புதன், டிசம்பர் 16, 2015

நடிகன்னா மிதிப்போம்..

மழை வெள்ளத்தைப் பற்றி எழுதவில்லை என்றால் நீங்கள் ஒரு ‘’பிரபல வலைப்பதிவாளர்’’ கிடையாது, என்ற எழுதப்படாத விதியின் கீழ் இந்த கட்டுரை அவசரமாக எழுதப்படுகின்றது. ‘’ஆனா நீதான் பிரபல வலைப்பதிவாளரே கிடையாதே?’’ என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. ‘’பிரபலம்’’ என்பதை ஏற்கமறுப்பீர்கள் என்றால் ‘’ஓரளவு’’ என்பதை அதோடு இணைத்துக்கொள்ளவும் (அதுக்கும் கீழ் எல்லாம் இறங்க முடியாது). ‘’என்னடா? பிளாக் எழுத எதுவும் சப்ஜெக்ட் கிடைக்கலியா? கொஞ்ச நாளா எதுவும் எழுதல?’’ என்று சிலபேர் கேட்பதுண்டு. சப்ஜெட்டிற்கெல்லாம் பஞ்சமே கிடையாது. பேஸ்புக்கில் பத்து நிமிஷம் குந்தி இருந்தால் போதும், கொள்ள போஸ்ட் போடலாம். வர வர எழுதுவதற்கு கொஞ்சம் சோம்பேறியாக இருக்கிறது.

சென்னை வெள்ளத்தைப் பற்றி வட இந்திய மீடியாக்கள் மூச் விடாதைத் பற்றி இங்கு பல பேர் பொருமுவதை என்னவென்று சொல்வதுதென்றே புரியவில்லை. சென்னை வெள்ளம் என்றுதான் சொல்ல சொல்கிறோமேயொழிய தமிழ்நாடு வெள்ளம் என்று இல்லை. சென்னை மூழ்கிய அதே நாளில்தான், கடலூரும் மூழ்கியது ஆனால் தமிழ்நாட்டில் எத்தனை பேர் கடலூர் வெள்ளத்தைப் பற்றி பேசினோம்?, ஆக நாமேக்கே சென்னை வேறாகவும் கடலூரூர் வேறாகவும் தெரியும்போது வட இந்தியா மீடியா வந்து வட சுடவில்லை, சட்னி ஊத்தவில்லை என்று புலம்புவது என்ன நியாயம்?. நிவாரணப் பொருட்களின் மீது ஸ்டிக்கர் ஒட்டியதை வாய் கிழிய பேசும் நாம், காஷ்மீர் வெள்ளத்தில் தவித்தவர்களின் நிவாரணப் பொருட்களில் ‘’இது இந்தியாவின் பரிசு’’ என்று வாசகம் ஒட்டியபோது ‘’ஏன்?, காஷ்மீர் இந்தியாவில் இல்லையா?’’ என்று எதிர்த்து வாய் திறக்காதது எதற்கு?. அப்போது, நாம் மட்டும் அது வட இந்தியா என்று பார்க்கவில்லையா?.

ரஜினிகாந்தின் தற்போதைய சொத்து மதிப்பு பத்தாயிரம் கோடியாம். ஆனால் அவர் வெள்ள நிவாரணத்திற்கு கொடுத்தது வெறும் பத்து லட்ச ரூபாயாம். என்னமோ இவனுங்கதான் ரஜினிகாந்த் அக்கவுண்ட்ஸை எல்லாம் ஆடிட் பண்ணமாதிரி அள்ளிவிடுறது. லாரன்ஸ் ஒரு கோடி ரூபாய் கொடுத்ததால், லாரன்ஸின் மூத்திரத்தை ரஜினிகாந்த் குடிக்கனுமாம். அதுசரி என்றால், ரஜினி படத்தின் 100 ரூபாய் டிக்கெடை 500 ரூபாய்க்கி வாங்கி படம்பார்த்த நாம் ரஜினி மூத்திரத்தைதான் குடிக்கவேண்டும். அவ்வளவு மூத்திரத்திற்க்கு பாவம் ரஜினி என்ன செய்வார்?. எல்லா நடிகருக்கும், பணக்காரனுக்கும் ஒரு டிரஸ்ட் இருக்கும், அது எதற்கு என்று எவனுக்காவது தெரியுமா?. கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றுவதற்குத்தான் என்று நாம சொன்னாலாவது புரியுமா?. இவனிடம் இவ்வளவு சொத்து இருக்கிறது, ஆகையால் இவன் இவ்வளவு ரூபாய் நிவாரண நிதியாக கொடுக்கவேண்டும் என்று சொல்லுவதற்கு நீங்க யாருடா?. அப்படியென்றால், நான் நிதி கொடுக்கவேண்டும் என்றால் என்னுடய சம்பள ஸிலிப்பை யாரிடம் அனுப்பி, எவ்வளவு நிதி கொடுக்கவேண்டும்? என்று கேட்பது?.

கோச்சடையானில் பத்து கோடி, லிங்காவில் இருபது கோடி நஷ்டம் என்று ரஜினிகாந்த் அறிக்கைவிட்டால், அந்த நஷ்டத்தை கொடுக்க நாம் தயார் என்றால், ரஜினியை வெள்ள நிவாரண நிதிக்கு ஆயிரம் கோடி கொடுக்கச்சொல்லலாம். கவித்துவமான, காவியத்துவமான, இலக்கியத்துவமான ‘’லிங்கா’ படத்தை வெற்றி பெறச்செய்து வசூல் சாதனை படைக்கவைக்க நமக்கு துப்பு இல்லை, இந்த தள்ளாத வயதிலும், பாராசூட்டில் பாய்ந்து பாய்ந்து பைட் செய்த சாதனையை பாராட்ட துப்பு இல்லை. நிதி வேணுமாம் நிதி. தூக்கிப்போட்டு மிதி.

அரசாங்கத்தை எதிர்த்து கேள்விகேட்க வக்கில்லாத நாம், நம்முடைய கோபத்தை வெளிக்காட்ட ஒரு ‘’அமிதாப் மாமா’’ தேவைப்படுகிறது. அந்த ‘’அமிதாப் மாமா’’தான் இந்த நடிகர்கள். பொய்யையாவது கொஞ்சம் நம்பும்படி சொல்ல முதலில் கத்துக்கனும், ஒரு பொய்சொன்னா அதுல கொஞ்சம் உண்மையும் கலந்து இருந்தாத்தான் அதை கொஞ்சம் அறிவிருக்கிறவன் நம்புவான். இதெல்லாம் சதுரங்க வேட்டை படம் பார்த்தாலே புரியும். எங்க? நாமதான் எப்போ கபாலி ரிலீஸீன்னு காத்துக்கிட்டு இருக்கோமே. ஆர். ஜே பாலாஜி ஒரு கோடி ரூபாய் நிதி கொடுத்ததாக ஒரு படிக்காத பக்கி  கிளப்பிவிட்டதை, கார்பிரேட் கிளர்கில் இருந்து கம்யூட்டர் இஞ்சினியர் வரை ஷேர் செய்திருக்கிறார்கள். ஷேர் செய்த எவனுமே ‘’ஒரு கோடி ரூபாய் நிதி கொடுக்குற அளவுக்கு ஆர் ஜே பாலாஜியிடம் சொத்து இருந்தால், அவர் எதுக்கு சின்ன சின்ன காமெடி வேடத்தில் நடிக்கணும்?. கேவலம் உதயநிதியே ஹீரோவா நடிக்கும்போது, ஆர்.ஜே பாலாஜி ஹிரோவா நடிச்சிருப்பாரே?’’ என்ற ஒரு சின்ன கேள்விகூட அவர்களுக்கு எழவில்லை. ஏனென்றால், ரமணா படத்தி வருவது போல நாமெல்லாம் ‘’செண்டிமெண்டல் இடியட்ஸ்”. அதேமாதிரித்தான் ஷாருக்கான் 100 கோடி கொடுத்ததாக உடான்ஸ். அதில் 50 கோடி பணமாகவும், 50 கோடி பொருளாகவும் என்ற டீட்டெய்ல்லு வேற.

நடிகனோட தொழில் நடிக்குறது, அதை அவர்களை செய்யவிடவேண்டும். சும்மா, சும்மா, காவிரியில தண்ணிவரல, கக்கூஸ்ல கக்கா போகல என்பதற்காக எல்லாம் போராட்டம் செய்ய இழுத்தால் என்ன நியாயம்?. அப்படி போராட்டம் செய்ய வருகிறவனுக்கு காவேரி பற்றி தெரியுமான்னு கேட்டா, என்னோட அடுத்த பட ஹீரோயின்னுதான் சொல்லுவான். ஒரு படம் நல்லா இருந்தா, ஒருதடவை தியேட்டர்ல பாரு, அடுத்து டாரண்ட்ல நல்ல பிரிண்ட் வந்தவுடன் 10 தடவ பாரு. அதவிட்டுப்புட்டு, ‘’உங்கபடத்தை திருட்டு விசிடில பாக்குறது தப்பே இல்லடா?’’ என்று எதற்கு போஸ்ட்?, என்னமோ நேற்றுவரை எல்லா படத்தையும் தியேட்டர்ல போய் துட்டுகொடுத்து பார்த்தமாதிரி.

‘’தேரை இழுத்து தெருவில் விடுவது’’ என்று தமிழில் ஒரு சொல் உண்டு. நமக்கு கிடைத்த மற்றுமொரு அமிதாப் மாமாதான் கலெக்டர் சகாயம். நேர்மையான அதிகாரிக்கு சப்போர் செய்வதை விட்டுவிட்டு, எலக்சனில் நிக்கவைக்க ஒரு குரூப் கிளம்பி இருக்கு. அவர் எப்போது அரசியலுக்கு வருவதாக சொன்னார், இல்லை ஒரு அபிப்பிராயம் இருக்கிறது என்றாவது சொன்னாரா?.  அவர் அரசியலுக்கு வந்தால் எத்தனைபேர் தெருவில் இறங்கி அவருக்காக வேலை செய்வார்கள்? எவனும் செய்யமாட்டான். வேண்டுமென்றால் அவரைப் பற்றி பேஸ்புக்கில் பத்து போஸ்ட் போடுவான் அவ்வளவுதான். என்னமோ அரசியல் கட்சி ஆரம்பிக்கிறதுங்குறது அரிசி கடை ஆரம்பிக்கிற லெவலுக்கு போயிடுச்சு. இவனுங்க நம்பி சகாயம் அரசியலுக்கு வந்தால் ‘’நாம் பாட்டுக்கு ச்சேவனேன்னு தாண்டா இருந்தேன், யாரு வம்பு தும்புக்கும் போனேனா.......’’  என டிபாஸிட் போனபின்னாடி புலம்ப வேண்டியதுதான்.

சகாயம் அரசியல் வருவதை நான் எதிர்க்கவில்லை, ஆனால் அவர் யாரை நம்பி வரவேண்டும் என்பது ரொம்ப முக்கியம். பேஸ்புக்கில் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பவனையா? அல்லது தெருவில் நின்று அநியாயத்திற்கு எதிராக போராடுபவனையா?. பேஸ்புக்கில் இப்போது அவருக்கு ஆதரவாக போஸ் போடுபவன் எல்லாம், நாளை அவர் அரசியலுக்கு வந்த பின்னாடி புதுசு புதுசா கேலி செய்து மீம்ஸ் போட ஆரம்பித்துவிடுவான். அவனுக்கு தேவை ஆயிரம் லைக். அவ்வளவே. 
   
சென்னையில் தண்ணீர் வற்றியவுடன் ‘’பிரே ஃபார் சென்னை’’ ‘’ஹெல்ப் ஃபார் சென்னை’’ புரபைலை மாற்றியாகிவிட்டது. ஆனால் கடலூர்?. நிவாரணப் பொருட்களில் ஸ்டிக்கர் ஒட்டியதை பேசினோம், கடலூரில் சொந்த ஜாதிக்கு மட்டும் நிவாரண பொருட்களை புடிங்கிய, புடுங்கிகளைப் பற்றி ஏன் பேச மறுக்கிறோம்?. சென்னை இழப்பிற்கும், கடலூர் இழப்பிற்கும் நிறைய வேறுபாடு உண்டு. தண்ணீர் சூழ்ந்த நிலையை வைத்துக்கொண்டு, இரண்டும் ஒன்றே என்ற நிலைப்பாட்டை மாற்றவேண்டும். இந்த வெள்ளத்தில், சென்னை மக்களின் வாழ்க்கையில் சில இழப்புகள் உண்டு, அதை அவர்கள் (90% பேர்) இரண்டு, மூன்று மாதங்களில் சரிசெய்துவிடமுடியும். ஆனால் கடலூர் அப்படியல்ல, எல்லாமே விவசாயிகள், ஏழைகள், இந்த வெள்ளத்தில் அவர்களின் மொத்த வாழ்க்கையுமே இழப்பு. தயவுசெய்து கடலூர் மக்களின் குடிசை வெள்ளத்தில் சென்றதை, சென்னை மக்களின் டி.வி, பிரிட்ஜ் ரிப்பேர் ஆனதோடு ஒப்பிடாதீர்கள்.

பீப் சாங் வந்து வெள்ளம் பற்றிய செய்திகள் கடந்துபோனது, ஆகவே சிம்பு அவர்களே இதுவும் ஒரு நாள் கடந்துபோகும். இறுதியாக, மதிப்பும், மரியாதைக்கும் உரிய மாண்புமிகு புரட்சித்தலைவி, தங்கத்தாரமை அம்மாவின் ஆணைக்கினங்க முடித்துக்கொள்கிறேன்.


------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.