வியாழன், நவம்பர் 06, 2014

--ஜோலிக்கே பீச்சே கியா ஹே?--

+2வில் நல்ல மதிப்பெண்களின் மூலமாக காலேஜில் சீட் பெற்ற பழங்கள், டப்பின்னால் சீட் பெற்ற கோமான்களின் புதல்வர்கள், சிபாரிசின் பெயரால் சீட் வாங்கிய சீமான், சீமாட்டிகளின் பிள்ளைகள் எல்லாம் முதலாமாண்டில் A, B, C, D என அனைத்து பிரிவுகளிலும் இடம்பெற்றுவிட, E பிரிவு மட்டும் ஈ ஓட்டிக்கொண்டிருந்தது. அது பின்பு தமிழகத்தில் பல பகுதிகளில் தேடிப் பொருக்கிய மகா புருஷோத்தம பொறுக்கிகளால் முழுமை பெற்றது. அதில் ஒருவன், 1990 களில் நடிப்பில் கோலாய்ச்சிக் கொண்டிருந்த நடிகரின் பெயர் கொண்டவன், ஒரு தமிழக முதல்வரின் தொகுதிக்கு உட்பட்ட சமையல் (குக்) கிராமத்துக்காரன். அந்த வகுப்பின் மற்றொருவன்தான் இதை எழுதிய யோக்கிய குல விடிவெள்ளி.

ஆங்கிலத்தில் புலமைவாய்ந்த ‘ஆல் அப்பாட்டக்கர்ஸ்’ எல்லாம் A, B, C, D யை ஒட்டுமொத்த குத்தகைக்கு எடுத்துவிட, E  பிரிவில் முக்கால்வாசிப் பேர் அப்போதுதான் தன்னுடய பெயரை ஆங்கிலத்தில் எழுதிப் பழக பயிற்ச்சி எடுத்துக்கொண்டிருந்தோம். எல்லோரும் டிக்சனரி சைசுக்கு இங்கிலீஸ் கில்மா புக் படித்துக்கொண்டிருக்கும் போது 15 பக்கம் கொண்ட ‘சரோஜா தேவி’க்கு கூட வழியில்லாமல் வாடிக்கொண்டிருந்தோம். இப்படி ஆங்கிலத்தின் அட்ரோசிட்டியினால் நொந்துபோயிருந்த எங்களுக்கு ஒரே அறுதல் நடிகரின் பெயர்கொண்டவன் மட்டும்தான். சொந்த கதை, சொந்தக்காரர்களிடமிருந்து கடன்வாங்கிய கதை, நண்பர்களின் கதை, நாட்டாமைக்காரரின் கதை.... என பல வெரைட்டியில் பலான பலான கதைகள் வைத்திருந்தான்.

அதைக் கேட்பதற்காகவே அவனைச் சுற்றி ஒரு கூட்டம் இருக்கும். இவன் கூட்டிக்கொண்டு சென்ற கதை, இவனைக் கூட்டிக்கொண்டு சென்ற கதை என அவனுடய ஆட்டோ பயோகிராஃபிக்கு ஏக கிராக்கி. அவனுடய ‘முதல் அனுபவ கதை’ மட்டும் முன்னூறு முறைக்குமேல் சொல்லியிருப்பான். அவனுக்கு அதை சொல்லுவதில் அவ்வளவு ஆனந்தம், எங்களுக்கு அதை கேட்டு கிரங்கி கிடப்பதற்கு பேரானந்தம். என்னிடம் யாராவது ‘உனக்கு தமிழ்ல புடிச்ச பாட்டு என்ன?’ என்று கேட்டால், உடனே நான் ‘‘குக்குக்....குக் ஜோலிக்கே பீச்சே கியா ஹே... ஜோலிக்கே பீச்சே’’ என்றுதான் சொல்வேன். ‘’அது தமிழ் இல்லடா, தெலுங்கு’’ என்று என் அறிவுக்கண்ணை திறந்தது மட்டும் அல்லாது, அந்த பாடலின் உள்ளார்ந்த அர்த்தத்தையும் விளக்கி வகுப்பெடுத்த மகான் அவன், சாரி அவர்ர்ர்ர்.

ஒரு கட்டத்தில், நண்பனின் ‘’டெண்டுகொண்டாய்’’ பற்றி கேள்விப்பட்டு, ஆங்கில பீட்டர்கள் எல்லாம் ‘ஹேய் யூ...டமில்ல நீ காமம் டிராப்பாக, டிராப்பாக சொல்லும் ஸ்டோரிய எங்களுக்கும் சொல்லு’ என லுங்கியில் வந்து நிற்க, காலேஜில் தன் பெயர் பரவுவதற்காக பெருமைப்பட்ட நண்பன் முதல்முறையாக தன் பெயர் நாரிக்கொண்டிருப்பதை உணர்ந்து தன்னுடைய கொட்டாயை மூடி சீல் வைத்தான். சில்க் ஸ்மிதா செத்தபோது எப்படி கோட்டானக்கோடி ரசிகர்கள் திகைத்து நின்றார்களோ அதே போன்ற திகைப்பு எங்களுக்கு.

பின்பு இரண்டாவது வருடம், மெக்கானிகல், எலக்ரிக்கல், கம்யூட்டர்,.... என முதலாமாண்டு நண்பர்கள் அவர்ரவர் பிராஞ்சுகளுக்கு சென்றபின்பு, சிவில் டிப்பார்ட்மெண்ட்க்கு மட்டும் அவன் சொந்தாமாகிவிட்டான். நாங்க எல்லாம் இளையராஜாவின் ரசிகர்களாக இருந்தபோது, அவன் மட்டும் ராஜாவின் வெறியனாக இருந்தான். நாங்கள் கதைக்காக காத்திருந்து ‘‘அதெல்லாம் சொல்லமுடியாது’’ என அவன் முறுக்கிகொண்டு நிற்கும்போதெல்லாம் ராஜாதான் எங்களுக்கு உதவினார். ‘‘சே, ராஜா, ராஜாதாண்டா முதல்மரியாதை படத்துல எல்லாப் பாட்டுக்கும் என்னமா மியூசிக் போட்டிருக்காரு’” என்று ஆரம்பித்துவிட்டால் போதும், கொஞ்ச நேரம் இளையராஜா பெருமைகளை போற்றிவிட்டு, எங்களை கரும்புக்காட்டு இதிகாசத்துக்கும், சோளக்காட்டு சொர்க்கலோகத்துக்கும் அழைத்துச்செல்வான். நாங்களும் ஆளுக்கொரு தலவாணியை அமுக்கிப் பிடித்துக்கொண்டு, வாயில் வண்டி வண்டியாக நீர் வடிய (வாயில் மட்டும்) கேட்டுக்கொண்டிருப்போம்.

நான்காவது வருடம் ஹாஸ்டலில் கம்யூட்டர் வைப்பதற்கு அனுமதி கிடைத்தது. கம்யூட்டர், ஐ.டி டிப்பார்ட்மெண்ட் பசங்க எல்லோரும் புராஜெக்ட் ஒர்க் என்ற பெயரில் ’சகீலாவின் சபல சல்லாபங்களையும், ரேஷ்மாவின் ரகசிய இரவுகளையும் கண்டுவிட்டு கேண்டினில் நின்று அடுத்த சில்க் சகிலாவா? ரேஷ்மாவா? என்று பட்டிமன்றம் நடத்தி எங்களை வெறியேற்றிக்கொண்டிருந்தார்கள். நாங்களும் காதுவழியாக கதைகேட்பது, புத்தகமாக படிப்பது என்ற பரினாமவளர்ச்சியின் இறுதியில் சி.டியில் வந்து நின்றாலும், அதைக் காண கம்யூட்டர்?. ‘’சிவில் பசங்களுக்கு எதுக்குடா கம்யூட்டர்?’’ என்று எங்களுடய கோரிக்கைகள் பலமுறை நிராகரிக்கப்பட்டு, பின்பு ‘’ஆட்டோக்காடில் புராஜக் பண்ணுவதால் கம்யூட்டர் வேண்டும்’’ என்ற பலகட்ட போராட்டத்திற்கு இறுதியாக வெற்றிகிடைத்தது.

‘மைசூர் மல்லிகே’, ‘மைடியர் மனீஷா’ போன்ற இதிகாசங்களைக் காண பத்து நாள் விரதம் இருந்து ஒருகையில் சி.டி, மறுமையில் தலையணையுடன் பதினொராவது நாள் கம்யூட்டர் முன்பு புட்பால், கார் ரேஸ் என விடியோ கேம் விளையாடிக்கொண்டிருக்கும் சிருவர்களை தலையில் தட்டி படிக்க அனுப்பிவைத்துவிட்டு, படத்தை பார்த்து பரவச நிலையை அடைவதை சொன்னால் புரியாது அதை அனுபவிக்கவேண்டும். ஒரு நேரத்தில், அந்த கம்யூட்டர் இதுமாதிரியான சாமி சி.டி தவிர்த்து வேறு சி.டிகளைப் போட்டால் வேலைசெய்யவே இல்லை என்ற நிலைக்குப் போய்விட்டது. எவ்வளவுதான் படம்பார்த்து பாகம் குறித்தாலும், நடிகரின் பெயர்கொண்டவன் சொல்லும் கதை அளவிற்க்கு கிக் இருந்ததில்லை. களவாணி படத்தில் காட்டாத பல கோணங்களை எங்களுக்கு அந்த நண்பன் காட்டியிருந்தான் (சொல்லியிருந்தான்).

இவன் சொல்லும் கதைகளைக் கேட்ட பல பேர் மிரண்டு போய் நின்றார்கள், ‘’இவன் சாதாரண ஆள் இல்ல, நாடி, நரம்பு, சதை, ரத்தம், புத்தி என எல்லாத்துலயும் கில்மாங்கி கலந்திருக்கும் ஒருத்தனாலத்தான் இப்படி சொல்லமுடியும்’’ என பலபேரின் பாராட்டைப் பெற்ற இவனிடம் எக்கச்சக்க கதை இருந்தாலும், ஏட்டில் ஏற்றக்கூடிய அளவிற்கு தகுதியான அவன் சொன்ன ஒரு சம்பவம்.

அது ஒரு பலான விஷயத்துக்கான பஞ்சாயத்து. நாட்டாமை சொம்போடு வந்தார். சொம்புக்கு வலதுபுரம் பிராது கொடுத்த பெண், இடதுபுரம் குற்றம்சாட்டப்பட்ட ஆண். பிராது என்னவென்றால் பிராது கொடுத்த பெண்ணின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு காரணம் இவந்தான் என்று எதிர்நிக்கும் ஆளைக் காட்டினால் அந்த பெண். சின்னஞ் சிருசுகள் ஒரு பக்கம், பெண்கள் ஒருபக்கம், என மொத்த ஊரே கூடிநின்று வேடிக்கை பார்த்தது. ‘’எல்லோரு முன்னாடியும் பச்சையாக எப்படி இந்த விசயத்தை பேசுவது’’ என்று நாட்டாமை யோசித்து, அவருடைய சமயோஜித புத்தியினால் அந்த ஆணைப் பார்த்து ‘இங்க பாருப்பா, அந்த பாறையில நீ துவச்சதா அந்த பொண்ணு சொல்லுது, நீ துவச்சதுனால பாறை உடஞ்சு போச்சு அதனால நீதான் தெண்டம் கெட்டனும், என்ன சொல்லுற?” என கேட்க

அந்த ஆணும் “இல்ல சாமி, இத ஏத்துக்க முடியாது, நான் போகும் போதும், வரும் போதும் பாத்திருக்கேன், இந்த பாறையில நிரயப் பேரு துவச்சியிருக்கானுங்க. சரி எல்லோரும் துவைக்கிறாங்களேன்னு நானும் போயி துவச்சிட்டு வந்தேன். உண்மை இப்படி இருக்க நான் மட்டும் எதுக்குங்க தெண்டம் கெட்டனும்” என பதில் சொன்னான்.

பிராது கொடுத்த பெண்ணோ “இல்லீங்க நாட்டாமை, மத்தவனுங்க துவைக்குறதுக்கும், இந்தாளு துவைக்குறதுக்கும் ரெம்ப வித்தியாசமுங்க, பத்தாளு துவைக்குறத, இந்த ஒத்த ஆளு துவைப்பானுங்க. அதனால இவந்தான் பாறையைக் கெட்டிக்கணும் சாமி, பாறையப் பத்தி உங்களுக்கு தெரியாதது இல்ல... நீங்கதான் நல்ல தீர்ப்பு கொடுக்கணும்” என அவளுடய வாதத்தை ஸ்ட்ராங்காக வைக்க

இன்னும் கொஞ்ச நேரம் இவளை பேசவிட்டா ஊருப்பய பேரு பூரா வெளியவந்திடும் என பயந்து, நாட்டமை பெண்ணுக்கு சாதகமாக, அந்த ஆணை தெண்டம் கட்டவைத்து தீர்ப்பு வழங்கினார்.

இனி நாட்டாமை.....

“நீ சொன்னமாதிரி பல பேர் போய், வந்து துவச்சிருக்கலாம், ஆனா அவங்கெல்லாம் துவைக்கும் போது பாறை பாறையாத்தான் இருந்துச்சு, அந்த அளவுக்கு பதமா பார்த்து, பயந்து துவச்சிருக்கானுங்க. அதுபோக, அந்த பொண்ணு சொன்னதுமாதிரி, நீ துவச்சதுமாதிரி வேற யாரும் அடிச்சு துவைக்கலையாம், மேலும் நீ துவச்ச போதுதான் பாறை உடைஞ்சும் போயிருக்கு, அதனால நீதானப்பா தெண்டம் கட்டனும், இதுதான் இந்த நாட்டாமையோட தீர்ப்பு, பஞ்சாயத்தோட தீர்ப்பு”.


---------------------------------------------------------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.