புதன், பிப்ரவரி 08, 2012

அய்யய்யோ.....என்னை ஆளாளுக்கு குழப்புறாங்களே!!!!!!!!!!!

நம் அனைவரின் மீதும், ஆண்டவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
ஒரு இலக்கிய விழாவிற்கு ரஜினிகாந்த் வந்தாலும் வந்தார், சாரு நிவேதிதாவும், மனுஷிய புத்திரனும் என்னமோ, சிம்பு, தனுஷ் ரேஞ்சுக்கு சண்ட போட ஆரம்பித்துவிட்டார்கள். எஸ் ரா என்று செல்லமாக அழைக்கப் படும் எஸ்.ராமகிரிஷ்ணனின், கனடா நாட்டின் இலக்கிய விருதுக்கான பாராட்டு விழாவில் மூலமாக இந்த கூத்து நடந்து கொண்டிருக்கின்றது. மனுஷிய புத்திரனின் உயிர்மை பதிப்பகம் இந்த விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தது. எனக்கு எப்படி எந்த ஒரு காரணமும் இல்லாமல், எந்த ஒரு புத்தகத்தையும் படிக்காமல், மனுஷிய புத்திரனை பிடிக்குமோ, அதே போல சாரு நிவேதிதாவைப் அறவே பிடிக்காத்தற்கும் காரணம் எதுவுக் கிடையாது.

ஆனால், சாரு நிவேதிதாவின் வாசகர் வட்டம் மிகப் பெரியது, அவரை மனதளவில் பலபேர் வெறுத்தாலும், அவரின் எழுத்துக்கள் அதனை மொழுகி பூசிவிடும். அவருடைய ஒரு வாசகரின் கட்டுரை எனக்கு அன்மையில் இணையத்தின் வாயிலாக படிக்கக்கிடைத்தது, ஆயிரம் காரணங்கள் இருக்கலாம் நீங்கள் சாருவை வெறுப்பதற்கு, ஆனால் அவருடைய எழுத்து ஒன்று போதும் அவரைப் நேசிப்பதற்கு. மற்ற எழுத்தாளர்களுக்கும் சாருவுக்கும் மியப்பெரிய வித்தியாசம் உண்டு, அது எப்படியாப்பட்டது என்றால், ஒரு படத்தின் சி.டியை தியேட்டர் பிரிண்டில் பார்ப்பதற்கும், புளூ ரேய் பிரிண்டில் பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசம் என்று எழுதியிருந்தார். இந்த ஒரு விசயம் என்னை ரொம்ப ஈர்த்தது. அதன் காரணமாகவே சமீபத்திய சாருவின் வெளியீடான எக்ஸைல் புத்தகத்தினை படித்துவிடவேண்டும் என்று எண்ணி, ஆர்டர் செய்யப் போகின்றேன்.

சாருவை நான் வெறுக்க ஒரு காரணம், இன்று நித்தி என்றழைக்கப்படும் முன்னால் நித்தியானந்த சுவாமிகள் தான். இவரின் அன்புக்கு பாத்திரமாக இருந்த சாரு, ஜலபுலஜங்க் சி.டி வருவதற்கு முன்பு, நித்திதான் “லோகத்துல உள்ளவாலை காப்பாத்தும் கருணை கடல், இவரின் புகழ் பத்து பவர் ஸ்டாரின் புகழுக்கு சமம் என்றெல்லாம் அடுக்கி சில வார பத்திரிக்கைகளில் எழுதிக்கொண்டிருந்தார். ஆனால் சி.டி பூஜையில், தன்னை சேர்க்காமல், தனியாக பூஜையை நட்ததிவிட்ட கடுப்போ என்னமோ, பின்பு நித்தி பற்றி கேட்டால், பொத்தி கொண்டு போய்விடுவார். பேஸ் புக்கில் தனது வாசகியிடம், தனது வக்கிறத்தினை காட்டியது, மது பான பாட்டிலுடன் போட்டவிற்கு போஸ் கொடுப்பது....... என்று தன்னுடய் இமேஜினை கெடுத்துக் கொண்டார்.

எனக்கு ஒன்னு மட்டும் புரியவில்லை, கிட்டதட்ட அனைத்து எழுத்தாளர்களும், கவிஞர்களும், மது, மாதுவிற்கு அடிமையானவர்கள் தான் அது என்ன நம்ம சாருவை மட்டும் வெறுக்கின்றார்கள். ஏன், கவியரசன் கண்ணதாசனே தன்னுடய சுயசரிதை புத்தகத்தில், தான் சில வேசிகளிடம் சென்றதாகவும், மதுவுக்கு அடிமைப்பட்டு கிடந்ததாகவும் எழுதியுள்ளார். ஒரு வேளை சாருவும் தன்னுடய சுயசரிதையில் இதயெல்லாம் எழுதியவுடன், நல்லவர் என்று சொல்ல தொடங்கிவிடுவார்கள் போல.

இவங்க சண்டயில எஸ்.ராவை பற்றி யாரும் கண்டுகொள்ளாதது ஆச்சர்யம். எஸ். ராமகிருஸ்ணன் ஒரு உண்ணதமான எழுத்தாளர். சாரு என்னமோ, ரஜினிகாந்தின் மூலமாகத்தான் எஸ்.ராவை பலருக்கு தெரிந்திருக்கின்றது என்று சொல்லுவது, மடத்தனமான கூற்று, கண்டிப்பாக அந்த அரங்கத்தில் ரஜினிக்காக கூடியவர்கள் 1000 பேர் இருக்கலாம், ஆனால் அவர்களுக்கெல்லாம் எஸ்.ராவைத் தெரியாது என்று சொல்லுவது ஆகாது. 

நானும் ஒரு நடிகர் எதற்கு இந்த இலக்கியவாதியின் பாராட்டு விழாவிற்கு வரவேண்டும் என்று யோசனையில் இருந்தேன். ஆனால் அன்றய விழாவில் திரு.வைரமுத்து அவர்கள் பேசியபோது ஒரு விசயத்தினை சொன்னவுடன் தான் புரிந்தது, ரஜினியைத்தவிர வேறு யாரும் சிறப்பு அழைப்பாளர்களாக இருந்திருக்க முடியாது. திரு.ஜெயகாந்தனுக்கு ஞான பீட விருது அறிவித்தவுடன், காலையில் பெருங்கூட்டத்தினை தாண்டி சென்று அவருக்கு பொன்னாடை போர்த்தவேண்டும் என்று எண்ணிய வைரமுத்துவிற்கு பெரும் அதிர்ச்சி அங்கு யாருமே இல்லாத்தைப் பார்த்த பின்பு, அதன் பின்னர் அவர் அறிந்து கொண்டாராம் முந்தய இரவே ரஜினிகாந்த் வந்து கை கொடுத்து பாராட்டிவிட்டு சென்றது. ரஜினிகாந்த் ஒரு இலக்கியவாதியாகவோ, ஒரு நடிகராகவோ அங்கு வரவில்லை, மாறாக தன்னுடய ஒரு ஆத்மாத்தமான நண்பனுக்காக வந்திருந்தார் என்பது அவருடய பேச்சில் இருந்து தெரிந்தது.

பெரும்பாலும் இந்த மாதிரியான நிகழ்சிகளுக்கு ரஜினி போன்றவர்கள் வரும் போது, மீடியாக்கள், ரஜினிகாந்த் என்ன சொன்னார் என்பதை மட்டுமே பெரிதுபடுத்தி வெளியிடுகின்றன. அந்த நிகழ்சிகளில் ரஜினியை விட, அற்புதமாக பேசிய வைரமுத்து, ஞானசம்பந்தன் மற்றும் பலரின் பேச்சிகள் வெளிப்படுத்தப்படாமலேயே போய்விடுகின்றது. இந்த விழாவில் பேசிய வைரமுத்து, எஸ்.ராவின் சமீபத்திய ஒரு சிறுகதை தொகுப்பினை வாசகர்களுக்கு பரிந்துரைத்தார். அது “புத்தராவது சுலபம். ரஜினியின் மூலமாக சிலருக்கு எஸ்.ராவை தெரிந்திருக்கும் என்பது கொஞ்சம் உண்மையாகக் கூட இருக்கலாம், இந்த ஒரு சிறந்த எழுத்தாளனை அவர்களுக்கு அறிமுகப்படுத்திவைப்பதில் அவருக்குத் தான் பெருமையே ஒழிய, எஸ்.ராவிற்கு தரத்திற்கு எந்த குறையும் வரப்போவதில்லை.

கண்டிப்பாக அந்த விழாவிற்கு வந்து, ரஜினி கோச்சடயன் படம் பற்றியோ அல்லது, தனது மருமகனின் கொலைவெறி பாடலின் பேமஸ் பற்றியோ பேசியிருப்பாரேயானால் கண்டிக்கத்தக்கதாக இருக்கும். ஆனால் அவர் பேசியது, எழுத்தாளர்களுக்கு சிறந்த ஊதியம் கிடைக்கவேண்டு, அதன் மூலமாக நமக்கு இன்னும் சிறப்பான புத்தகங்கள் கிடைக்கும் என்று தானே பேசியிருக்கின்றார். மேலும் ஆண்டு தோறும் நடைபெறும் புத்தக கண்காட்சிகளில், அதிக அளவு புத்தகங்கள் விற்பனையாவது பற்றிய அவருடைய மகிழ்சியை பகிர்ந்து கொண்டிருக்கின்றார். இதுல என்ன தப்பு இருக்குங்குரேன்.......... இலக்கியவாதிகளுக்கு, நடிகர்களை கூட்டிக் கொண்டுவந்து பாராட்டுவிழா எடுக்கும் அளவிற்கு இலக்கியவாதிகள் தரம் தாழ்ந்துவிட்ட்தாக ஒப்பாறி வைக்கும் சாரு, ஏன் நடிகர்கள், இலக்கியவாதிகளை பாராட்டும் அளவிற்கு தங்களின் தரத்தினை உயர்த்திக்கொண்டிருக்கின்றார்கள் என்று நினைக்கக் கூடாது?
ஆனல், சாருவின் ஒரு கேள்விக்கு மட்டும் எனக்கு பதில் சொல்லமுடியவில்லை. ரஜினிகாந்த் உண்மையில் எஸ்.ராவை பாராட்ட வந்திருந்தால், எஸ்.ரா அல்லவா கடைசியாக பேசியிருக்கவேண்டும், ஏன் எஸ்.ரா முன்னர் பேசிவிட்டு, ரஜினியை கடைசியாக பேசவைக்கவேண்டும்?. என்னைப் பொருத்தவரையில் அது தவறுதான், கண்டிப்பாக விழா நாயகனே கடைசியில் பேசியிருக்க வேண்டும். அதற்காக ரஜினியை முன்னாடி பேசவிட்டுவிட்டு, எஸ்.ரா கடைசியாக பேசியிருந்தால், எஸ்.ராவின் பேச்சை கேட்க அந்த அரங்கத்தில யாரும் இருந்திருக்கமாட்டார்கள் என்பது கொஞ்சம் மிகைப்படுத்தி கூறப்படுவது. இதனை என்னால் நம்ப முடியவில்லை, ஒரு வேளை அப்படி நடந்திருந்தால் உண்மையான, எஸ்.ராவின் வாசகர்கள் அடயாளம் காணப்பட்டிருப்பார்கள்.
இப்படியா நடிகர்களை போட்டு தாக்கும் சாரு, சொல்லுறதெல்லாம் ரொம்ப கரெக்ட் என்று முடிவெடுப்பதற்குள், மனுஷிய புத்திரன் தன்னுடிய பேஸ்புக்கில் சாருவின் முந்தய ஒரு கட்டுரையை பிரசுகம் செய்திருந்தார், சரி படித்துவிட்டு முடிவெடுக்கலாம் என்றால், அதில் சாரு, நடிகை திரிசாவிற்கு அழைப்பு விடுத்திருக்கின்றார் (தப்பா நினைக்காதீங்க, முழுவதுமாக படிங்க), எதுக்குன்னா, பாலிவுட்டில் நடிகை பிரியங்கா சோப்ரா போன்று இவர்களும் புத்தகத்தினை பிரபல படுத்தவேண்டுமாம்!!!!!!!!!!!!!. அது ஏன் திரிஷாவிற்கு அழைப்பு விடுத்தார் என்றால், அவருடய தமிழ் நன்றாக இருக்குமாம் அதையும் ஒரு நடிகர் (கமல்) சொன்னதால் தானாம் (ஷ்ஷ்ஷ்.....யெப்பா இப்பவே கண்ணகெட்டுதே)
சாரு இப்பவெல்லாம், நடிகர்கள் மாதிரி அடிக்கடி கெட்டப்ப மாத்திக் கொண்டிருகிறார். ரொம்ப நாளைக்குப் பிறகு சாருவின் புத்தக வெளியீட்டு விழாவில், என்னடா மணிரத்தினம் நிக்கிறாருன்னு பார்த்தா, அட சாஜ்ஜாத் நம்ம சாரு தான்!!!!!!!!!!.
இவரு சொல்லுறது உண்மையா?, பொய்யா?, இவரு நல்லவரா? இல்ல கெட்டவரா?

---------------------------------------------------------------------------------------------------------------------------குழப்பத்துடன் யாஸிர்.

செவ்வாய், பிப்ரவரி 07, 2012

முகப்புப் புத்தகம்.


நம் அனைவரின் மீதும் ஆண்டவனின், சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.

பேஸ் புக் இணையதளதம் ஆரம்பித்து 9 வருடங்கள் கடந்துவிட்டதாம், நான் இதில் அக்கவுண்ட் தொடங்கியது சுமார் 3 வருடத்திற்கு முன்புதான். கிட்டத்தட்ட தொடங்கிய நாள் முதலில் இருந்து, அனைத்து நாட்களிலும் ஓப்பன் பண்ணி பார்க்காமல் இருந்தது இல்லை. அதனுடனான நட்பு அதிகரித்துக் கொண்டிருக்கின்றது.

எங்கள் கல்லூரி நண்பர்கள் இறுதியாண்டு இறுதியில் படிக்கும் போது (2004), யாஹீவில் குரூப் மெயில் ஒன்றினை உருவாக்கி (சிவில் லையன்ஸ்) அதன் மூலமாக, எங்களுடய தொடர்பினை தொடர்ந்து கொண்டிருந்தோம், யாருக்காவது வேலை கிடைத்துவிட்டது என்றால், வெளி நாட்டிற்கு போவது என்றால், கல்யாணத்திற்கு அழைப்பிதல் அனுப்பிவைப்பது என்றால் அதன் மூலமாகவே நடைபெற்றுக் கொண்டிருந்தது. பின்பு ஜி மெயிலின் ஆதிக்கம் மேலோங்கவே, ஆர்குடின் மூலமாக எங்களுடைய நிலைகளை புதுப்பித்துக் கொண்டிருந்தோம். புகைப்பட்த்தினை இணைப்பது, அதற்கு வண்ட வண்டயா கருத்து எழுதுவது என்று கொஞ்சம் ஆனந்தம் அதிகமானது, அதுவே எங்களுடைய குரூப் மெயிலுக்கு பாலூத்த ஆரம்பித்தது. பின்பு பேஸ் புக் வந்த மாத்திரத்தில், குரூப் மெயிலுக்கு பாடையே கட்டப்பட்டுவிட்டது.

முன்பெல்லாம், ஒருவனுக்கு கல்யாண செய்தி குரூப் மெயிலில் வந்தால், கிட்டத்தட்ட வாழ்த்து செய்திகள் வந்து குவிந்தவண்ணமாக இருக்கும். ஆனால் இப்போது 33 பேரில் வெரும் 2, 3 பேர் மட்டுமே வாழ்த்துக்களை அதன் மூலமாக அனுப்பிவைக்கின்றார்கள். எல்லாம் பேஸ் புக்கின் மாயம். அதுவே பேஸ் புக்கில் அப்டேட் செய்துவிட்ட அடுத்தகணம் 20 லைக், 15 கமெண்ட வந்துவிடுகின்றது. எனக்கு என்னமோ, டுவிட்டர், கூகுள்+ யைவிட, பேஸ் புக் தான் பிடித்திருக்கின்றது.

எகிப்து நாட்டில் நடைபெற்ற அதிபருக்கு எதிரான புரட்சியின் வீரியத்தினை அதிகப்படுத்தியது இந்த பேஸ்புக் தான், அதன் அடையாளமாக ஒருவர் தனக்கு பிறந்த குழந்தைக்கு பேஸ் புக் என்று பெயர் சூட்டி நன்றி தெரிவித்துள்ளார். இது போல, எனக்கும் நன்றி சொல்லவேண்டியுள்ளது, எனது பள்ளிக் கூட நண்பர்களையும், கல்லூரியின் மற்ற துறை தோழர்களையும், ஜொல்விட்ட சில பிகர்களுடனும், நலம் விரும்பும் தோழிகளுடனும், பழைய கம்பெனியின் சக ஊளியர்களையும் என்னுடன் இணைத்தமைக்காகவும், எங்களின் கருத்துக்களை பறிமாறிக் கொண்டமைக்காகவும் நன்றி சொல்லித்தானே தீரவேண்டும்.

எல்லா நன்மைக்குப் பின்னாலும் ஒரு தீமையிருக்கும் அது மாதிரி, என்னமோ காலையில ஆபிஸ்க்கு வந்ததும் வராததுமாக, எனக்கு எதிர்த்தாப்புல இருக்குற எனது சக ஊளியனின் பேஸ பாக்குறதுக்கு முன்னாடி, பேஸ் புக்கை பார்த்தே ஆகவேண்டும்.  அவனுக்கே பேஸ் புக்கின் மூலமாகத்தான் காலை வணக்கம் சொல்லுறது (பயபுள்ள அதுவும் பேஸ் புக்க பார்த்துக்கிட்டுதான் இருக்கும்). 5 நிமிசத்துக்கு ஒரு முறை, என்ன அப்டேட் ஆகியிருக்குன்னு பார்த்துக்கிட்டே இருக்க தோனுது. எதுவும் அப்டேட் ஆகலியா, “என்னங்கடா செய்யுறீங்க??? பேஸ் புக்குல போஸ்ட் பண்ண முடியாத அளவுக்கு அப்படி என்னதாண்டா வேலை பாக்குறீங்கன்னுநாமளே வால்ல எழுதனும். அதுக்கு 10 லைக் கிடைக்கும், 5 கமெண்ட் கிடைக்கும்.

மூன்று வருடம் முடிந்த பின்னாடி கொஞ்சம் யோசித்து பார்த்தால், அதுவும் பொண்ணுங்க கிட்ட பேசினது மாதிரித்தான், எல்லாமே வெட்டி வேஸ்ட். எதுவுமே உருப்படியா போஸ்ட் பண்ணவில்லை என்பது தான் உண்மை. ரஜினிகாந் ஜோக்ஸ், விஜய் ஜோக்ஸ், பவர் ஸ்டாரின் பவர் புல் பன்ச் டயலாக்ஸ், என்று கலைகட்டும். உலகத்தில் கூகில் இணையதளத்திற்கு அடுத்தபடியாக, பேஸ் புக்கினை உபயோகிப்பவர்களே அதிகம், அதில் இந்தியர்கள் இரண்டாம் இடமாம் (இந்த பதிவு எழுதும் வரை).
ஒரு சர்தார்ஜிக்கு, ஒருவன் பேஸ்புக்கினைப் பற்றி சொல்லிக் கொடுத்தான். அதன் அருமை, பெருமைகளில் மயங்கிய சர்தார்ஜி, உடனே எனக்கு ஒரு அக்கவுண்ட் அதில் ஓப்பன் பண்ணவேண்டும் என்று கூறி, அதற்கான விபரங்களை அந்த நண்பனிடம் கேட்டார், நண்பரும், உங்களுக்கென்று ஒரு ஐ.டி உருவாக்கிக் கொள்ளுங்கள், பாஸ்வேர்டும் கொடுத்துவிடுங்கள், நண்பர்களை இவ்வாரு இணைத்துக் கொள்ளுங்கள் என்று தன்னை, அவருடைய பிரண் லிஸ்டில் இணைத்து உதாரணம் காட்டிக் கொடுத்தார், உடனே அக்கவுண்ட் ஓப்பன் ஆகிவிடும், பின்பு நீங்கள் வாலில் (Wall) எதாவது எழுதினால் அது உங்களுடைய நண்பர்களுக்கு செல்லும் என்று கூறிவிட்டு அந்த நண்பர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

அவர் சொன்னபடி எல்லாம் செய்துவிட்டு, பேஸ்புக் வாலில் என்ன எழுதுவது என்று யோசித்து, யோசித்து எழுதியதை, மறுநாள் அவருடய நண்பர் பார்த்து மயங்கியே விழுந்துவிட்டார். சர்தார்ஜி அப்படி என்ன எழுதினார்னா......
.

.

.

.

.

.

.

இங்கு யாரும் சிறுநீர் கழிக்க கூடாது.

---------------------------------------------------------------------------யாஸிர்.

வியாழன், பிப்ரவரி 02, 2012

கூடங்குளம் – எதை நோக்கி????????


நம் அனைவரின் மீதும் ஆண்டவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவுவதாக.
புது புது பிரட்சனைகள் வரும் போது, மக்கள் பழைய பிரட்சனைகளை மறந்துவிடுவார்கள். ஆனால் முல்லை பெரியாரு பிரட்சனை முடிந்த பின்னாடியும், அதற்கு முந்தய (தென்கோடி தமிழனின்) பிரட்சனையாக இருந்த கூடங்குளம் பிரட்சனை இன்னும் வீரியம் அடைந்து கொண்டேயிருக்கின்றது. எனக்கு தெரிந்து கூடங்குளத்து பிரட்சனையை ஒரு தலைபட்சமாகவே பார்க்கும் பத்திரிக்கை என்றால் அது, தினமலராகத்தான் இருக்கும். காங்கிரஸ் அரசை இந்த ஒருவிசயத்திற்காக மட்டுமே பாராட்டிக் கொண்டிருக்கின்றது.

என்னுடைய அறிவுக்கு எட்டியவரை, நான் அணு உலைக்கு ஆதரவாளன் தான். அதே சமயத்தில் அதன் எதிர்பாளர்களுக்கு எதிராக நிற்கக்கூடியன் அல்ல. எதிர்பாளர்களின் உயிர் பயத்திற்கு மரியாதை கொடுப்பது மற்றும் உணர்வுக்கு மதிப்பளிப்பதும் அவசியம் தான். ஆனால் எத்தனையோ கட்ட பேச்சுவார்தைகள் முடிந்தும் இன்றளவும் முடிவு எட்டப்பட்டாதது துரதிஷ்டம்.

காலங்கள் மாற, மாற நவீன தொழில் நுட்பங்கள், விஞ்ஞானங்கள் மாற்றம் அடைந்து கொண்டுதான் இருக்கின்றன, அதனுடன் நாம் நம்மை இணைத்துக் கொண்டு செல்லும் போதுதான் அதன் பலனை அடையமுடியும். எங்க ஊரில், ரயில்வே ஸ்டேசன் 2 கி.மீட்டர் தூரத்தில் இருக்கின்றது. எப்போதாவது இரயிலுக்கு செல்லவதற்கு தயாராகும் போது, என்னடா இது எவ்வளவு தூரம் இருக்கின்றது, இது நம்ம பஸ் ஸ்டாண்டை ஒட்டியிருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் என்று நினைத்துக் கொள்வதுண்டு. ஏன் 2.கி.மீட்டர் தூரத்தில் அது அமைக்கப்பட்டது என்ற காரணத்தை எங்க ஊரு பெரியவர்களிடம் கேட்கும் போதுதான் தெரிந்தது, முதலில் இரயில் பாதை ஊருக்கு பக்கத்தில் தான் அமைக்க அரசாங்கம் திட்டமிட்டதாம், ஆனால் அன்றய அறிவுஜீவிகள், அதனுடைய உண்மையான பலன்/பயன் தெரியாமல், ஓ, ஓன்னு சப்தம் வரும், யாராவது பாதையை கடந்து செல்லும் போது ரயில் ஏறி செத்துவிடுவார்கள், அதிர்வு ஏற்பட்டால் விவசாயம் பாதிக்கும்....... என்று அதி பயங்கர யோசனையை தெரிவித்து, ஊருக்குள் வருவதை தவிர்த்துவிட்டார்கள்.
அதே போலத்தான் இதுவும், இன்றய தேவைக்கு நம் நாட்டிற்கு முக்கியமான ஒன்று அணு உலை. அதனுடைய ஆதாயங்களை பார்த்து அதற்கு ஆதரவு தெரிவிக்கவேண்டும். எனக்கு ஒரு நாளைக்கு 10 நிமிடம் கூட கரண்ட் கட் ஆககூடாது என்று நினைப்பவர்கள், அணு உலைக்கு எதிராக நிற்பது என்பது விந்தையாக உள்ளது. எனக்கு பசி அடங்கவேண்டும் ஆனால் நான் சாப்பிடமாட்டேன் என்றால் என்ன அர்த்தம்.

இன்னும் போபால் அணு உலையின் தாக்கத்தினை மட்டும் பேசிக் கொண்டு, அதன் கொடுமைகளை மனதில் வைத்துக் கொண்டு நவீன அறிவியலின் முறையில் உருவாக்கப்பட்டுள்ள கூடங்குள அணு மின் நிலையைத்தினை எதிர்த்து நின்று போராடுவது, எத்தனை சரி என்று தெரியவில்லை. டெல்லியில் விமான விபத்து ஏற்பட்டு விட்டது, சென்னையில் கப்பல் தண்ணீரில் மூழ்கிவிட்டது என்று எண்ணிக் கொண்டு, பயணத்தினை தவிர்த்தால் நாம எப்படித்தான் வெளி நாட்டிற்கு போகுறது?????. இப்படி நவீன விஞ்ஞானத்தினை குறை சொல்லிக்கொண்டேயிருந்திருந்தால், இன்னும் கோவனத்துடன் தான் தமிழன் இருந்திருப்பான்.

சிம்பொணி இசை ஆல்பம் செய்துவிட்டபின்பு இளையராஜா, அது பற்றிய ஒரு பத்திரிக்கை பேட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார், பொதுவாக இந்தமாதிரியான சிந்திப்புகளில், பத்திரிக்கைகாரர்கள் கேள்வி கேட்பார்கள், அவர் பதிலளிக்கவேண்டும். ஆனா நம்மாளுங்களுக்கு சிம்பொனின்னா என்னனு எவனுக்கு தெரியும், பாவம் இளையராஜா மட்டும் அவராகவே இரண்டு மணி நேரம் பேசிவிட்டு போய்விட்டார். அது மாதிரித்தான், பல கட்டபேச்சுவார்தைகள் பலனளிக்காமல் போனதற்கு ஒரு வேலை, விஞ்ஞானிகள், யுரேனியம், டெட்ரானியம்,...... என்று அவர்களின் பாஷையில் பேசியிருந்திருக்கலாம், உயிருக்கு என்ன உத்திரவாதம் என்று கேட்க சென்றவனுக்கு, யுரேனியம், டெட்ரானியம் அவங்கள்ளாம் யாரு?ன்னு கேட்கத்தான் தெரியும்.
இப்போது இந்த அணுவுலைக்கு எதிரான போராட்டம், எங்கே மதக்கலவரமாக மாறிவிடுமோ என்ற அச்சப்பாடு ஏற்படுகின்றது. இதுவரை எங்கிருக்கின்றார்கள் என்றே தெரிந்திராத ஒரு பிரிவு அமைப்பினர், சில பாதிரியார்கள் மூலமாகத்தான் இந்த போராட்டம் நடைபெருகின்றது என்று அறிந்துகொண்டு, நாட்டின் நலம் காக்க வந்திருக்கின்றோம் என்று வந்து நிற்பது உச்சகட்ட நகைச்சுவை. பாவம் அவனுக்கு தெரியவில்லை 50%மான அவர்களின் மக்களும் அந்த போராட்டக் குழுவுக்குள் உண்டு என்று. திருநெல்வேலி மாவட்ட செயலாலர் ஆகிவிட வேண்டும் என்று நினைக்கும் காங்கிரஸ்ஸார் சிலர் அணுவுலையை உடனே திற என்ற கோஷத்துடன் வெரும் 10 பேருடன் அலைகடலென திரண்டு வருவது அய்யோ பரிதாபம்.

இந்த மாதிரியான செயல்கள், எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதற்குச் சமம். எதிர்பவர்களின் போராட்டத்தில் இருக்கும் அரசியல் தலைவர்கள் அல்லாது, சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள் என்று தேர்வு செய்து அவர்களிடம், அரசாங்கம் தன்னுடைய பாதுகாப்பு அம்சங்களை தெளிவுபடித்தி, அவர்களுக்கு புரியவைக்க வேண்டும். அதைவிடுத்து வெட்டருவா, வேல்கப்போடு பேச்சுவார்த்தைக்கு போனால், நாளை அணுவுலை போராட்டம் என்பது மதக்கல்வரம் என்றாகிவிடும். திரு. அப்துல் கலாம் அவர்கள் சொன்ன தீர்வுகளையும் ஆராய்ந்து பார்க்கலாம், ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பதில்லை.

அணுவுலையால் நன்மைதான் என்று நல்லதே நினைப்போம்,  நல்லதே நடக்கும்.

------------------------------------------------------------------------------- யாஸிர்.