புதன், ஜனவரி 18, 2012

தானேக்கு தானே முன்வந்து உதவுவோம்.


நம் அனைவரின் மீதும் ஆண்டவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
டிசம்பருக்கு ஏனோ இத்தனை கோரப்பசி, அன்று ‘சுனாமி, இன்று ‘தானே. இந்த உலகில் உயிகளுக்கு மட்டும் தான் மதிப்பு போல, உயிரை மட்டும் விட்டுவைத்துவிட்டு அனைத்தையும் தனக்கு தானே கொண்டுசென்றுவிட்டது தானே புயல். சுனாமியால் ஏற்பட்ட உயிர்சேதங்களுக்கு எந்தவிதத்திலும்  குறைத்து மதிப்பிட முடியாத தானே புயலின் கொடுரத்தினை எந்த ஒரு மீடியாவும் மக்களுக்கு வெளிச்சமிட்டு காட்டமால் மறைத்துவிட்டன. ஒரு வேளை டிசம்பர் 31ல் ஏற்பட்டதாலோ என்னவோ, இதை விடுத்து, புது வருடத்தில் மார்பளகு காட்டிப் பேசிய நடிகைகளில் ஆரம்பித்து, தொப்புள் காட்டி நடித்த நடிகையின் படத்தில் தொலைந்து போனோம். நல்லவேளை புத்தாண்டுக்கு ஒருவாரம் முன்னாடி வந்தது சுனாமி, இல்லன்னா அதற்கும் இதே நிலைதான்.

புத்தாண்டு நிகழ்சிகளை ஒளிபரப்பி முடித்த பின்னர், சேனல்களில் நேரங்களும், பத்திரிக்கைகளில் பக்கங்களும் காலியாக இருக்க, சில மீடியாகள் முன்வந்தன, அய்யோ பாவம், அதற்குள் பொங்கல் வந்துவிட்டது, மீண்டும் அதே மார்பளகு மங்கயின் மயக்கம், தொடை நடிகையின் தொடர், ஓடவே ஓடாத படங்களின் விமர்சனம்.........
அறுவடைத் திருநாளில், அரி அருக்க, வயலைத் தொலைத்த தமிழனிடம் அரிவாள் மட்டும் தான் மிச்சமிருக்கின்றது இன்று. புத்தாண்டு, பொங்கல் நாளில் எதிர்காலத்தின் சிந்தனையை விடுத்து, அடுத்தவேளை சாப்பாட்டிற்கு ஏங்கி நிற்கும் இவர்களை எண்ணுகின்ற போது வைரமுத்துவின் வரிகள் தான் ஞாபக வருகின்றது எனக்கு,


அவன் ஒரு பட்டுவேட்டியைப்
பற்றிய கனாவிலிருந்தபோது
கட்டியிருந்த கோவணமும்
களவாடப்பட்டது!!!!!!!!!!!

எதை நினைத்து அந்த கவிஞன் எழுதினானோ தெரியாது, ஆனால் இயற்கை செய்த கோரச்செயலுக்கு, இது ஒத்துத்தான் போகின்றது.

திரு. தமிழருவி மணியனின், காந்திய மக்கள் இயக்கம் நடத்திய ஒரு கூட்டத்தில் சில ஆயிரங்களை பிரித்து, தானே புயலில் பாதித்த பகுதி மக்களுக்கு உதவிட அவருடய தொண்டர்கள் குலுக்கிய உண்டியலில் விழுந்தது 67,000 ரூபாய்களாம். இதிலும் அந்த கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் ஏழை, பாழைகள், கிடைத்த தொகையில் நெகிழ்ந்து அவர் சொன்னார், ஒரு ஏழைக்கு மட்டுமே தெரியும் இன்னொரு ஏழையின் பசி.

அனைவருக்கும், உதவிசெய்ய ஆர்வம் தான், ஆனால் தப்பானவர்களின் கையில் தம்முடைய பணம் சென்றுவிடுமோ என்ற அச்சமும், ஏமாற்றப்பட்டு விடுவோமோ என்ற அவமானமும் இன்று மானமுள்ள தமிழனை மண்ணை நோக்கவைக்கின்றது. உதவியை நாம் உள்மனதிலிருந்து செய்வோம், கண்டிப்பாக அது கிடைப்பவர்களின் கைகளில் கிடைத்திடச் செய்வதை ஆண்டவனின் பொறுப்பில் விட்டுவிடுவோம்.
நான் விகடன் மூலமாக எனது பணத்தினை அனுப்ப முயன்றுவருகின்றேன். உங்களுக்கும் விருப்பம் இருந்தால் கீழ்காணும் வங்கிகணக்கின் மூலமாக அனுப்பிவையுங்கள்.


வெளி-நாட்டவர் கீழ்காணும் முகவரியுலும்
INDIAN BANK,
CURRENT ACCOUNT
A/C = 443380918
IFSC CODE = IDIB000C032
ETHIRAJ ROAD BRACH.
CHENNAI - 600008

உள்-நாட்டவர் கீழ்காணும் முகவரியிலும் அனுப்பலாம்
Vasan Charitable Trust
I.C.I.C.I Bank
Saving Account
A/C = 000901003381
IFSC CODE = ICIC 0000009
NUNGAMPAKKAM, CHENNAI -600034


கை தூக்கிவிடுவோம், உலகில்
கடைசித் தமிழன் இருக்கும் வரை.


--------------------------------------------------------------------------யாஸிர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக