புதன், ஜனவரி 25, 2012

ம்ம்ம்.... அப்புறம், ம்ம்ம்ம்... வேற................


நம் அனைவரின் மீதும் ஆண்டவனின், சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
தலைப்பில் குறிப்பிட்ட இரண்டு வார்த்தைகளை படித்தவுடன் உங்களுக்கு புரிந்துவிட்டால், கண்டிப்பாக ஒன்னு, உங்களுக்கு பொண்ணு பேசி முடிவாகியிருக்க வேண்டும், இல்லனா நீங்க கல்யாணமானவராக இருக்கவேண்டும். இப்போதுள்ள காலத்து பசங்களுக்கென்றே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு நவீன விஞ்ஞான கண்டுபிடிப்பு தான் வாய்ப் கால். வெளி நாட்டில் இருந்து கொண்டு நமக்கென்று பேசிவைத்த பெண்ணிடம் மணிக்கனக்கில் பேசுவதெற்கென்றே இண்டர் நெட் கால் / வாய்ப் கால் உள்ளது. சுமார் 30 திர்கம்ஸுக்கு 8 மணி நேரம் வரை கடலைபோடலாம் ச்ச்சீ கலந்துரையாடலாம்.

நான் வெளி நாட்டிற்கு வந்து இந்த கம்பெனியில் சேர்ந்த போது, என்னுடம் வேலைசெய்யும் ஒரு நண்பருக்கு நிச்சயதார்தம் முடிந்திருந்தது. எங்களுடன் பேசிக்கொண்டிருக்கும் மனிதன், திடீரென்று காணாமல் போய் விடுவார். என்னனு பார்த்தா தனியா நின்று கொண்டு, ம்ம்ம்ம் அப்புறம் சாப்பிட்டாச்சா........ம்ம்ம்ம்ம்......வேற....... என்ற சப்தம் மட்டும் தான் வரும். பேச ஆரம்பித்தால் சுமார் 1 மணி நேரம் வரை பேசிக்கொண்டே இருப்பான்.

அப்ப நாங்க எல்லோரும் கேலி பண்ணுவதுண்டு அவனை, அப்ப அவன் சொல்லுவான், உங்களுக்கும் இப்படி ஒரு நேரம் வரும் அப்ப தெரியும்டா. எனக்கு பொண்ணு பார்த்து, அப்படியே அந்த பொண்ணுட்ட நான் பேசினாலும் உன்ன மாதிரி, ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரமெல்லாம் பேசமாட்டேன். அப்படி என்னதாண்டா பேசுவிங்க, அதுவும் டெய்லி, ஒரு மணி நேரம் பேசுறதுக்கு என்னதாண்டா இருக்கு???. இப்படியா கட்டய கொடுப்பதுண்டு. கன்னிப் பொண்ணுங்க சாபம் பலிக்குமோ என்னமோ தெரியாது, பொண்ணு பேசிப் போட்டவனுங்க விடும் சாபம் உடனே பலித்துவிடும்னு இப்பதான் தெரியுது.
இப்போ, சும்மா நான் யாரிடமாவது போனில் பேசிக்கொண்டிருந்தாலே, அவன் என் பக்கத்தில் வந்து ம்ம்ம்ம்.. அப்புறம்,,,,....ம்ம்ம்ம் வேறன்னு கேலி செய்துவிட்டு போவான்.
அதெல்லாம் சொன்னா புரியாது, அனுபவித்து தான் பார்க்கணும்னு அவன் அப்ப சொன்னான். ஹி ஹி ஹி இப்பதான் நமக்கு புரியுது, எவ்வளவு இருக்கு பேசுறதுக்கு. இரண்டு மணி நேரம் பேசினாலும் அதில் கால் மணி நேரம் ம்ம்ம்ம் அப்புறம், ம்ம்ம்ம் வேறன்னு சொல்லுரதிலேயே போய்விடுகின்றது.

இன்னைக்கு எதைப்பற்றி பேசுவது? என்று எண்ணிக் கொண்டே போன் பேசினால், எதப்பற்றி பேசினோமென்றே தெரியாத அளவிற்கு ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருப்போம். ஆனா, பேசுறதுல பாதி, சில நேரங்களில் எல்லாமே, பெரிய மொக்கையாகத்தான் இருக்கும். கேட்பதற்கும், தெரிந்து கொளவதற்கும் இனி ஒன்றும் இல்லை என்று முடிவானவுடன், சமைலைப் பற்றி டாபிக் மாறும். இப்படியா போய்கொண்டிருக்கும் போது ஒரு நாள், நான் போன் செய்த போது,

ஹலோ, அஸ்ஸலாமு அலைக்கும்,

வ அலைக்கும் ஸலாம்,

என்னம்மா, நல்லா இருக்கியா?

நான் நல்லா இருக்கேன், காலையில இட்லி, தேங்காய் சட்னி வக்கல, சாம்பார் தான், மதியம் புளிக் குழம்பு, எங்கத்தாவிற்கு மட்டும் மீன் பொறிச்சது எங்களுக்கு சிக்கன், நைட்டுக்கு சப்பாத்தி தான், குருமா வக்கனும் அப்படியில்லனா, சீனி வச்சி சாப்பிடனும்..............................

ஏய், நிறுத்து, நிறுத்து, இதயெல்லாம் எதுக்கு சொல்லுற?

எப்படினாலும் நீங்க அடுத்தடுத்து இதத்தான் கேட்கபோறீங்க, அது தான் முதல்லையே சொல்லிட்டேன்

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

அய்யய்யோ, இப்படி ம்ம்ம்.... அப்புறம், ம்ம்ம்.... வேற என்ன சாப்பிட்டன்னு கேட்டு ஒரு அரை மணி நேரத்த ஓட்டிறலாமுன்னு பார்த்தா, இப்படி பல்ப் வாங்க விடுறாளேன்னு மனசுக்குள் நினைத்தாலும், மச்சான நல்லா புரிஞ்சி வச்சிருக்கியேன்னு சொல்லி மூணு புள்ளி, ஒரு ஆச்சிரியக் குறியோடு சொல்லி அசிங்கப்பட்டதை, அவள் புரிந்து கொள்ளமுடியாத அளவிற்கு மேக்கப் செய்ய படாத பாடு படனும்.
இனி கல்யாணம் ஆகும் வரை, இந்த மாதிரியான பதிவுதான், லவ் மூடு ஸ்டார்ட் ஆகிடுச்சு. ஒரு நாள் பேசலன்னா, மனசு கிடந்து அடிக்குது, கை, கால் நடுங்குது, கண்ணு மங்குது, நாக்கு உலருது.............. இதெல்லாம் அனுபவிச்சாத்தான் சார் புரியும், பொண்ணு பேசி போட்டவங்களுக்குத்தான், ஒரு பொண்ணு பேசி போட்டவங்களுடைய கஷ்டம் தெரியும்.

மன்னிக்கனும் மேடத்திடம் இருந்து மிஸ்கால் வந்திருக்கு, அடுத்த பதிவுல பார்க்கலாம்.

ஹலோ, அஸ்ஸலாமு அலைக்கும்

வ அலைக்கும் ஸலாம்,

நல்லா இருக்கியாம்மா?

நல்லா இருக்கேன், நீங்க நல்லா இருக்கீங்களா?

....
....
....
....
...
...

ம்ம்ம்ம்... அப்புறம், ம்ம்ம்... வேற....

--------------------------------------------------------------------------யாஸிர்

2 கருத்துகள்: