல்லித்தான் இறக்கியிருக்கேன், வெளயாடும் போது அண்ணே நொண்ணேன்னு கூப்பிட்டு என்னய மாட்டிவுட்டுராதியல’ன்னு சொல்லிவிடுவார். இதுதான் சந்தர்பம்னு, நேத்து வரை அண்ணன்னு கூப்பிட்ட பயலுக எல்லாம் ‘’எல’’, ‘’டேய்’’, ‘’மச்சி’’ன்னு கூப்பிட்டு வஞ்சம் தீர்ப்பானுங்க.
எங்களோட விளையாட்டு பீரியடுக்காக மற்ற வாத்தியார்களிடம் எந்த விதத்திலும் சமரசம் செய்துகொள்ளாதவர். யாரும் இவர், பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி வாத்தியார்களிடத்தில் பேசிப் பார்த்ததே இல்லை. தனக்கான இருக்கையை ஸ்போர்ட்ஸ் ஸ்டோர் ரூமிலேயே போட்டு அவர்களிடமிருந்து தனியாகவே இருந்தார். நான் காலேஜ் படிக்கும் போது எதேச்சயாக விளையாட்டு வாத்தியாருக்கு படித்த என் ஸ்கூல் சீனியரை சந்தித்தேன். விழுப்புரம் பக்கத்தில் வேலை கிடைத்தவுடன் நெல்லை நாயகத்தை சந்தித்தபோது அவர் சொல்லியதைச் சொன்னார். ‘’ரொம்ப சந்தோசண்டே, சில மயிராண்டிய வந்து ஒம்ம கிளாச தாரும் சிலபஸ் கவர் பண்ணனும்னு வருவான், எந்த கூ$#யானுக்கும் கொடுக்காத’’

வி மிஸ் யூ சார். 
---------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

ஞாயிறு, ஜூலை 23, 2017

ஓவியா ஆர்மி :)

இப்போ தமிழ்நாட்டில் முக்கால்வாசிப் பேர் ‘’எண்டே மதர் டங் மலையாளம், எண்டே ஸ்டேட் கேரளா, எண்டே சீப் மினிஸ்டர் பினராயி விஜயன், எண்டே நடனம் கதகளி, தக்கிட தக்கதிமி தக்கிட தக்கதிமி..............’’ன்னுதான் ஆடிக்கிட்டிருக்கானுங்க. சமீப காலமாக ‘’கூட மேல கூட வச்சி...’’ பாடலைத்தான் முனுமுனுப்பேன், ஆனால் இப்போது ‘’ஓவியா உன் ஓரப்பார்வை என்னைத் தீண்டுதே...’’தான் ரிங்க்டோனே. பாடல் ரொம்ப நல்லா இருக்கு, லிரிக்ஸ் ரொம்ப நல்லா இருக்குன்னு யு-டூப்பில் வீடியோ பார்த்தேன். பாடல் முழுவதும் ஹீரோ ஒரு தண்ணி ட்ரம்பை உருட்டி உருட்டி விளையாண்டு கொண்டிருக்கிறார்.  
காலம்தான் எவ்வளவு கொடியது. என் வாழ்க்கையில், என் நாவு ‘’நமீதா வாழ்க’’ என்ற திருநாமத்தை அன்றி வேறொன்றையும் உச்சரிக்காது என்று இருந்தவனை ‘’பேசாம நீ அமெரிக்காவுக்கே போயிரு சிவாஜி’’ என்று சொல்லவைத்துவிட்டது. இதை விதி என்பதா இல்லை கடவுளின் சதி என்பதா?. நமீதா பி.ஜே.பியில் சேரக் கூடும் என்ற வதந்தி கிளம்பியபோது கூட டபுள் ஜீரோ (00) டிரிபிள் ஜீரோவிற்கு (000) மிஸ்டுகால் கொடுத்து பிஜேபியில் சேர்ந்துவிடலாம் என்று நினைத்திருந்தேன். அந்த அளவிற்கு ரசிகனாயிருந்த நானா? இன்று கையிலிருந்த 50 ஓட்டுக்களையும் ஓவியாவிற்கே கொடுத்துவிட்டு வெரும் கையோடு நமீதாவை வேடிக்கை பார்த்து நிற்பது?. இனி, ஆப்பிள் ஐபோன் லோகோவைக் காணும் போதெல்லாம் ‘’இது நமீதா கடித்து பிரிஜ்ஜில் வைத்த ஆப்பிள்’’ என்று நினைவுகள் என் மனதை கொத்தித் திண்ணுமே, அய்யஹோ..... நான் என் செய்வேன்.
ஓவியாவை களவானி படத்தில் பார்த்த போதோ, மெரினாவில் (படத்தில்) பார்த்த போதோ பெரிதாக ஒரு ஈர்ப்பு ஏற்படவில்லை. ‘’இந்த பொண்ணுகிட்ட என்ன இருக்குன்னு இதெல்லாம் ஹீரோயினா நடிக்குது’’ன்னு நக்கல் பண்ணியிருக்கேன். ஆனால் கலகலப்பு படத்தைப் பார்த்த பின்பு “பாரேன்.... இந்த பொண்ணுக்குள்ளயும் ஏதோ இருந்திருக்கு...’’ன்னு மிரண்டு போனேன். ஹீரோயின்களில் விஜயசாந்தியை அடுத்து ஓவியாவிற்குத்தான் போலிஸ் டிரஸ் நச்சென்று பொருந்தி இருந்தது. இந்த மாதிரி போலிஸ் இருந்தா நான் எல்லாம் டெய்லி பிக்பாக்கெட் கேசில் கைதாவேன்.
ஜித்தாவில் எல்லா நாளும் தனிமைதான், ரூமிலும் ஆள் கிடையாது, பேச்சு துணைக்கென்று அக்கம் பக்கம் யாரும் இல்லை. ஜீலி பாணியில் சொல்வதென்றால் ‘’கட்டிப் புடிக்கக்கூட யாருமில்ல’’.  கிட்டத்தட்ட இதுவும் பிக்பாஸ் ரூம்தான்.    முதல் 15 நாட்கள் தொடர்ந்து பிக்பாஸ் பார்த்து வந்தேன். அந்த பதினைந்து நாட்களும் தூக்கத்தில் நானும் பிக்பாஸ் வீட்டில் இருப்பது போலவும், காயத்திரியும், ஆர்த்தியும் என்னை அடிமை போல் நடத்துவது போலவும் கனவு வரும். மனசு ஒரு விதமான பயந்த நிலையில் இருந்தது. பரணியை பொம்பள பொருக்கி ரேஞ்சில் கூடி நின்று பேசிய போது, என்னை பேசுவதுமாதிரியான மனோ நிலை இருந்தது. இதே ரேஞ்சில் சென்றால் மெட்ராஸ் ஜானியாக மாறிவிடுவேனோ என்ற பயம் வந்துவிட்டது. இப்போது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் கமல் நடத்தும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்காக பார்க்கிறேன்.
பிக்பாஸை பார்க்கவில்லை என்றாலும் டெய்லி என்ன நடக்கிறது என்பதை பலரின் போஸ்ட்களிலும், மீம்களிலும் பார்த்து தெரிந்து கொள்கிறேன். பிக்பாசின் இரண்டாவது நாளில் இருந்தே ஓவியாவைப் பிடித்துவிட்டது. இந்த பொண்ணு ரொம்ப உண்மையா இருக்குதே, நேர்மையா பேசுதே.............என பல ‘தே’க்கள்தான் ஓவியா உன் ஓரப்பார்வை என்னைத் தீண்டுதே மொபைல் ரிங்டோன். தமிழகத்தில் குடிசைகளே இருக்கக்கூடாது என்று ஓடி ஓடி கொளுத்தும் டாக்டர் அன்புமணி ஐ.ஏ.எஸ் என்னைக்கு ஓவியாவிற்கு கிடைத்த ஒன்னரை கோடி ஓட்டுக்களை எண்ணி காண்டானாரோ அன்னையில இருந்து ஓவியா ரசிகனாக இருந்த நான் ஓவியாவின் வெரியனாகவே மாறிவிட்டேன்.
 எனக்கு இரண்டு இ-மெயில் ஐடி உண்டு, ஓவியாவிற்கு ஓட்டுப் போடுவதற்காக மூன்றாவது ஐடியை ஓப்பன் செய்தேன். என் ஆபிசில் இருக்கும் பாக்கிஸ்தானியிடம் ஓவியாவின் அருமை பெருமைகளைச் சொல்லி, இந்தியாவின் அடுத்த பிரதமராகக் கூட வாய்ப்பிருக்கிறது. அப்படி பிரதமரானால் பாக்கிஸ்தானில் நாலு பள்ளிக்கூடம் கட்டித்தரச் சொல்லுகிறேன் படிச்சு பொழச்சுக்கோங்க, என்றெல்லாம் மண்டயக் கழுவி ஓட்டுப் போட வைத்துள்ளேன். இந்தவாரம் மட்டும் ஓட்டுப் போடும் வரை பக்கத்திலேயே இருந்து ஓவியாவிற்குத்தான் ஓட்டுப் போடுகிறானா? என்று கன்பார்ம் செய்துகொண்டேன். (நமீதா விசயத்தில் பாக்கிஸ்தானிகளை நம்ப முடியாது, அயோக்கியப் பயலுக).
ரெண்டு வாரத்திற்கு முன்னாடி, வீட்டம்மா போன் பண்ணிய போது ‘’மனசே சரியில்ல’’ன்னு சொன்னேன். தனிமையில் இருப்பதால் வீட்டை நினைத்து வருந்துவதாக நினைத்துக்கொண்டு ஏதேதோ ஆருதல் சொல்லி ‘’என்ன காரணம்?’’ன்னு கேட்டாள். நான் ‘’ஓவியாவ யாருக்கும் பிடிக்கமாட்டேங்குது, எவிக்சனில் அவள் பெயர் வந்திருச்சு’’ன்னு கவலை தோய்ந்த குரலில் சொன்னேன். சொன்னதுதான் தாமதம், விழுந்த வார்த்தைகளை வைத்துப் பார்த்தால், காயத்திரிக்கு கோவில் வைத்து கும்பிடலாம். கொஞ்ச நேரத்திற்கு அப்புறம் சந்திரமுகி போய் கங்காவா வந்தவுடன், திட்டியதற்கு பிராய்ச்சித்தமாக ஓவியாவிற்கு ஓட்டுப்போட சம்மதிக்க வைத்தேன். ஒரு வாரம், ரெண்டு வாரம்னா ஓகே. வார வாரம் ஓவியா பெயர் வருது. இந்த வாரமும் ஓவியா பெயர் வந்தால் அவ்வளவுதான். என் பொண்டாட்டி என்னை டைவர்ஸ் பண்ணிருவா. அப்புறம் பிக்பாஸில் இருந்து ஓவியா வெளியே வந்தவுடன், நேரா எங்க வீட்டுக்கு வந்து விளக்கு ஏத்துறமாதிரி ஆகிடும்.
இப்போது யாராவது ‘’தமிழ்தாய் வாழ்த்து சொல்லு?’’ன்னு கேட்டா, ‘’கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட கட்ட முட்ட...’’ன்னுதான் சொல்கிறேன். அந்த அளவிற்கு சிஸ்டம் கெட்டுப்போச்சு. ‘’அழுக வந்தா அழுதுடு, ஆனா அதுக்கப்புறம் அழவே கூடாது’’, ‘’வாங்குற ஒவ்வொரு அடியும் வாழ்க்கையில ஒரு பாடத்தை கற்றுக்கொடுக்கும்’’, ‘’நடிக்கிரான்னு முடிவு பண்ணிட்டா நாம செத்தாக் கூட நடிப்புன்னுதான் சொல்லுவாங்க’’ இந்தமாதிரி டயலாக்கெல்லாம் கேட்டபின்பு கூட ‘’ஏண்டா ஓவியா ஓவியான்னு அலையிரீங்க’’ன்னு எவனாவது கேட்பான்?. சிலர் பிக்பாஸ் புரோகிராம் ரியாலிட்டி ஷோ இல்லை என்கிறார்கள். இருக்கலாம், நான் ஒரு சீரியல் பார்ப்பது போலத்தான் பார்க்கிறேன்.
இன்னொரு விஷயம், டிவியில் பார்க்கும் ஓவியாவை நாம் ரியல் வாழ்க்கையில் ரசிக்க முடியுமா??????. தனக்கு மட்டுமே உண்மையாக இருக்கும், கொடுத்த வேலையை தன் இஷ்டப்படி செய்யும், கொஞ்சம் சோம்பேரியான, யாருடனும் ஒத்துப்போகும் குணம் இல்லாத, தலமையை மதிக்காத, வெடுக் வெடுக்கென பேசும், எல்லாவற்றிலும் தான் தான் சரி என்று எண்ணும், தவறு என்றால் ஒரே ஒரு ‘’சாரி’’ சொல்லி கிளம்பும் கேரக்டர்கள் கொண்ட, நம்மோடு ஒட்டி வாழும் ஓவியாக்களை நம்மால் ரசிக்க முடியுமா?. என்னால் சத்தியமா முடியாது. ஒருத்தனோட வாழ்க்கையை டிவியில் பார்த்து கணிப்பதற்கும் (ரசிப்பதற்கும்), நேரில் பழகிப் பார்த்து கணிப்பதற்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கிறது. யாருக்குத் தெரியும்?, நாம் வெறுக்கும் பலர், ஓவியாக்களாகக்கூட இருக்கலாம். நம்மைச் சுற்றி கேமராக்கள் இல்லாதவரை நம்மில் இருக்கும் காயத்திரி, ஜீலியை நம்மால் அறிந்துகொள்ளவே முடியாது.
நேற்று, கமல் தந்திரமாக ஜீலியை மாட்டிவிட்டு, காயத்திரியை காப்பாற்றி இருக்கிறார். இந்த வாரம் ஒருவேளை ஜீலியும், காயத்திரியும் எலிமினேசன் லிஸ்டில் வந்தால், காயத்திரியை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்திருக்கலாம். என்ன எழவுனாலும் இருக்கட்டும், சினேகனை மட்டும் நல்லவனா காட்ட முயற்சிக்காதீங்க மிஸ்டர் கமல் வாந்தி வாந்தியா வருது. லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்
ஸாரி நமீதா.    

-------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

செவ்வாய், ஜூலை 04, 2017

பிக் பாஸ்

2006 என்று நினைக்கிறேன், நான் பெங்களூரில் வேலை பார்த்த போது எனது டெல்லிவாலா மேனாஜர் மூலமாகத்தான் பிக் பாஸ் (ஹிந்தி) எனக்கு அறிமுகம். அதுதான் இந்தியாவிலும் முதல் பிக் பாஸ் என்று நினைக்கிறேன். பிக் பாஸின் ரூல்ஸ், மற்றும் அதில் பங்கு பெற்றவர்கள் பற்றி அந்த மேனாஜர் என்னை டிவியின் முன்வைத்துச் சொல்லிக்கொண்டே இருப்பார். புரியவில்லை என்றாலும், இங்கிரிமெண்ட் டைம் என்பதால் ‘’வாவ்.... மெடிக்கல் மிராக்கிள்’’ என்று புகழ்ந்துகொண்டே இருப்பேன். சில வாரங்களுக்குப் பின்பு, மேனாஜர் என்னிடம் ‘’உனக்குப் பிடித்த கண்டெஸ்டண்ட் யாரு?’’ன்னு கேட்டார். நான் ‘’ராக்கி ஷவாத் (Rakhi Sawant)’’ன்னு சொன்னேன். அந்த பெயரைப் பார்த்தவுடனே கூகுள் சர்ஜ் பண்ணிப் பார்த்த உங்களுக்கு இப்போது தெரிந்திருக்கும், நான் எதுக்கு அந்த பெயரைச் சொன்னேன் என்று. ஆக, அந்த வருஷ இங்கிரிமெண்ட் உ ஊ............
அன்று, 14 பங்கேற்பாளர்களையும் அறிமுகம் செய்த பின்புகூட, விஜய் டிவி பிக்பாஸை தொடர்ந்து பார்க்கவேண்டும் என்ற எண்ணம் வரவில்லை. ஆனால், இன்று அடுத்த எபிஸோட் எப்ப வரும்?? என்று ஏங்கிக்கொண்டிருக்கக் காரணமே அந்த 15 வது பங்கேற்பாளர், ‘’நமீதா’’ தான். எனக்கு நமீதாவைப் பிடிக்கும் என்று சொன்னால், ஏனோ என் நட்பு வட்டாரங்கள் 90 வயது கிழவியை ரேப் செய்தவனைப் பார்ப்பதுபோல் பார்க்கிறார்கள். நானும் பல முறை எனக்கு நானே ‘’ஏன் நமீதாவைப் பிடிக்கும்?’’ என்று யோசித்துப் பார்த்துவிட்டேன். ஆனால், சுவாதி-ராம்குமார் கொலைவழக்கு போல் விடை ஏதும் இல்லை. சமீபத்தில் தொல்.திருமாவளவன் ரஜினியின் அரசியல் வரவு பற்றி பேசினார். அதில் அவர் தமிழ்நாட்டில் நடிகர்கள் நடிகைகளுக்கு இருக்கும் ஈர்ப்பைப் பற்றிச் சொல்லும் போது, ‘’கரிஷ்மா’’ என்ற ஒரு வார்த்தயைப் பயன்படுத்தினார். காரணமே இருக்காது, காரணமும் தெரியாது ஆனால் ஒருவரைப் பிடித்திருக்கும், அதற்குப் பெயர்தான் கரிஷ்மா. அதே கரிஷ்மா கபூர்தான் என்னையும் ‘’உடல் மண்ணுக்கு உயிர் நமிதாவிற்கு’’ என்று கூவச் செய்கிறது.
நமீதா பிக்பாஸில் கலந்து கொள்கிறார் என்றவுடன் எனக்கு மிகப் பெரிய ஆறுதல். இனி எவனாவது என் மூக்கில் கை நீட்டி ‘’உனக்கு ஏண்டா நமீதாவைப் பிடிக்கும்?’’ என்று கேட்டால், ‘’போடா, போய் பிக்பாஸ் வீட்டில் நமீதாவின் அனுகுமுறையை பாருடா’’ன்னு தைரியமா சொல்லுவேன். எனக்கு நம்பிக்கை இருக்கிறது, பிக் பாஸ் முடியும் போது, ஒட்டு மொத்த தமிழ்நாடே நமீதாவைப் பற்றிய பெருமைகளைப் புரிந்து கொண்டு, ‘’சாரிடா யாஸிர்’’ன்னு என் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கும். எவ்வளவு பெரிய நடிகையாக இருந்தும் (சைஸ் பற்றி சொல்லவில்லை), ‘டாய்லெட் கிளீன் பண்ணுவது எப்படி?’ என்று பாடம் நடத்தும் அந்த பரந்த மனம் யாருக்கு வரும்?. தண்ணி சிக்கனம், சுத்தம், சுகாதாரம் பற்றி அந்த அழகுத் தமிழில் அறிவுரை கூறுவதை கேட்பதற்கே அகத்தியர் மீண்டும் பிறவி எடுக்க அப்ளிகேசன் பார்ம் பில் செய்துகொண்டிருப்பார்.
பிக் பாஸில், நமீதாவிற்கு அடுத்ததாக எனக்குப் பிடித்தது ஓவியா. அவர் அளவிற்கு உண்மையா பேசுறது, நடப்பது எனக்கு தெரிந்து யாரும் இல்லை. ‘’இது ஒரு கேம், இங்க நான் விளையாட வந்திருக்கேன், ஜெயிக்க வந்திருக்கேன். ஒரு பேமிலி உருவாக்கவோ, இல்ல பிரண்ட்ஸ் உருவாக்குவதற்கோ வரவில்லை’’ என பொட்டில் அடித்தது போல் சொல்லும் தைரியம் அங்கு யாருக்குமே இல்லை. லீடர் எந்தமாதிரி இருக்கனும்னு சிநேகனுக்கு சொல்லுவது, ‘’வேலை இருந்தால் வேலை செய்வேன், அதுக்காக வேலை செய்யுறமாதிரி நடிக்க முடியாது’’ என கெத்து காட்டுவது, ‘’தவறு பண்ணுங்க, ஆனா அதுல இருந்து கத்துக்கங்க’’ என பிலாஸபி பேசுவது என மனதை கவர்கிறார். சோம்பேரிக்கான விருதை நிராகரிக்கும் முறை அமேசிங்க். ஆரவ் உடனான ஒரு வெட்கக் குழைவு ஆசெம்.
‘’கடுப்பேத்துரானுங்க மை லாட்’’ கேட்டகெரியில் சிநேகன், காயத்ரி ரகுராம், சக்தி, ஆர்த்தி. சத்தியமா முடியலடா. சிநேகன் இன்னும் ‘’என்னாச்சுமா உங்களுக்கு’’ பீலிங்க்ல இருந்து வெளிய வரவேயில்ல. லீடர்னு சொன்னதும் ஏதோ கேங் ஸ்டார் லீடர் தோரணையில் திரிவது பெரிய குஷ்டம். லீடர்ங்குற பேருல செய்கிற ஒவ்வொரு செயலும், உடல் மொழியும் ரொம்ப வெருப்பேற்றுகிறது. ‘எலிமினேட் செய்ய நான் யாரைச் சொல்லுவேன்’னு அழுவதை எல்லாம் நாங்க தங்கப்ப தக்கத்துலேய பார்த்துட்டோம் மிஸ்டர் சிநேகன். அனுயா வெளியே போகும் போது, சிநேகன் செயலில் மட்டுமில்லை, பார்வையிலேயே ஒரு விஷமத்தனம் இருப்பதாக சொன்னது அவ்வளவு உண்மை. புன்னகை மன்னன் பட பாடலுக்கு சிநேகன் ஆடியதைப் பார்தத பின்பு, ‘’இந்த வார எலிமினேசன் நான்தாண்டா’’ன்னு கமல் எந்திருச்சு போயிருவாருன்னுதான் நெனச்சேன். நானா இருந்தா சிநேகன் காஸ்டூமை பார்த்த உடனே பால்டாயில் குடிச்சிருப்பேன். இருந்தாலும் கமலுக்கு பொருமை ஜாஸ்தி.
‘’நாங்க சினிமாவில் எங்களை நிரூபித்தவர்கள், அதனால் பிக்பாஸில் மூலமாகத்தான் பிரபலமாக வேண்டும் என்ற நிலை எங்களுக்கு இல்லை’’ என காயத்ரி ரகுராம், ஜீலியாவிடம் சொல்லும் போது ‘’இவ என்னத்த சினிமாவில் நிரூபித்தாள்’’ன்னு யோசிச்சிக்கிட்டே இருக்கேன், எழவு ஒரு வாரமாகியும் ஒன்றும் ஞாபகத்துக்கு வரமாட்டேங்குது. ‘’நேத்து ராத்திரி யம்மா...’’ பாடலுக்கு டான்ஸ் ஆடியதை பார்த்த பின்பும், ‘’மாஸ்டர்’’ன்னு கூப்பிடுறவன் வாயில் ஆசிட் அடிக்கனும்னு தோணுது. ‘’இதுக்குத்தான் இந்த எச்சய்ங்க கூட வரமாட்டேன்னு சொன்னேன்’’னு ஒரு பொன்மொழி உதிர்க்கும். என்னமோ விஜய் டிவிக்காரன் ‘’நீங்க வந்தாத்தான் முடியும்’’னு அவங்க வீட்டில் போய் நின்னது மாதிரி. மூணு வேல ஓசி சோறு, 100 ரூபா பேட்டா காசு கிடைக்கும்னு வந்துட்டு, இது பேசுற பேச்சு தாங்க முடியல. இதையெல்லாம் கூட பொருத்துக் கொள்ளலாம், ஆனால் பரணியிடம் ‘’நான் உங்க அம்மாவா இருந்திருந்தா செத்துப்போன்னு சொல்லியிருப்பேன்’’ன்னு சொன்னதைக் கேட்டு, என்னை அறியாமல் ஸ்கீரினில் காரி துப்பிவிட்டேன். ஒன்னு இது ‘’அம்மா’’ என்றால் அப்பாவின் மனைவி என்று நினைக்கக்கூடிய ஜந்தாக இருக்கும். இல்லை என்றால், அம்மாவின் வயிற்றில் பிறக்காமல், பேக்டரியில் அசெம்பிள் செய்ததாக இருக்கும். இந்த லட்சனத்தில் இவுகதான் இந்தவார தலைவி. ஹரே ஓ சம்போ.        
பிக்பாஸ் வீட்டில் இருக்குறதுலேயே ரொம்ப பொய்யா வாழ்வது ஜீலியா தான். அண்ணா, அக்கான்னு அழைப்பதில் ரொம்ப செயற்கைத் தனம் தெரியுது. ‘’என்னய ஏன்ணே நீ புரிஞ்சிக்கல’’ன்னு சிநேகனை கட்டிப் புடிச்சி அழும்போது. கர்மம்டான்னு இருந்துச்சு. தேவையே இல்லாம சிரிச்சிக்கிட்டு, பெப்பரப்பேன்னு............. அங்கயும் இங்கயும் நடக்குறத பார்க்கும் போது ரொம்ப எரிச்சலாகுது. ஜீலியா எலிமினேசன் லிஸ்டில் இருந்தாலும், அவரை விஜய் டிவி வெளியே அனுப்பாது என்றுதான் எதிர்பார்தேன். அதே போல் நடந்தது. இந்த வாரம் கூட பரணி லிஸ்டில் இருந்தாலும், கஞ்சா கருப்புதான் வெளியே போவார். ஏனென்றால், ஜீலியா, பரணியை வைத்துத்தான் அங்கு இருப்பவர்களை வெருப்பேற்றி டி.ஆர்.பி ரேட்டை அதிகரிக்க முடியும். அதுமட்டுமல்ல, பரணி, ஜீலியா இருவரும் நன்றாக அழுகிறார்கள் என்பது அவர்களின் கூடுதல் பலம், விஜய் டிவிக்கு அதுதான் தேவை. எவ்வளவு சீக்கிரத்தில் ஜீலியானா எலிமினேட் ஆகுறாங்களோ அவ்வளவு தூரத்துக்கு இருக்குற கொஞ்ச நெஞ்ச பெயரையும் காப்பாத்திக்கலாம்.
ஆர்த்தி, பரணி, சக்தி மூவரும் கமலைக் கண்டவுடன் என்னவோ கடவுளைக் கண்ட ரியாக்சன் கொடுப்பதெல்லாம் டூ மச். அதுலயும் ஆர்த்தி ஓவர் ஆக்டிங். எல்லோரும் ஹாலில் ஷோபாவில் கூடும் போது, ஆர்த்தி மட்டும் படுத்திருக்கா, உட்கார்ந்திருக்கா என்று தெரியாது. இம்ச எல்லா ஆங்கிளிலும் ஒரே சைசில் இருக்கிறது. கேமராவில் பிக் பாஸிடம், என்னவோ புருசனிடம் பேசுவது போலத்தான் பேசுது. ஷக்தி பரணியிடம் ‘’நானும் ரவுடிதான்’’ ரேஞ்சில் ‘’நான் பழைய மாதிரி இருந்திருந்தா என்ன நடக்கும்னே தெரியாது....’’ என பேசுவது சுட்டி டிவி பார்ப்பது போலவே இருந்தது. பிக்பாஸ் வீட்டில் நுழைந்த உடன் ஆர்த்தி பிரிஜ்ஜை தேடினார், சிலர் பெட்ரூம், சிலர் பாத்ரூம் எங்கே? என தேட நடிகர் ஸ்ரீ மட்டும் வெளியே போக கதவைத் தேடினார். சாம்பு மகன் மாதிரி ‘’வாட் இஸ் தி புரசிஜர் டு எக்ஸிட் தி ரூம்’’ன்னே சொல்லிக் கொண்டிருந்தார். பாவம்.
இங்கு கமலைப் பற்றி சொல்லியாக வேண்டும். ரியாலிட்டு ஷோ என்றால், உண்மையில் நாம் எப்படியோ அப்படியே இருக்க வேண்டும். நடிக்கக்கூடாது. அது கண்டெஸ்டண்டிற்கு மட்டுமில்லை, ஹோஸ்ட் பண்ணும் கமலுக்கும் பொருந்தும். அமிதாப் பச்சனின் குரோர்பதி ஹிட்டுக்கு காரணமே, அமிதாப் நடிக்காமல் இருந்ததுதான். தமிழில் கூட பிரகாஷ் ராஜ் அப்படி இயல்பாக செய்திருந்தார். ஆனால் சூர்யாவோ ‘’ஓங்கி அடிச்சா ஒன்ர டன் வெயிட்ல..’’ ரேஞ்சில் சிலுப்பினார். பிக்பாஸ் முதல் நாளில் கமல், ஏதோ ஒரு படத்தில் கமல்ஹாசனாகவே நடிப்பது போல நடித்து வெருப்பேற்றினார். போன வாரம் முழுவதும் உட்கார வைத்து கிளாஸ் எடுத்திருப்பார்கள் போல, இந்த வாரம் கலக்கினார். இருந்தாலும், என்னவோ உலகத்திலுள்ள அனைத்து விஷயங்களையும் தான் நடித்த 200 படங்களிலும் சொல்லிவிட்டது போல, ‘’என்னோட தேவர் மகன் படத்துல கூட....., என்னோட விருமாண்டில கூட ஒரு டயலாக்........, நான் நடிச்ச விஸ்வரூபம்ல.......’’.என மேற்கோள் காட்டி பேசுவது பெரிய அபத்தம்.   
கஞ்சா கருப்பு, வையாபுரி, ரைசா, ஜீலியா, பரணி,  அடுத்தடுத்த வாரங்களிலும், சிநேகன், காயத்ரி, சக்தி, ஆர்த்தி விஷக் கிருமிகள் அவர்களுக்கு பின் வெளியேற்றப்படலாம். நமீதா, ஓவியா, ஆரவ், கணேஷ் இறுதிவரை ஒரு டப் பைட் கொடுக்கலாம் என்பது என் கணிப்பு. பொதுவாக நான் கணித்தால் தலைகீழாகத்தான் நடக்கும். பார்க்கலாம்.................  
--------------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

வியாழன், ஜூன் 15, 2017

வனஜா டீச்சர்.

தென்காசிக்கு போவதாக இருந்தால், போகும் போது பஸ்ஸில் வலது புறமும், திரும்பும் போது இடது புறமும் உட்காரும்படியாக பார்த்துக்கொள்வேன். எங்க ஊரில் இருந்து ஏழு கிலோ மீட்டரில் . கி.பி 1888ல் ஆரம்பித்த அந்த பள்ளிக்கூடத்தில் தான் நான் படித்தேன். சினிமா கிராபிக்ஸ்ஸை மிஞ்சும் இயற்கையான எளில்மிகு லோக்கேஷனில் அமைந்திருக்கும்.. பள்ளிக்கு பின்னாடி சின்ன ஓடை. முன்னாடி ஒரு ஆலமரம் அதன் அடியில் சின்ன புள்ளையார் கோவில். பக்கத்தில் உலகத்தில் எங்கயுமே கிடைக்காத நாலே நாலு திண்பண்டங்கள் கொண்ட ஒரு குட்டி பெட்டிக்கடை. எதிர்புற வலது பக்கத்தில் கரடிமாட சாமி, தெற்கில் சுடலைமாட சாமி என காவல் தெய்வங்கள், அதை ஒட்டி விளையாட்டு மைதானம் என்ற பெயரில் ஒரு புதர்காடு. சாலை இருபுறமும் புளியமரம் என இயற்கை சூழ் ரம்மியமான இடம். 
பின்னாடி இருக்கும் அந்த சின்ன ஓடையில் ஒரு நாளைக்கு 10.30, 1.00, 3.30 என்ற மூன்று வேளைகள் மட்டுமே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். முனிசிபாலிட்டியில் திறந்துவிடுவதாக நினைக்க வேண்டாம், அதுதான் எங்கள் இண்டெர்வெல் பிரீயெட். அந்த ஓப்பன் ஏரியாவில் வானத்தைப் பார்த்துக்கொண்டு உச்சா போகுற சுகமே தனி. புள்ளையார் கோவிலில் அடிக்கடி பூஜை நடக்கும். ஆனால், புளியோதரையோ, பொங்களோ, பிரசாதமோ கொடுத்துப் பார்த்ததே இல்லை. அந்த காண்டு புள்ளையாருக்கே இருந்திருக்கும் போல, ஊரே ‘’புள்ளையார் பால் குடிக்குறாரு’’ ‘’புள்ளையார் பால் குடிக்குறாரு’’ன்னு பூரித்த நாட்களில், டீச்சர்கள் ஆர்வத்தோடு தூக்குச் சட்டியில் கொண்டுவந்த பாலை துப்பி அனுப்பிவிட்டார். ‘’புள்ளையார் கோவமா இருக்காரு’’ன்னு புரிந்து அன்று நாள் மட்டும் சக்கரை பொங்கள் தந்தார்கள்.
ஒருநாள் தென்காசிக்கு போகும்போது பஸ்ஸில் பயங்கர கூட்டம், இடைகாலில் எங்க எட்டாம் வகுப்பு கிளாஸ் டீச்சர் ஏறினாங்க. அவங்க பெயர் வனஜா. பார்த்துவிட்டு பயங்கர சந்தோசம். ‘’என்னய ஞாபகம் இருக்குமா?, ஞாபகம் இல்லன்னா என்னா?, நான் உங்க ஸ்டூடண், இஞ்சினியரா இருக்கேன்னு சொல்லுவோம். ச்சே, ச்சே இஞ்சினியர்ன்னு சொல்ல வேணாம், நம்ப மாட்டாங்க. நான் நல்லா இருக்கேன், நீங்க நல்லா இருக்கீங்களா டீச்சர்’’ன்னு கேட்கலாம்னு ஒரு ஸ்டெப் முன்னாடி எடுத்து வச்சேன். ‘’ஏய், அறிவிருக்கா இப்படி இடிச்சுக்கிட்டு நிக்க, கொஞ்சம் தள்ளி போவேண்டியதுதானே.........’’ “நவளு நவளுன்னா இங்க என்ன நாலு செண்ட் இடமா கெடக்கு...””என பக்கத்தில் இருந்த பெண்ணிடத்தில் கத்தி சண்டை போட்டுக்கொண்டிருந்தார்.
கிட்டத்தட்ட 20 வருசத்துக்கு முன்னால ‘’எல இத மட்டும் நீ நாளைக்கு படிக்காம வா, அப்பிருவேன் அப்பி’’ என கோவத்துல கத்துன அதே கம்பீர குரல் இன்னும் அப்படியே இருந்தது. ஒரு வேளை நான் குருடனாக இருந்திருந்தால் கூட குரலைவைத்து ‘’வனஜா டீச்சர்’’தான்னு சொல்லியிருப்பேன். டீச்சரோடு சரிக்கு சமமா சண்டை போட்ட பெண் ஆஜான பாகுவா, அமரேந்திர பாகுபலியையும், பல்வால் தேவனையும் ஒன்றாக கட்டிவைத்தது போல் இருதார். டீச்சரைப் பார்க்க ஒன் ஸ்டெப் முன்னாடி சென்ற நான், அந்த பெண்ணை பார்த்தபின்பு டூ ஸ்டெப் பின்னாடி வந்துவிட்டேன். டீச்சரிடம் குசலம் விசாரிப்பதை பார்த்துவிட்டு. இறங்கும் போது டீச்சர் மேலுள்ள கோவத்தையெல்லாம் ஆஜான பாகு என் மீது இறக்கிவிட்டால்????????. நினைத்த போதே ஒரு பக்க ஷோல்டர் இறங்கியது போல இருந்தது.
எட்டாம் வகுப்பில் அவங்கதான் எங்க கிளாஸ் டீச்சர். லேட்டா வருகிறவன், வீட்டுப் பாடம் செய்யாதவன், டீச்சர் இல்லாத நேரத்தில் பேசுகிறவன்.........என எல்லோருக்கும் 25 காசு ஃபைன். என் கூட படிஞ்ச 90% மாணவர்களுக்கு 25 காசு என்பது பெரிய விசயம். காசு எல்லாம் கிளாஸ் லீடரிடம் இருக்கும், தினமும் டீச்சரிடம் கணக்கு காட்ட  வேண்டும். அந்த காசு எல்லாத்தையும் மொத்தமாக சேர்த்து வருட கடைசியில் அதிகமாக முதல் மூன்று ரேங்க் எடுத்தவர்கள், தமிழில் அதிகம் மதிப்பெண் எடுத்தவர்களுக்கு, பேனா, பென்ஸில், ஸ்கேல்......என பரிசு வழங்குவார். எனக்கு ஒரு பேனா, இரண்டு பென்சில் கிடைத்ததாக ஞாபகம்.
5 நாள் சுடலைமாட சாமி கோவில்கொடை. 5 நாள் கரடிமாட சாமி கோவில்கொடை என வருடத்தில் அந்த 10 நாட்கள் மட்டும் பாடம் எதுவும் நடக்காது. நடக்காது இல்லை நடத்த விட மாட்டார்கள். பெரிய பெரிய கூம்பு ஸ்பீக்கர் எல்லாம் பள்ளி முன் இருக்கும் மரத்தில்தான் இருக்கும். பள்ளியில் கடவுள் வாழ்த்து முடிந்தவுடன் ஸ்பீக்கரில் சாமிப் பாட்டு ஆரம்பமாகிவிடும். அவர்கள் வைக்கும் சவுண்டிற்கு, சில மாணவர்களுக்குள் சாமியே இறங்கி ஆடியிருக்கிறார்.
இதுமாதிரியான ஒரு திருவிழா நாளில்தான், அப்பா பள்ளிக்கூடத்திற்கு வந்து ‘’பையன் எப்படி படிக்கிறான்’’ன்னு டீச்சரிடம் கேட்க, ‘’படிப்பெல்லாம் நல்லாத்தான்  படிக்கிறான், கடையநல்லூர் குசும்புதான் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு’’ன்னு சொல்லிடுச்சு. இதுதான் சந்தர்ப்பம்னு எங்கப்பா வீட்டுல இருந்து எழுதி எடுத்துட்டு வந்த மொத்த டயலாக்கையும் மூச்சுவிடாம சொல்லிட்டாப்புல. அதுல ஒன்னு, எங்கப்பா படிக்கிற போது எங்க தாத்தா அவர் கிளாஸ் டீச்சர்ட சொன்ன அந்த டயலாக் ‘’முட்டிக்கு கீழ விட்டு வெளுத்துருங்க டீச்சர்’’. சொல்லிவிட்டு பெரிய மனுஷன் திரும்பி போகவும், ஸ்பீக்கரில் ‘’கோட்டய விட்டு வேட்டைக்குப் போனா சுடலமாடசாமி, சுடலமாட சாமியும் நீதான்........’’ன்னு பாட்டு ஒலிக்கவும் சரியாக இருந்தது. அதுவரைக்கும் கையால அடிச்ச டீச்சர், அந்த சம்பவத்துக்கு அப்புறமா பிரம்பால பின்னி எடுக்கும்.
இப்படி ராஜமாதா சிவகாமிதேவி மாதிரி இருந்த எங்க வனஜா டீச்சரயே நிலைகுலையச் செய்து நாற்காலியில் தடுக்கி விழும்படி ஒரு சம்பவம் நடந்தது. அவன் பெயர் முத்துச்சாமி. அவன நாங்க செல்லமா சுருக்கி ‘’முச்சாமி’’ன்னு கூப்பிடுவோம். அவன் மூன்று நாள் ஸ்கூலுக்கு வரல. நாலாவது நாள் வனஜா டீச்சர் கேட்டுச்சு ‘’எ மூதி மூன்னாள்ளு வர்ல, எங்க கிளிக்க போன’’. முச்சாமி ‘’புண்ணு டீச்சர்’’ன்னு சொன்னான். ‘’மைனருக்கு, எந்த எடத்துல புண்ணு’’ன்னு டீச்சர் கேட்டுச்சு. ‘’அந்த இடத்துல டீச்சர்’’ன்னு முச்சாமி சொல்ல டீச்சருக்கு புரியல. ‘’அதுதான் மூதேவி எந்த இடத்துல’’ன்னு கொஞ்சம் சவுண்டா கேட்க, முச்சாமி ரொம்ப மெல்லுசா ‘’அந்த்த்த்த்த.....இடத்த்த்துல டீச்சர்’’ன்னு காலை ஒடிக்கு வைத்துக்கொண்டு இடுப்பை லைட்டா ஆட்டிச் சொன்னான்.
டீச்சருக்கு ‘’இடம்’’ புரிஞ்சு போச்சு. இருந்தாலும் முத்துச் சாமி மேல நம்பிக்கை இல்லை. பொய் சொல்லுவதாக நினைத்து ‘’அப்படியா, காட்டுடா, புண்ண பாக்கலாம்’’ன்னு டீச்சர் சொல்ல, அவனும் ‘’வேணா டீச்சர்’’ன்னு ரெண்டு, மூனு தடவ வெக்கம் கலந்த சோகமா சொன்னான். டீச்சர்க்கு கோவம் அதிகமாகி எழுந்து ‘’பொய் சொல்லுதியோ, அவுருல பாப்போம்’’ன்னு சொல்லி முடிக்குறதுக்குள்ள, முச்சாமி டவுசரை ..................... (எஸ் யூ ஆர் ரைட்). டீச்சர் பதறிப் போய் முகத்தை திருப்பிக்கொண்டு ‘’பரதேசி, பரதேசி, நம்புதேன், மூடுல மொதல்ல’’ன்னு சொல்லியவாரே நாற்காலியில் தடுமாறி விழுந்துவிட்டார். எங்களுக்கு அதைப் பார்த்து (அய் மீன், அந்த சம்பவத்தை பார்த்து) சிரிப்பு வந்தாலும் 25 காசு போய்விடுமே என்று பயந்து அடக்கிக்கொண்டோம். அடுத்த ஒரு வாரம் வனஜா டீச்சர் ‘’எப்ப என்ன நடக்குமோ’’ங்குற மாதிரியான பீதியான மனநிலையிலேயே இருந்தார்.
விசயம் அதோடு முடியவில்லை,
மதியம் பாடவேலையில் சாந்தி டீச்சர் கணக்கு பாடம் எடுக்க வந்தது. அல்ஜிப்ராவோ, ஏதோ ஒரு கணக்கு பாடம். எடுத்துக்கொண்டிருக்கும் போது ‘’முதல் கூட்டுத்தொகையை, ரெண்டாவது கூட்டுத்தொகையால் வகுக்க வேண்டும்’’ன்னு சொல்லிவிட்டு
‘’என்னடா முச்சாமி புரிஞ்சிச்சா, ‘’வகுக்க’’னும்டா ‘’வகுக்க’’னும், ‘’அவுக்க’’னும் இல்ல’’ என சொல்ல மொத்த கிளாஸும், வனஜா டீச்சர் சம்பவத்துக்கும் சேர்த்து சிரித்தது. (சாந்தி டீச்சர் கிளாஸுக்கு 25 பைசா ஃபைன் கிடையாது). பாவம் முச்சாமி சூம்பிப் போனான், ஏன்னா அவனுக்கு உண்மையிலேயே புண் இருந்தது. ‘’அது எப்படி உனக்கு தெரியும்?’’னு கேட்காதீங்க. உச்சா போகும் போது எல்லா நாளுமா வானத்தைப் பார்பார்கள்? சில சமயங்களில் கண்ணு அங்க இங்க போகத்தான் செய்யும்.
-----------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

செவ்வாய், ஜூன் 06, 2017

பாக்கிஸ்தானி ஜிந்தாபாத்.

ராகுல் டிராவிட் என்னைக்கு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாரோ, அன்னையில இருந்து கிரிக்கெட் மீது இருந்த ஆர்வம் கொறஞ்சு போச்சு.  ஆனா என்னைக்கு ‘வி. வி. எஸ். லட்சுமனனை’யெல்லாம் 20-20க்கு செலக் செஞ்சானுங்களோ அன்னைல இருந்து ‘’இந்த கிரிக்கெட்டெல்லாம் அழிஞ்சாத்தான் என்ன?’’ன்னு தோண ஆரம்பிச்சிடுச்சு
எங்க ஆபிஸில் ஒரு பாக்கிஸ்தானி இருக்கிறான். அவன் சொல்லித்தான் அன்று இந்தியா-பாக்கிஸ்தான் மேட்ச் என்பதே தெரியும். முன்னாடியெல்லாம் இந்தியா-பாக்கிஸ்தான் மேட்ச் என்றால் ஒரு மாதத்திற்கு முன்பாகவே ‘’ஸ்கூல எப்படி கட் அடிக்கலாம்’’, ‘’எந்த தாத்தாவ சாவடிக்கலாம்’’.....என பக்காவாக ஸ்கெட்ச் போட்டு ரெடியாவோம். இப்போது அதுமாதிரியான பெரிய இண்டிரஸ்ட் யாருக்குமே இல்லை என்றுதான் நினைக்கிறேன்.
பழைய கம்பெனியில் நான் கேம்பில் தங்கியிருந்தேன். என்னோட புராஜெக்ட்டில் அன்சர்னு ஒரு பாக்கிஸ்தானி இருந்தான். என்னய பார்க்கும் போதெல்லாம் ஏதோ ஒரு அனாத புள்ளய பாக்குறது மாதிரி ஆதரோவோடு பார்ப்பான். பேசும் போது கேன்ஸர் பேசண்டிடம் பேசுறமாதிரி ரொம்ப கருணையா பேசுவான்.   முதலில்,  ‘’நாம துபாய்க்கு புதுசுங்குறதுனால இப்படி ஆதரவா இருப்பதாக’’ நினைத்தேன்.
ஒரு நாள் என்னுடய கேபினுக்கு வந்தான். ஆதரவு ஐந்து கிலோவை, கருணை கால் கிலோவோடு பிசைந்து (எப்போதும் போல) பேசினான். அவன் பேசும் தோணியைப் பார்த்த போது, ஏதோ என்னிடம் கேட்பதற்கு தயங்கி நிற்பதுபோல் தெரிந்தது. கொஞ்ச நேரத்திற்குப் பின்பு அவனாகவே கேட்டான். ‘’உனக்கு எப்படி இந்த சின்ன வயதில் சொட்டை விழுந்தது?’. ‘’அதே கேள்வி’’ நான்கு திசைகளிலிருந்தும் எக்கோ அடித்தது.  எந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாம, இந்தியாவுல இருந்து ஓடி வந்தேனோ அதே கேள்வி. ‘சிவாஜி’ பட வசனம்போல ‘’இன்னும் எத்தனவாட்டிடா இந்த கேள்விய கேப்பீங்க”ன்னு என்னை நானே நொந்துகொள்வேன். ‘’எங்க வீட்டில் எல்லோருக்கு இப்படித்தான், எங்க தாத்தா, அப்பா, அண்ணன்....’’ என சேலம் சிவராஜ் சித்த வைத்திய சாலைக்கு அடுத்தது  எனது பரம்பரை பாரம்பரியம்தான்னு சொன்னேன்.
‘’நீ ஏன் விக்கு வைக்கக்கூடாது?’’ என்று கேட்டான். ‘’இல்லடா, விக்கு எல்லாம் சரிப்பட்டு வராது, அலர்ஜி பயம் இருக்கிறது, அதுமட்டுமல்ல எந்த இடத்திலாவது விக் கழண்டு விழுந்தால் ரொம்ப அவமானமாகப் போகும்’’ என்று கூறினேன். ‘’அப்படியெல்லாம் இல்லை, அலர்ஜி எல்லாம் வராது, கிளிப் டைப் விக் எல்லாம் இருக்கிறது, அது எங்கயும் கழறாது..’’ என கூறிக்கொண்டே ஆள் காட்டி விரலை அவனது காது பக்கத்தில் அழுத்தி விக்கை தூக்கிக் காட்டினான். ஆடிப் போனேன். யாரோ என் பிரடியில் விரகுக் கட்டையால் அடித்தது போன்று இருந்தது.
அப்பதான் தெரிந்தது அந்த ஷண்டாலன் கண்ணில் தெரிந்தது கருணை இல்லை அத்தனையும் குரூரம் என்று. அவன் ஒரு கிரிக்கெட் பைத்தியம். பாக்கிஸ்தான் உள்ளூர் மேட்ச்சைக் கூட விடாமல் பார்த்துவிட்டு, என்னிடத்தில் கமெண்டரி பண்ணிக்கொண்டிருப்பான். பக்கத்து ரூம் வேறு. இந்தியா-பாக்கிஸ்தான் மேட்ச் என்றால் பிரியாணி சமைத்து வைத்து உலக பாக்கிஸ்தானிகளை எல்லாம் அழைத்து வந்து பெரிய கும்பலாக மேட்ச் பார்ப்பான்.
பாக்கிஸ்தான் தோற்றுவிட்டால், ஒரு குயர் நோட்டு, பேனாவுடன் அவன் ரூம் பக்கத்தில் நின்று கொண்டால் போதும். உருது, ஹிந்தி மொழிகளிலுள்ள அனைத்து கெட்ட வார்த்தைகளையும் எழுதிவிடலாம். ‘’தற லோக்கல்’’ கெட்ட வார்த்தை தெரிந்துகொள்ளவும் ஒரு வழி உண்டு. ‘’இவன எதுக்கு எடுத்தோம்’’னு செலக்சன் போர்டுக்கும் தெரியாம, ‘’நம்மள எதுக்கு எடுத்தானுங்க’’ன்னு அவனுக்கும் தெரியாம ‘முஹம்மது கைப்’ மாதிரி கொஞ்சப் பேர் பாக்கிஸ்தான் டீமிலும் இருப்பான். அவனப் பத்தி அந்த நேரத்தில் அன்சரிடம் லைட்டா கிளறிவிடவேண்டும். நமக்கு சுட சுட ‘’தற லோக்கல்’’ கெட்டவார்த்தை டேட்டா பேஸ் தயார்.
இப்ப இருக்குற கம்பெனியில் ஒரு பாக்கிஸ்தானி இருப்பதாக சொன்னேன்ல, அவன் பெயர் நவீத். அவன் தான் என்னுடய அரபி டிரான்ஸ்லேட்டர். சில சமயங்களில் நான் பேசும் ஆங்கிலம் எதிர்தரப்பு அரபிக்காரனுக்கு புரிந்து ‘’ஒகே. ஒகே’’ என்பான். அந்த ‘’ஒகே ஒகே’’வைக்கூட நவீத் எனக்கு மொழிபெயர்த்து ‘’ஒகே ஒகே’’ என்பான். அந்த அளவிற்கு வெகுளி. நிறைய பாக்கிஸ்தானிகள் வெகுளிகள் தான் (நான் பார்த்தவரை). கொஞ்சம் வயதானவர்களை ‘’சாச்சா” (சித்தப்பு) என்றோ ‘’ஜனாப்’’ (உயர்திரு) என்றோ கூப்பிட்டுவிட்டால் ரொம்ப குஷியாகிவிடுவார்கள். தனியா ஒரு பாக்கிஸ்தானி சாப்பிட்டு பார்த்ததில்லை. ஒரு ரொட்டி என்றாலும் நாலு பேர் சுத்தி இருந்துதான் சாப்பிடுவார்கள்.
இங்கு முக்கால்வாசி டாக்ஸி டிரைவர்கள் பாக்கிஸ்தானிகள் தான். பெரும்பாலானவர்களுக்கு இந்தியாவில் ‘’மதராஸி’’ என்றால் தெரியவில்லை. எல்லோருக்கும் ரஜினிகாந்த்தை தெரிந்திருக்கிறது, ஆனால் அவர் படம் பார்த்ததில்லையாம். ‘’ஏக் து ஜே கேலியே’‘ படம் தெரிகிறது ஆனால் அதில் நடித்தவர்தான் கமல் என்று தெரியவில்லை. ‘’அந்த படத்தில் கமல் பேசுவாறே அந்த பாஷைதான் எங்க பாஷை’’ என்பேன்.  ‘’இல்ல இல்ல’’ என்றால் என்ன அர்த்தம்? என்று கேட்பார்கள் (அந்த படத்தில் கமல் அதிகமாக ‘’இல்ல இல்ல’’ன்னுதான் சொல்லுவாராம்)
நவீத், நிறைய விசயங்கள் பேசுவான். எல்லா நாட்டு செய்திகளைப் பற்றியும் தெரியும். என்னோட மேனஜெர் ஒரு ஜோர்டானி. அவரிடம் பேசும் போதுகூட அந்த நாட்டு அரசியலைப் பற்றி அவருக்கு தெரியாத சில விசயங்களைச் சொல்லுவான். ஜோர்டான் பற்றி தெரிந்து வைத்திருப்பவன் பக்கத்து நம் நாட்டைப் பற்றி தெரிந்து வைத்திருக்க மாட்டானா?. சர்ஜிகல் ஸ்ட்ரைக், டிமானிடேசைசேசன், மாட்டுக்கறி.......என எல்லாத்தைப் பற்றியும் கேட்பான்.
ஒருமுறை ‘’சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தியதில், எங்க நாட்டுமேல உங்களுக்கு பயங்கரமா கோவம் இருக்குமே?’’ன்னு கேட்டேன். ‘’எங்க கோவத்தை விடு, உங்க நாட்டுலேயே சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடந்ததுக்கான ஆதரம் கேட்டும் கொடுக்க முடியாம மோடி கோவமா இருக்காறாமே?’’ன்னு திருப்பிக் கேட்டான். ‘’இது எப்ப.......???’’ன்னு தெரியாம பேந்த பேந்த முழுத்தேன்.
‘’இந்தியாவில், மாட்டுக்கறி மேட்டரில் முஸ்லீம் அல்லாதவர்கள் கூட நிறைய போராட்டம் செய்கிறார்கள். அதுமாதிரி அவங்களோட பிரட்சனைக்கு முஸ்லீம்கள் நீங்க போராடுவீங்களா?’’ன்னு கேட்டான். ‘’பாலுங்குறது உங்க பேரு, தேவர்ங்குறது நீங்க வாங்கின பட்டமா?’’ன்னு கேட்டுவுடனே பொழேர் பொழேர்னு அறை விழுமே. அதுமாதிரி இருந்துச்சு எனக்கு, ஆனா பதில் சொல்லியாகனுமே.
‘’நாங்களும்..........போர்ராட்டம்........ பண்னுவ்வோம்ம்ம், ஆனா போலிஸ் எங்களை மட்டும் துறத்தி துறத்தி அடிக்கும்’’ன்னு இழுத்து சொன்னேன்.
 ‘’எதுக்கு?’’ன்னு கேட்டான்.
‘’ஆமா , அவர்களுக்கு பிரட்சனைன்னா குரான், ஹதீஸ்ஸை ஆராய்ந்து, உலமாக்கள் சபை, ஜமாத் எல்லாத்தையும் கலந்து ஆலோசித்து போராட்டம் பண்ண சென்றால்........., ‘’ஏண்டா போராட்டம் முடிஞ்சு ஒரு வாரம் ஆகுது இப்ப எங்கடா வந்திங்க’’ன்னு கேட்டு போலிஸ் ஓட ஓட விரட்டி அடிக்கத்தானே செய்யும்’’ன்னு சொன்னத கேட்டு ரொம்ப நேரம் சிரிச்சான்.
நவாப் ஷெரீப் ஆட்சி பற்றி கழுவி கழுவி ஊற்றுவான். அரசை விமர்சிக்கும் போது, யாரும் ‘’ஆன்டி பாக்கிஸ்தானி, இந்தியாவுக்கு போ’’ன்னு சொல்லமாட்டாங்களான்னு கேட்டேன். ‘’ஆண்டி ஆண்டிதான் அதுல என்ன பாக்கிஸ்தான் ஆண்டி, இந்தியா ஆண்டி’’ன்னு கண்ணடித்தான்.
இந்த விஷயத்துல பூராப் பயலும் நம்மள மாதிரியே..............

---------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

செவ்வாய், மே 23, 2017

அப்துல்லா

நான் இப்போது, ஜித்தாவில் ஒரு பர்னீச்சர் ஷோ ரூம் புராஜெக்டில் இருக்கிறேன். அது ஒரு ஸ்வீடன் கம்பெனி என்றாலும் வியாபார ஒப்பந்தப்படி சவுதி நாட்டில் ஒரு பெரிய பணக்காரரின் கீழ் வருகிறது. கான்ட்ராக்டரை மேற்பார்வை இடும் வேலை எங்கள் கம்பெனிக்கு. எங்களை மேற்பார்வை இடுவதற்காக கிளைண்டில் இருந்து இரண்டு பேர் உண்டு. அதில் ஒருவன் பெயர்தான் அப்துல்லா.
அப்துல்லா, சென்ற வருடம்தான் இஞ்சினியரிங் முடித்துள்ளான். வயது என்ன 23 இருக்கும். எனக்கு அவனுக்கும் கிட்டத்தட்ட 10 வயது வித்தியாசம். (‘’அப்படியென்றால் உன்னோட வயது 13 தானா?’’ என்று கேட்கவேண்டாம்). ஆனால் பார்பதற்கு எனக்கு அண்ணன் போல் இருப்பான். அவனுக்கு அரபி மொழியைத் தவிற எதுவும் தெரியாது. எனக்கு அரபியில் எதுவுமே தெரியாது. என் பெயரையே நான் தமிழில்தான் சொல்லுவேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
என் மேனாஜர் என்னிடம் ‘’இன்று என்ன வேலை நடந்தது? நாளை என்ன வேலை ஆரம்பம்? என்பதை அவனிடம் விளக்கவேண்டும்’’ என்றார்.
‘’விளங்கிடும்’’ என்றேன்.
‘’என்ன?’’ என்று திரும்பக் கேட்ட மேனஜரிடம், ‘’இல்ல, விளங்குவது போல் விளக்கிவிடலாம்’’ என்று தலையை ஆட்டி ஆட்டிக் கூறினேன். சீமான் ‘’பச்சை தமிழன்’’ என்றால், அப்துல்லா ‘’அடர் பச்சை அரபி’’. இஞ்சினியரிங்க் கூட அரபி மொழியில்தான் படித்திருக்கிறான். ‘’டைல் புளோரிங்க்’’ ‘’வால் பிளாஸ்டரிங்க்’’ என்பது கூட அவனுக்கு அரபியில்தான் தெரியும்.
அவனை சமாளிக்கும் வேலை என் தலையில் வந்தபின்பு, நான் செய்த முதல் காரியம் அரபி டிரான்ஸிலேட்டர் டவுன்லோடு செய்ததுதான். ‘’ஆங்கிலம் தெரியாது, இவனெல்லாம் என்ன படித்திருப்பான்’’ என்று எதிலும் அவனை அலட்சியம் செய்த என் போன்றவர்களுக்கு செருப்பால் அடித்தது போல் ஒரு சம்பவம் நடந்தது. ஷோ ரூமில் சில மாற்றங்கள் செய்யும்படி கிளைண்ட் சொன்னார்கள். நாங்களும் காண்டிராக்டரிடம் சொல்லி அதை முடிக்கச் சொன்னோம்.
ஆனால் அப்துல்லா, ‘’இதை இப்படி செய்தால் இங்கிருக்கும் மொத்த எடையும் இந்த பகுதிக்கு வரும், அங்கு ஒரு கதவு வேறு இருப்பதால் அதனால் அந்த எடையை எடுத்துக்கொள்ள முடியாது.....................’’ என படம் வரைந்து பாகங்கள் குறிக்க ஆரம்பித்துவிட்டான். அவன் அரபியில் சொன்னாலும், எனக்கு அவன் வரைந்த படத்தைப் பார்த்து புரிந்துகொண்டேன். எல்லோரும் ஆடிப் போய்விட்டோம். அன்னைக்கு அவன் அதை தடுத்திருக்கவில்லை என்றால், இன்று மோடிக்கு ‘’சவுதி சிறையிலிருந்து உயிரைக் காக்குமாறு’’ மனு அனுப்பிக்கொண்டிருந்திருப்பேன்.    
மொழிக்கும் அறிவிற்கும் சம்பந்தமில்லை என்று படித்திருந்தாலும், நேரில் உணர்ந்த தருணம் அது. அஞ்சு வருசம் அரியர் வைத்து எழுதும் சப்ஜெக்டை எல்லாம் ‘’இதெல்லாம் உங்க ஊருலதாண்ட பஸ்ஸு, சவுதியில இதுக்கு பேரு குப்ப லாரி’’ன்னு பிரிச்சு மேய்வான். இதுக்கும் அவன் ஆவரேஜ் ஸ்டூடண்டாம். சீமான்னு நெனச்சவன் சர்.சி.வி.ராமனா தெரிஞ்சான்.
அப்துல்லாவுக்கு ஆங்கிலம் கற்றுக்கொள்ள பயங்கரமான ஆர்வம். ‘’நான் உனக்கு அரபி கத்துத் தாரேன், நீ எனக்கு இங்கிலீஷ் கத்து கொடு’’ன்னு சொன்னான். ‘’அதுக்கு முதல்ல உனக்கு இங்கிலீஷ் தெரிஞ்சுருக்கனுமே’’ன்னு உங்களுக்கு தோணுனதுமாதிரி எனக்கும் தோனுச்சு. ‘’நான் பேசுவதுதான் இங்கிலீஷ்னு நெனக்கிறவன் ஆசையில ஏன் மண்ணள்ளிப் போடனும்’’னு விட்டுட்டேன். அவன் என்னிடம் ஆங்கிலத்தில் பேசுவான், நான் அவனிடம் அரபியில் பேச வேண்டும் என்பதுதான் டீல்.
ஒருமாதிரியான வேற்றுமொழிப் படங்களைத்தான் சப் டைட்டில் இல்லாமல் பார்ப்பேன். சப் டைட்டில் இல்லாமல் அரபியை கற்றுக்கொள்வது எனக்கு பெரிய கஷ்டமாக இருந்தது. ஆனால் அப்துல்லாவிற்கு அப்படி இல்லை. பய பயங்கர ஸ்மார்ட். அதிக முன்னேற்றம். நம்மா நாக்கு இன்னும் ‘’அக்கிள் மாபி’’ ‘’சுகுல் கலாஸ்’’ ரேஞ்சிலேயே நிக்குது.
அவனிடம் நிறைய பேசும்படி ஆனது. கிளைண்ட் கூட இருப்பதினால், மேனஜரும் ஒர்க் விசயமாக விவாதிப்பதாக நினைத்துக்கொள்வார். ஆனால் மியா கலீபா கலைச் சேவையைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருப்போம். பேசிய பின்புதான் தெரிந்தது,  இன்னும் அப்துல்லா அந்த விசயங்களில் அப்டேட் ஆகவில்லையென்று. லுசி சென், ஷாசா க்ரெய், சன்னி லியோன்....பற்றி சொல்லி சில வெப் ஐடிகளையும் கொடுத்திருக்கிறேன்.
செல்லப் பெயராக அவனுக்கு நாங்கள் வைத்திருப்பது ‘’அதிர்ச்சி அப்துல்லா’’. எதெர்கெடுத்தாலும் அதிர்ச்சியாகி, கண்களை விரித்து ‘’வல்லா...’’என்பான். எங்கள் கல்லூரியில் பெண்களும் படிப்பார்கள் என்றபோது ‘’வல்லா..’’ என்று அதிர்ந்தான் பொருத்துக்கொண்டேன். ‘’வல்லா...உங்க அப்பாவிற்கு ஒரு மனைவிதானா’’ என்று அதிர்ந்தான் பொங்கிவிட்டேன்.
அப்துல்லாவின் அப்பாவிற்கு மூன்று மனைவிகள், சவுதி, அபுதாபி, பஹ்ரைன் என ஒவ்வொரு நாட்டிலும் ஒன்று. நான்காவது என்று கேள்விப்பட்டால் மவுத்தாகிவிடுவாய் என்று அவன் அம்மா எச்சரித்ததால் அடங்கியிருப்பதாக சிரித்துக்கொண்டே சொன்னான். எனக்கு அவன் சிரிப்பைப் பார்த்து ஆச்சிரியமாக இருந்தது. ‘’எப்படி உன்னால் இதை ஈஸியாக எடுத்துக்கொள்ள முடிகிறது?’’ என்று கேட்டால், ‘’அது அவர் வாழ்க்கை, அவர் வாழ்கிறார், எந்த விதத்திலும் எங்களுக்கு குறைவைக்கவில்லை. ஒரு வேளை என் அம்மாவிற்கு வருத்தம் இருக்கலாம், ஆனாலும் அவள் சம்மதத்துடன்தான் மற்ற திருமணங்களும் நடந்தது’’ என்றான்.
அவன் அப்பா பெரிய பிசினஸ் மேன், கொஞ்சம் பணமுள்ள ஆளும் கூட, அதனால் மூன்று மனைவிகள், அவர்களின் குழந்தைகளை எந்த குறையின்றி கவனித்துக்கொள்கிறார். அப்பாவிடம் பணம் இருக்கிறது என்பதற்காக இங்கு யாரும், அப்பாவை நம்பி இருப்பதில்லையாம். அவனவன் சம்பாத்தியத்தில்தான் அவனவன் கல்யாணம் செய்துகொள்ளவேண்டுமாம். நம் நாட்டின் முறைக்கு நேர் எதிர் இங்குள்ள கல்யாண சம்பர்தாயம். எல்லா செலவும் மாப்பிள்ளயோடது. தனி வீடு, மணமகளுக்கான நகை, கல்யாண செலவு.... என அனைத்தும். கல்யானத்திற்கே பெரிய தொகை தேவைப்படும் என்பதற்காகவே நான் வேலக்கு வந்ததாகக் கூறினான் அப்துல்லா.
அடிக்கடி நம்பிக்கை இன்றி ‘’ஒரே கிளாஸ்?, கேள்ஸ்ஸும் இருப்பாங்களா?’’ என்று கேட்டு அதிர்ந்தவனுக்கு என்னுடய கிளாஸ் குரூப் போட்டோவைக் காட்டினேன். அதிலிருக்கும் அனைவரையும் பார்த்தபின்பு ‘’இதுக்கு பேசாம நீ சவுதியிலேயே வந்து படிச்சிருக்கலாம்’’னு சொன்னான். ‘’உனக்கு எத்தனை தம்பி தங்கை’’ என்று கேட்டேன். இரண்டு மூன்று தடவைக்கு மேல் விரல்களை மடித்து மடித்து எண்ணிக்கொண்டிருந்தான்.
அப்துல்லாவிற்கு இந்தியாவின் கடற்கரை சுற்றுலாத் தளங்களுக்கு வர மிகவும் ஆசை. கல்யாணமாகி ஹனிமூனுக்கு கோவா வருவதாகச் சொன்னான். இப்படித்தான் இருக்கும் ‘’கோவா’’ என்று நெட்டில் சில போட்டோக்களை காண்பித்தேன். அதில் சில பெண்கள் பிகினியில் குளிப்பது போல் இருந்தது. ‘’இப்படி இருக்குமா?’’ என்று அதிர்ச்சியாய் கேட்டான். ‘’இது என்ன பிரமாதம் இத விட ஒரு ஸ்பெசல் அய்ட்டம் ஒன்னு இருக்கு?’’ன்னு ஒன்னொரு போட்டோவைக் காண்பித்தேன். கல்யாணத்திற்கு முன்பாகவே கோவா வருவதாக சொல்லியிருக்கின்றான். 
-------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

புதன், மே 17, 2017

அந்த ரசத்த ஊத்தூ....


எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு, காலேஜ் முடிக்கும் போது என்னோட எடை 52 கிலோ, பெங்களூரில் நாலு வருசத்தில் அது 58 கிலோவானது. அதற்குப் பின்பு எடை படிப்படியாக கூடினாலும், கடைசி மூன்று வருடங்களாக 69 கிலோதான். 69 கிலோவாக இருந்தது எனபதைவிட, 69 கிலோவாக இருக்கும்படி வைத்துக்கொண்டேன். ஏன்னா, 69 என்பது ஒரு கிக்கான நம்பர் என்பதற்காக. மே 13, சன்னி லியோனின் பிறந்த நாள் என்று தெரிந்த இந்த சமூகத்திற்கு 69ன் மகிமையை மேற்கொண்டு விளக்க விருப்பமில்லை.

அடிக்கடி எடை பார்க்கும் பழக்கம் இல்லை. விமானத்தில் லக்கேஜ் 30 கிலோவிற்கு மேல் அனுமதிப்பதில்லை என்பதால் ஊருக்குச் செல்லும்போது, லக்கேஜ் எடைபார்க்கும் சமயத்தில் மட்டும் என்னுடய எடையையும் பார்த்துக்கொள்வேன். இந்த முறையும் 69. சொந்த சமயலினால் நாவில் ஏற்பட்ட சூனியத்தை, ஊரில் இறங்கியதும் நல்ல சாப்பாடு சாப்பிட்டு பரிகாரம் செய்யவேண்டும் என்று எண்ணினேன். இந்த எண்ணம் ஒவ்வொரு முறையும் ஏற்படுவதுதான்.

காலையில் புரோட்டா என்றால், மூழி கடை, தோசை என்றால் தென்காசி தோசை கார்னர். மதியம் சைவம் என்றால் ராஜ் மெஸ், அசைவம் என்றால் அல்மாசி ஹோட்டல். இரவு, பார்டர் ரஹ்மத் புரோட்டாவுடன் நாட்டுக்கோழி பிரை. இந்த மாதிரி லிஸ்ட் ரொம்ப பெருஸ்ஸா இருக்கும். ஆனால், ‘’என்னாது புரோட்டா பத்து ஓவாயா?’’ என விலைவாசியை நினைத்து ஏங்கும் போதே லிஸ்ட் தனக்குத் தானே தீவைத்துக்கொள்ளும்.

எங்க அம்மாவிடம் ஒரு ஸ்பசாலிட்டி இருக்கு. ‘’என்னடா சமைக்கனும்?’’ ன்னு கேக்கும்போது, ‘’எதாவது சமம்மா’’ன்னு சொல்லிறனும். அதவிட்டுட்டு, அத பண்ணு, இத பண்ணுன்னு சொல்லிட்டா, சோலி சுத்தம். ‘’புள்ள ஆச ஆசயா கேட்டுட்டா’’ன்னு பரபரப்புல பால் ஊத்தாமலே பால் பாயசம் வைக்கும். இப்படித்தான் ஒருதடவ, ‘’இறால் குழம்பு சாப்பிட்டதே இல்ல’’ன்னு சொல்ல, பாதி ராத்திரில எங்க அப்பாவ எழுப்பிவிட்டு இறால் வாங்கிவரச் சொல்லி, இறால் குழம்பு வச்சிச்சு. ஆனா, வாய்லதான் வைக்கமுடியல. அன்னையோட இறால் திங்குற ஆசை விட்டுப்போச்சு. இன்னமும் சூப்பர் மார்க்கெட்ல, இறால்ல பாக்கும்போதெல்லாம், அந்த ஃபன்னி இன்சிடெண்ட்தான் ஞாபகம் வரும்.

இம்முறை, டெங்கு காய்ச்சல் காரணமாக, ஜமாத் ‘’இறைச்சி, மீன் சாப்பிட வேண்டாம்’’ என்று வேண்டுகோள் விடுத்திருந்தது. பொதுவா ஜமாத் ஏதாவது சொன்னால் எவனும் மதிக்கிறது இல்லை. ஆனா இந்த விஷயத்தில் ‘’ஜமாத் சொன்னதே கட்டளை, கட்டளையே அதன் சாசனம்’’னு குனியச் சொன்னால் குப்புறவே படுத்துவிட்டார்கள். ‘முள்ளங்கி’ய வச்சு தொக்கு செய்யலாங்குற விசயமே எனக்கு இந்த தடவதான் தெரியும்.  ‘கொள்ளு’ங்குற ஒரு ஐட்டம் குதிரை திங்குறதுன்னு கேள்விப்பட்ட எனக்கு, கொள்ளுத் துவயல வச்சே மூனு நாள் சோறு போட்டாங்க. மறுநாள், அதுல கொஞ்சம் தண்ணி ஊத்தி ‘’கொள்ளுச்சட்னி’’ங்குற பெயருல தோசைக்குத் தந்தாங்க.

சவ்சவ், கொத்தவரங்காய், தடிமங்காய்....என ஒன்னாம் வகுப்பு பாட புத்தகத்தில் படம் பார்த்த அனைத்தும் நான் சாப்பிடும் தட்டில் ஒருநாள் கெடக்குமென்று கனவுகூட கண்டதில்லை. ஏழு தலைமுறைக்கு முன்பாக நாங்கள் சைவ பிள்ளைமார்களாம், முன்பு ஒரு முறை அப்பா சொன்னார். எனக்கு என்னவோ இந்த முறை கர்வப்சி முறையில் திரும்ப சைவ பிள்ளைமார்களாகவே மாறிவிட்டதுபோல் ஆகிவிட்டது. ஹரே ஓ சம்போ.

இன்னும் ரெண்டுநாள் இருந்திருந்தா, புண்ணாக்குல பாயாசம், தவிடுல புளிக்குழம்புன்னு தர லோக்கலுக்கு போயிருப்பாங்க. ‘’நான் அடிச்ச பெல்லு, ஆண்டவனுக்கு கேட்டுச்சோ இல்லையோ, அரசாங்கத்துக்கு கேட்டுருச்சு, அடிச்சாம்பாரு அப்பாய்ண்ட்மெண்ட் ஆர்டரு’’ன்னு வடிவேல் சொன்னதுமாதிரி ‘’நான் கதரி அழுதது கடவுளுக்கு கேட்டுச்சோ இல்லையோ கம்பெனிக்காரனுக்கு கேட்டிருச்சு, அடிச்சாம் பாரு மெயிலு’’ன்னு கிளம்பி ஓடிவந்துட்டேன்.

பையன் ஒரே வெஜ்ஜா சாப்பிடுறானேன்னு கொஞ்சம் இரக்கப்பட்டு இரண்டு கல்யாண வீட்டு விருந்திற்கு போகச் சொன்னார்கள். முன்னாடி கல்யாண வீட்டு விருந்துன்னா குஸ்கா சோறு, முதல் ரவுண்ட் மட்டன் குழம்பு, ரெண்டாவது ரவுண்ட் தால்சா சாம்பார்னு ரவுண்ட் கட்டி சாப்பிடலாம். இப்ப எல்லா கல்யாண வீட்டிலும் பிரியாணி என்றாகிவிட்டது. முதல்ல சொன்ன ஐட்டங்களில் இருக்கும் டேஸ்ட் பிரியாணியில் இருப்பதில்லை. ரெண்டு கல்யாண வீட்டிலுமே விருந்து பரிமார வெளி ஆட்களுக்கு கான்ராக்ட் விட்டிருந்தார்கள்.

ஏதோ, கட்சி பொதுக்கூட்டத்திற்குப் போய், பிரியாணி பொட்டலத்தில் சாப்பிட்டது போலாகிவிட்டது. ‘’வாங்க’’ என்று அழைப்பதற்கு சொந்தக்காரர்களோ அல்லது தெரிந்தவர்களோ இல்லை. கேட்டரிங்க் ஆட்கள் முதல்தடவை வந்து பிரியாணியை தட்டுவதோடு சரி, அதற்கு பின்பு யாரும் எட்டிக்கூட பார்க்கவில்லை. தண்ணி வேண்டும் என்றாலோ, அல்லது சாம்பார் வேண்டும் என்றாலோ கத்தி அழைத்தபின்பு ஏனோ தானோ என்று வந்து விழம்பிவிட்டு போவார்கள்.

முன்னாடியெல்லாம், விருந்து நடக்கும்போது, சாப்பாடு பரிமாறுவது எல்லாமே சொந்த பந்தங்கள்தான். போதும் என்றாலும் ‘’அவரு அப்படித்தான் சொல்லுவாரு கொஞ்சமா வச்சிவுடு’’ என ஒரு பெரியவர் சொல்லிமுடிப்பதற்குள், சோறு இலையில் விழுந்துவிடும். அந்த கவனிப்பிற்காகவே பெல்டை லூஸ் செய்து இலையில் இருப்பதை காலி செய்யவேண்டும். கான்ராக்ட் ஆட்கள் பரிமாருவதையாவது பொருத்துக்கொள்ளலாம், ஆனால் அவனுங்க போட்டுவருகிற கம்பெனி டீ சர்டைத்தான் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கர்மம் என்ன கலர்னே கண்டுபிடிக்க முடியவில்லை. ‘’துவைச்சாவது போட்டுவரலாமேடா’’ன்னு சொல்லத் தோனும்.

ஊரில் இருந்து கிளம்பும் போது, லக்கேஜை வெயிட் பார்த்தபின்பு எனது வெயிட்டை பார்த்தேன். 74 கிலோ. முப்பது நாளில் எப்படி 5 கிலோ கூடியது என்று மயக்கமே வந்தது. எடை கூடியதுகூட எனக்கு கவலையில்லை ஆனால் 69 போய்விட்டதே என்ற கவலைதான் கண்ணை கெட்டியது. ‘’நம்மள பிரிஞ்சி போறத நெனச்சுத்தான் புள்ள கவலப்படுது’’ன்னு அம்மாவோட அன்பு அட்ராசிட்டி வேறு. இந்தியன் டாய்லெட்டில் குத்தவைத்து கக்கா போகும் போது மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது, பேலன்ஸ் மிஸ் ஆவதில் இருந்தே தெரிந்தது எடை கூடிய விசயம். ஆனால் 5 கிலோ என்பது மெடிக்கல் மிராக்கிள்.

முன்னாடி, ஊருக்குப் போனால், தாலுகா ஆபிஸ், ரெஜிஸ்டர் ஆபிஸ், பேங்க், லைசன்ஸ் ரினிவல், நகராட்சி என எங்காவது ஒரு வேலை இருக்கும். சாப்பிட்டபின்பு அங்க இங்கன்னு அலையும்போது எடை அதிகமாக வாய்ப்பு இருந்ததில்லை. இந்த முறை வெயில் விட்டு விளாசியதால் வெளியே எங்கும் நகரவில்லை. சாப்பாடு, தூக்கம், தூக்கம் சாப்பாடு என்றே நாட்கள் ஓடியது. இருந்தாலும் கத்தரிக்காய், முட்டைக் கோஸ், பீக்கங்காய் எல்லாம் சாப்பிட்டு 5 கூடியதை என்னால் இன்னும் நம்பவே முடியவில்லை.

எவன் எப்படிப் போனா என்ன நீ அந்த ரசத்த ஊத்து...........ன்னு வஞ்சனயே இல்லாம திண்ண நான், 69 யை மீட்டெடுக்க இப்போது வாக்கிங், ஜாக்கிங்க், டயட்டிங்ன்னு தீயா வேலை செஞ்சிக்கிட்டு இருக்கேன். 

----------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.