திங்கள், ஏப்ரல் 16, 2012

அழகிய கன்னிகளின் அற்புத தீவு.....


நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
கல்யாண தேதி குறித்தவுடன், எல்லோருக்கும் தோன்றுவது போல், எனக்கும் எனது மனைவியுடன் எங்க எங்கயெல்லாம் போகனுமோ, அந்த இடங்களை எல்லாம் குறித்து வைத்துக் கொண்டேன். இதுல முதலாவது, மனைவியுடன் பார்க்கும் முதல் படம். கல்யாணத்துக்கு ஒரு ரெண்டு மாசத்திற்கு முன்னாடியிருந்தே, நம்ம கல்யாணத்த ஒட்டி என்னென்ன படங்கள் வருகின்றன, யாரு யாரு நடிச்சிருக்கா, இயக்குனர் யாரு, காமெடி படமா இல்ல ஆக்சன் படமா?, ஒரே நேரத்துல 4 படம் ரிலீஸ் ஆனா, அதில் எந்த படத்துக்கு கூட்டிக்கொண்டு போவது என்ற பலவிதமான சிந்தனையில் மனசு ஆழ்ந்திருந்தது. எனக்கு அஜித்குமார் பிடிக்கும் என்பதாலும், பில்லா 2, முதலில் மார்ச் மாதம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டதாலும், சரி தல படமா, தல படத்தையே பார்த்துவிடலாம் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். கல்யாண தேதி நெருங்க, நெருங்க படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிக்கொண்டே போகி, ஆசை நிராசையாகிவிட்டது.

இது சரிப்படாது என்று எண்ணி, என் மனைவியிடமே “ உனக்கு எந்த படத்துக்கு போகனும்னு சொல்லு, நாம அந்த படத்துக்கே போகலாம் என்று சொன்னேன். அவள் உடனே “நண்பன் என்றாள், எனக்கு நீ “எதிரி ஆகிடுவ, அந்த படத்தவிட்டு விட்டு வேறு ஏதாவது படம் சொல்லுன்னு நான் விஜயகாந்த் ஸ்டைல்ல சொல்ல, பேச்சுவார்தையில் உடன்பாடு எட்டப்படாமலே கூட்டம் கலைந்தது. ஆனாலும் விடலியே, மறுநாள், மறுபடியும் ஆரம்பமானது
சொல்லுமா எந்தப் படத்துக்கு போகலாம்?

ஒ.கே, ஒ.கே எப்ப ரிலீஸ்? என்று எதிர் கேள்வி கேட்டாள் அவள்

தெரியலியே, அடுத்தமாசம் தான் ரிலீஸ் ஆகுமுன்னு நினைக்கிறேன்.

ஓ, அப்படியா. அந்த படம் வந்த கண்டிப்பா பாக்கணும்?

பார்த்துட்டா போச்சு, ஆமா, அந்த படம் உனக்கு ஏன் பிடிக்கும்?, இயக்குனர் ராஜேஸுக்காகவா, இல்ல சந்தானத்துக்காகவா?

உதயநிதி ஸ்டாலினுக்காக.

உலக வரலாற்றிலேயே, நீ ஒருத்திதாண்டி, படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடியே, ஒரு நடிகனுக்கு ரசிகையானது.

அதுக்கு காரணம் இருக்கு மச்சான், என்ன தெரியுமா?

என்ன, அவன் ஸ்டாலின் பையங்குறதுனாலையா?

இல்ல, அவன் உங்கள மாதிரியே இருக்கான்?

!?!?!?!?!?!?!?!?!?! (இவ நம்மள அசிங்கப்படுத்துறாளா இல்ல உதயநிதிய அசிங்கப்படுத்துறாளா?)

இப்படி சொன்னதுக்கப்புறம் தான் உதயநிதி ஸ்டாலினை உற்றுப் பார்த்தேன், ஒரே மாதிரியான இரண்டு படத்துல 6 வித்தியாசம் கண்டுபிடிக்குற மாதிரி, ஒரு கையில கண்ணாடி, இன்னொரு கையில அந்த ஹீரோவின் படத்த வச்சிக்கிட்டு பார்த்துக்கிட்டு இருந்தேன். எல்லாமே வித்தியாசமாகத்தான் இருந்துச்சி, ஒரு ஒற்றுமை கூட இல்ல. ஆஹா இவ நம்மள் ஓவரா உட்டு கலாய்கிறாங்குற உண்மைய, எல்லாரையும் போலவே எனக்கும் ரொம்ம லேட்டாகத்தான் தெரிஞ்சுது.

என் வாழ்கையில பக்காவா பிளான் பண்ணி ஏதாவது செஞ்சா அது அட்டர் பிளாப் ஆகும். அது மாதிரித்தான் இதுவும் ஆகிவிட்டது. ஆனால் பிளான் பண்ணாம ஒரு நாள் அது நடந்தது.

குற்றாலத்துல திடிரென பெஞ்ச மழையால, அரிவியில் தண்ணீர் விழுகுதுன்னு என் மச்சான் ஒருவன் சொல்ல, சரி இன்னைக்கு போவமான்னு அவனே கேட்க, சரி போகலாமுன்னு நான் சொல்ல, ஒரு ஆட்டோ அமத்தி அவங்க அவங்க ஜோடியோட மதிய சாப்பாடு முடித்து போகலாமுன்னு முடிவானது.
இங்க தான் கதையில ஒரு டுவிஸ்டு. ஆட்டோ வரல, ஏதோ முக்கியமான வேலையிருக்குன்னு ஆட்டோ டிரைவர் (எனது மச்சானின் நண்பர்) சொல்ல பிளான் அல்மோஸ்ட் கேன்சல். இத கேட்ட மனைவிமார்கள் முகம் கோண, இன்னைக்கு போகலன்னா என்னைக்கும் போகமுடியாதுன்னு முடிவு பண்ணி, பைக்குல போகலாமுன்னு நான் என் வீட்டில் உள்ள ஸ்ப்பிளண்டரை ரெடி பண்ண, எனது மச்சான் டி.வி.எஸ் எக்ஸலுடன் நின்னான் (அவனுக்கு கியர் வண்டி ஓட்டவராது). பெரிய வண்டியும், சின்ன வண்டியும் மேச் ஆகாதுன்னு, நான் என் வீட்டில் அப்பாவிடம் இருந்த எக்ஸலை எடுத்துக் கொண்டு குற்றாலத்தை நோக்கி கிளம்பினோம்.

எங்க ஊருக்கும், குற்றாலத்துக்கும் மிஞ்சிப்போனா ஒரு 15 கி.மீட்டர் தான். அதையும் ஒரு மணி நேரமா ஓட்டு ஓட்டுண்ணு ஓட்டிக்கொண்டு போய் சேர்ந்தோம். வேறு எந்த அருவியிலும் தண்ணீர் விழாத காரணத்தால், ஐந்தருவியில் மட்டும் குளித்து விட்டு, சீக்கிரமாக வீடு திரும்ப திட்டமிட்ட நேரத்தில்,

என் மச்சான் சொன்னான். “அப்படியே தென்காசியில் படம் பார்த்துவிட்டு போகலாம்.

எனக்கும் ஆசை தான் இருந்தாலும் படம் ஒன்னு சரியில்லைய மச்சான், கொஞ்சம் உருப்படியான படம்னா அரவான் தான், ஆனா அது எப்படி இவள்களுக்கு பிடிக்கும்? என நான் கூற.

தாய்பாலாவில் “நாங்க இன்னைக்குத்தான் ரிலீஸ், வேணும்னா அதுக்கு போவமா?
நாங்கவா, சரி போவோம்னு சொல்லி, குற்றாலம் வழியாக தென்காசிக்கு (3.கி.மீ) செல்லும் வழியில் உள்ளது அந்த தியேட்டர். தியேட்டர் நெருங்கி வந்ததும், நான் ரோட்டைப் பார்த்து ஓட்டிக்கொண்டிருந்த போது, என் மனைவி பதறிய குரலில் சொன்னாள், “மச்சா, வேணாம், வண்டிய நிறுத்தாம அப்படியே ஓட்டுங்கன்னு. ஏண்டி இது தானே அந்த தியேட்டர் என்று, வண்டியை நிறுத்திவிட்டு போஸ்டரைப் பார்த்தேன்.

“அழகிய கன்னிகளின் அற்புத தீவு

போஸ்டரில் ஒரு அழகிய பெண், பாவம் ரொம்ப, ரொம்ப கஷ்டப்பட்ட பேமிலி போல, கொஞ்ச துணியோட சிரிச்சிக்கிட்டே, சும்மா கும்முன்னு நின்றது. ஓஹோ, இதுக்குத்தான் நீ, அப்படி அலரியடிச்சு வண்டிய நிப்பாட்டாதீங்கன்னு சொன்னியா? ன்னு என் மனைவியிடம் அசடுவழிய கேட்டேன். “அத வண்டிய கொஞ்சம் தள்ளிக் கொண்டு போயி, அங்கிட்டு நின்னு பேசலாமே என்று பல்லை கடித்துக் கொண்டு சொன்னாள்.

சரி வேறு வழியில்லை, அரவான் தான் பார்க்கவேண்டும் என்று முடிவு செய்து. இறுதியாக அரவானைப் பார்த்துவிட்டு வந்தோம். எங்க இவள்களுக்கு பிடிக்கப்போகிறது என்று நினைத்த எனக்கு, ஒரே ஆச்சர்யம், எனக்கு புரியாத சில இடங்களை, அவள், எனக்கு விளக்கிக் கொண்டிருந்தாள்.

படம் நல்லா இருந்தாலும், அந்த அழகிய கன்னிகளை மறக்க முடியவில்லை. மறு வாரம், ஒரு வேலையாக, தனியாக தென்காசி செல்லும் நிலை வந்த போது, அந்த தியேட்டருக்குப் போனேன். படத்த மாத்திட்டானுங்க, அட அது கூட பரவாயில்ல.

 தக்காளி.....அந்த போஸ்டரையும் மாத்திட்டானுங்க............

--------------------------------------------------------------------------யாஸிர்.

2 கருத்துகள்: