வியாழன், ஜூலை 12, 2012

நமிதாவை, எனக்கு ஏந்தெரியுமா பிடிக்கும் ????


நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
ரசனை இல்லாதவன் சொரனை கெட்ட மனிதன் என்பது பழமொழி. அதுக்காக எல்லோருக்கும் ஒரே மாதிரியான ரசனை இருக்காது. நமக்கு சிலபேரை கண்டாலே பிடிக்காது, அதே மாதிரி சில பேரை பார்க்கும் போதே பிடிச்சுடும். அதுக்கெல்லாம் காரணம் சொல்லிக்கிட்டு இருக்க முடியாது. கல்லூரி காலத்துல உடன் இருக்கும் நண்பர்களிடம் அடிக்கடி கட்டயகொடுப்பதுண்டு. அதுக்கு பதிலாக என்னை கவுக்குறதுக்கு அவனுங்களுக்கு இருக்கும் ஒரே சாக்கு நான் ஜோதிகா ரசிகனாக இருந்தது மட்டும்தான். எவனாவது சிக்கிட்டான்னா, திருவிழா தீயா கொண்டாடிக்கிட்டு இருக்கும் போது, திடிரென “நீ என்னடா பெரிய ஒழுங்கா, ஜோதிகாவுக்கு உலகத்துலயே நீ ஒருத்தன்தாண்டா ரசிகன், அந்த குண்டம்மாவயும் ரசிக்கிற ரசனகெட்ட பயதாணடா நீயி என்று சொன்னவுடனே, வேதம் புதிது படத்துல சத்தியராஜ் கன்னதுல விழும் அடி, என் தலையில விழுந்த மாதிரி இருக்கும்.

‘உனக்கு என்னடா தெரியும் தலைவிய பத்தி, இப்படி இப்படி ஆடும்டா என் தலைவின்னு சொல்லிக்கிட்டே ஜோதிகாவின் டான்ஸ் ஸ்டெப்ப போட்டுகாட்டி, அதுக்கும் ஏறு வாங்குவேன். தனி ஆளா நான் எத்தன பேரைத்தான் சமாளிக்குறதுன்னு எண்ணி, எண்ணி ரூமுக்குள்ள போயி, ரூம பூட்டிக்கிட்டு தேம்பி தேம்பி கண்ணீர்விட்ட காலங்கள் எல்லாம் இருக்கு.

அப்பத்தான் என் எதிர் வீட்டு பாப்பாவின் (யோவ், சின்ன குழந்தயா, புத்தி போகுது பாரு...) 3ம் வகுப்பு பாடத்துல வருகுற கதைய படிச்சேன். ஒரு சிங்கம், ஒரு மாட்ட துரத்திக்கிட்டு ஓடி, கொன்று திண்ணும். இப்படியா பல நாட்கள் நடந்துகொண்டிருக்கும் போது, மாடுகள் எல்லாம் ஒன்று கூடி, அவர்களின் பலத்தை கூட்டமாக சென்று காட்ட, சிங்கம் காட்டவிட்டே ஓடும். ஆஹா என்ன அற்புதம், என்ன அற்புதம் நாம ஒண்டியா இருக்குறதுனாலத்தான் இந்த (அ)சிங்கங்கள் எல்லாம் அல்டாப்பு வேல பண்ணுதுங்க. இனி அப்படி நடக்காது, ஹாஸ்டல் புல்லா ஜோதிகாவின் ரசிகர்களை திரட்டி, யாருக்காவது ஏதாவது பிரட்சனைன்னா நாம ஒன்னா நின்னு எதிரிய ஓட, ஓட விரட்டனும் என்ற கொள்கை முடிவுடன், நோட்ட தூக்கிகிட்டு கணக்கெடுக்க ஒவ்வொரு ரூமா போனா...................சிம்ரன்ங்கரான், மீனாங்குரான், ரம்பாங்குரான், தேவையானிங்குறான், ஏன் மஜ்னு படத்த பார்த்துட்டு டுயுங்கிள் கபாடியாவுக்கு கூட ஒருத்தன் இருந்தான், ஆனா தமிழக விடிவெள்ளி, தங்க சிலை, தாயுள்ளம் கொண்ட ஜோதிக்காவுக்கு மட்டும் எவனும் சிக்கல.
கங்கூலி இந்திய டீமில் கேப்டனாக இருக்கும் போது எனக்கு பிடிக்கவே பிடிக்காது. எந்த மேட்சு பார்த்தாலும் “ஆண்டவா இந்த மேட்சுல இந்தியா ஜெயிக்கனும், அதோட கங்கூலி டக் அவுட் ஆகனும் என்றமாதிரியெல்லாம் வேண்டியிருக்கேன். பத்து ரன்னுக்கு மேல அடிச்சுட்டா, என் நகத்த கடிச்சிக்கிட்டு, எப்பண்டா அவுட் ஆகுவான்னு எல்லாம் காத்துக்கொண்டிருந்தேன். 2003ல் இந்தியா உலக்கோப்பை இறுதிப் போட்டிக்கு போனதும், எல்லா எலக்ஷனிலும் ராமதாஸுக்கு இருக்கும் மனநிலையில் தான் அப்போ இருந்தேன், ஆஸ்திரேலியாவி சப்போர்ட் பண்ண முடியாது அதே நேரத்துல இந்தியா டீமுக்கு வேண்டினா, கேப்டன்ங்குற முறையில கங்கூலி கப்ப தூக்கிகிட்டு நிப்பானே என்ற குழப்பத்துல முடிவுக்கு வருவதற்கு முன்பாகவே கப்ப, கங்காரு கவ்விக்கிட்டு போயிடுச்சு.

தமிழ்நாட்டுக்காரனுங்க எல்லோரும் “செண்டிமெண்டல் இடியட்ஸ்என்பது பாக்ட், பாக்ட், பாக்ட்ன்னு எனக்கு என்ன பார்த்தபின்னாடி தான் தெரிஞ்சுது. உலக கோப்பை முடிந்தபின்பு, கோச்சுக்கும், கங்கூலிக்கும் நடந்த பிரட்சனையில் கங்கூலிய படுத்துன பாட்டைபார்த்து, மனம் நொந்து “சே இந்த உத்தமன போய், இப்படியெல்லாம் பேசிட்டோமே!!! என்று வருத்தப்பட்டு. தாதா வாழ்க, தாதா வாழ்கன்னு என்னுடய ரசனையெல்லாம் மாறிவிட்டது.
நான் ரசிக்கிர அனைவரையும், என் நண்பர்களும் ரசிக்கிறானுங்க, ஆனா என்ன கலாய்ச்சு சரித்திரத்துல நீங்கா இடம்பெறவேண்டும் என்ற ஒத்தக் கொள்கைக்காக, கொள்ளையில போறவனுங்க என் ரசனையை உவ்வ்வ்வே.....லிஸ்டில் சேர்த்துவிடுகிறார்கள். எனக்கு பொண்ணுங்க கொஞ்சம் புஸு, புஸுன்னு இருந்தா தான் பிடிக்கும் என் ரசனை அப்படி, இலியானவை எல்லாம் பார்த்தா எடக்கு முடக்கா கோபம் வரும், அதே நேரத்துல ஹன்ஸிகா மோத்வானினா முகத்துல ஈ ஆடும், வாயில நீர் ஓடும். நமிதாவை எனக்கு பிடித்திருந்தது, எப்பத்துல இருந்துன்னு கேட்டா பொசுக்குன்னு சொல்லிருவேன் ‘எங்கள் அண்ணா படம் பார்த்ததில் இருந்து என்று. அந்த படத்துல நமி அவ்வளவு....., அம்புட்டு.............., அத்தனைக்கு........ அழகாக இருக்கும், விஜயகாந்துடன் இருக்கும் காட்சிகளில் இன்னும் அதிகம்.

ஒன்னு புரிஞ்சிக்கங்க மக்களே, நான் என் ரசனையை எந்த காலகட்டத்துல சொல்லுறனோ, அந்த காலத்து நமிதாவைத்தான் நீங்க பார்க்கனும். “அர்ஜுனா, அர்ஜுனா......... பாட்டுல நமிதாவை பிடிக்காதவன் யாரும் தமிழ்நாட்டில் கிடயாது. அந்த நமிதாவைத்தான் நான் சொலுகிறேனே (ரசிச்சேனே) தவிற இப்ப இருக்குற நமீமீமீத்த்த்தா.......வை அல்ல. “தில்லானா மோகனாம்பாள் படத்த பார்த்திட்டு பத்மினி சூப்பர் பிகர்ன்னு சொன்னா, “பூவே பூச்சூட வாபடத்துல வர்ர பத்மினிய சொன்னதா நினத்து, சுத்தியிருக்குரவனுங்க கொடுக்குற குடைச்சல் தாங்கமுடியல. மானாட மயிலாடயில வர்ர நமிய யாருக்குத்தான் பிடிக்காது. லாதா மாஸ்டர் பக்கத்துல இருக்கும் போது நமிதா ஒல்லியா இருந்துச்சு, அழகா தெரிஞ்சிச்சு. அது நம்ம தப்பு இல்லே. இப்படி பேச்சுல பல இச்சு, சுச்சு வச்சி பேசும் போது பிடிக்கலன்னு சொல்லுறவன் எல்லாம் தமிழனா, நான் கேட்கிறேன் தமிழனா?. எவ்வளவோ பேரு தமிழை அழகாக பேசியிருக்கலாம், ஆனால் இதுவரைக்கும் தமிழை யாராவது இவ்வளவு இனிப்பாக பேசியது உண்டா?.  தமிழ தாய் மொழியா கொண்ட திரிஷா, “ஹாய் ஃபேன்ஸ் என்று சொல்லும் போது, குஜராத்தி பொண்ணு “மச்சான் எப்படி இருக்கு என்று முறை வச்சு கூப்பிடுது, தமிழ்நாட்டுல பல பேரின் முறைப் பெண்கள் கூட இப்படி கூப்பிட்டிருக்க மாட்டார்கள்.

ஆறடி உயரம், அழகிய உருவம் இப்ப கொஞ்சம் அகோர உருவமாகிவிட்டது. இருந்தாலும் சில்க் வேஷத்துக்காக “பட்னி கிடக்குது, வெஜ் சாப்டுது, டயட் இருக்குது, எக்ஸசைஸ் பண்து, இன்னு குஞ்ச நால்லே நா சிலிம் ஆகுது என்று ஒரு பேட்டி கொடுத்து எங்க வயித்துல பால வாத்திருக்கு. நமிதாவின் கவர்ச்சி, நாளைய தமிழகத்தின் எழுச்சி என்பதை கவனத்தில நாம் கொண்டு நாவில் நரம்புடன் பேசகற்றுக் கொள்ளவேண்டும்.

இசைன்னா எஸ்.ஏ. ராஜ்குமார், எஸ்.ஏ. ராஜ்குமார்னா இசைன்னு ஒரு காலத்துல என்னோட இசை ரசனை இருந்துச்சு. என்னது எஸ்.ஏ. ராஜ் குமார்ன்ன்ன்ன்னா யாருன்னு தெரியலையா?. அட இவர்தாங்க வானைத்தைப் போல படத்தின் இசை அமைப்பாளர். இவர் மேல நான் வச்ச ரசனையில, ரத்த கலவரமெல்லாம் நடந்திருக்கு. ல லால்லா ல லலால்லா, ல லல்லலால்ல்லா.......
----------------------------------------------------------------------------------யாஸிர்.

1 கருத்து: