ஞாயிறு, ஜனவரி 29, 2012

நீ பாதி, நான் மீதி


நம் அனைவரின் மீதும் ஆண்டவனின், சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
இந்த பொண்ணுங்ககிட்ட உரண்ட இழுக்குறது என்பதற்கு ஈடு இணையான ஒரு மகிழ்ச்சி, ஆம்பிளைங்களுக்கு இந்த உலகத்துலே இல்ல. எதையாவது ஒன்ன சொல்லி, கோபப்படவைக்கலன்னா, 2 மணி நேரமா பேசிகிட்டு இருந்த உரையாடலுக்கு ஒரு திருப்தி கிடைக்காது.

“என்னம்மா இது, எவ்வளவு வேலையிருக்கு, நான் கல்யாணம்னா சும்மா, பந்தல் போடனும், சாப்பாடு போடனும்னுதான் நினைத்தேன், இது என்னடான்னா கடல் அளவு இருக்குஅப்படின்னு நான் சொல்ல

பின்ன, கல்யாணம்னா சும்மாவா?, வீட்ட கட்டிப்பாரு, கல்யாணம் பண்ணிப்பாருன்னு சும்மாவா சொல்லியிருக்காங்க.

ஆமா, ஆமா.. இது கூட தெரியாம, நான் கூட கொஞ்சம் ஏனோ, தானோன்னு இருந்துட்டேன், அடுத்ததடவ கல்யாணம் பண்ணும் போது இந்த மாதிரியெல்லாம் தப்பு நடக்காம பாத்துக்கனும்.

உங்கிட்ட போயி சொன்னம் பாரு, என்னச்சொல்லனும். நீங்க ஒரு @@@@$$$$$^^^&&&******####,!!!!@@@@@@@&$%^@#$%&#&$!@#$&&&&&&&$%%%%%#$#$@#$@#$%$@#$%
இந்த மாதிரி சில செல்ல திட்டுகள் எல்லாத்தயும் வாங்கினாலும், அது தான் சுவாரஸ்யம். ஆனா இதுக்கெல்லாம் சேர்த்து மாத்து நமக்கு திருப்பி கிடைக்கும் பாருங்க.................ஸ்ஸ்ஸ்ஸ்யப்பா.........

மாமியார், மாமனார்கிட்ட எப்படி நடக்கனும் எல்லாத்தயும் உன் பிரண்ட்ங்க கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கோ

ம்ம்ம், என் பிரண்ட் வாஜிதாகிட்ட கேட்டு தெரிஞ்சிக்குறேன்.

யாரு அந்த வாஜிதா, பேரே சரியில்லையே.

சந்த தெரு பொண்ணு, நல்ல பொண்ணு, எங்கூட படிச்சா, ஆனா +1ல் கல்யாணம் ஆகிடுச்சு,

+1 ல்யா?????

ஆமா,

பாரு, எல்லோரும் 10, +1 படிக்கிற பொண்ணுங்கள கல்யாணம் பண்ணுறாங்க, ம்ம்ம்ம்ம் (பெரும்மூச்சியுடன்) எனக்குத்தான் கிழவிய கல்யாணம் பண்ணிவக்கிறாங்க, என்ன செய்றது, மாமி பொண்ணுங்குறதுனால........முடிப்பதற்கு முன்பு

அய்யய்யோ, அப்படியெல்லாம் பரிதாப படவேண்டாம், இப்பக் கூட ஒன்னு கெட்டுப்போகல, என்ன சொல்லுறீங்க, உங்களுக்கு பேச கூச்சமா இருந்தா சொல்லுங்க நான் வேணும்னா இரண்டு பக்கமும் பேசி............

(விட்டா பேசிருவாபோலன்னு பயந்து) அதெல்லாம் எதுக்கு விடு, எனக்கு இவ்வளவு தான்ன்னு மனச தேத்திக்கிறேன்.

அப்படியெல்லாம் ஒன்னும் தேத்திக்கவேணாம், என்ன நெனச்சீங்க என்னப்பத்தி, என்ன .............. வீட்டுல கேட்டாங்க, ...................வீட்டுல கேட்டாங்க....................... ன்னு கிட்டதட்ட எங்க ஏரியாவுல உள்ள எல்லா வீட்டயும் சொல்லிட்டா.

!!!!!!!!!!!!!!!!!!!! (இப்பவே கண்ணகெட்டுதே)

அது மட்டுமா, உங்கல அந்த வீட்டுல வேணாமுன்னு சொல்லிட்டாங்கலாமே, ..................... வீட்டுல இருந்து முதல்ல பொண்ணு கொடுக்குறன்னு சொல்லிட்டு, அப்புறமா, முடியாதுண்னு சொல்லிட்டங்கலாமே???????

ஆஅ.......து, கேட்டோம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம், ஆ.........னா.............

என்ன இழுவ ஜாஸ்தியா இருக்கு?

சரி விடுமா, மத்தவங்கள பத்தி நாம ஏன் பேசனும், ஆண்டவன் யார் யாருக்கு எங்க எங்க நாடியிருக்கானோ அங்க அங்க தான் நடக்கும்னு சொல்லிவிட்டு உடனே போன கட் பண்ணிவிட்டு ஒரு லிட்டர் தண்ணி குடிக்கனும் (கேட்ட நமக்கே ஒரு லிட்டர், பேசுன பேச்சுக்கு அவ எத்தன லிட்டர் குடிச்சிருப்பா)

நியூட்டன் மூன்றாம் விதி பத்தி, ஒவ்வொரு வினைக்கும், எதிவினை உண்டுன்னுதானே சொன்னாரு, ஆனா நமக்கு எதிவினை இரண்டு மடங்காவுல கிடைக்குதுன்னு எனக்கு நானே நொந்துகிட்டேன். ஒன்னு கொடுத்தா, டபுளாக கிடைக்கும் அவளை புரிந்துகொண்டு, இப்போது அன்பு மட்டும் காட்டுகின்றேன் அவளிடத்தில், அது எனக்கு இரட்டிப்பாக திருப்பி கிடைக்கின்றது.
ஒரு பர்கர் கடைக்கு வயதான ஏழை தம்பதிகள் வந்தார்கள், இரண்டு பேருக்கும் சேர்த்து அந்த தாத்தா முதலில் ஒரு கோக்கும் வாங்கினார், இத பக்கத்துல இருந்த ஒரு இளைஞன் பார்த்துக் கொண்டிருந்தான். முதலில் கோக் வந்ததும், தாத்தா இரண்டாக பிரித்து பாட்டிக்கு கொடுத்து அவரும் குடித்தார், பின்பு ஒரே ஒரு பர்கர் வந்ததும் இரண்டாக பிரித்து ஒரு பாதியை பாட்டிக்கு கொடுத்துவிட்டு, சாப்பிட தொடங்கினார். இத பார்த்த்தும் அந்த இளைஞன், தாத்தாவிடம் சென்று,

இந்த தாத்தா காசு, ஆளுக்கு ஒன்றாக வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறி காசை நீட்ட,
அந்த தாத்தா சிறு புன்னகக்குப்பின் சொன்னார் “காசெல்லாம் இல்லாம இல்ல தம்பி, நாங்க இதுவரைக்கும் தனித்தனியா எதையும் வாங்கியதில்லை, கிடைப்பதை இரண்டா பிரித்துக்கொள்வோம் என்றார்.

இளைஞனுக்கு ஒரே ஆச்சர்யம், திரும்பி பாட்டியைப் பார்த்து “நீ எதற்கு இன்னும் பர்கரை சாப்பிடாமல் வைத்திருக்கின்றாய்? என்ற கேள்விக்கு பாட்டியின் பதிலைக் கேட்ட உடன் கண்ணீர் மல்க, காலையில் திட்டுவிட்டு வந்த தன் மனைவியைக் காண ஓட்டமாக ஓடினான்.

அப்படி என்ன பாட்டி சொல்லுச்சுன்னு கேக்கறீங்களா?

...

...

...

...

...

...

...

தாத்தா இன்னும் எனக்கு பல் செட்ட தரவில்லை....!!!!!!!!!!!!!!!!!!!!

-------------------------------------------------------------------------------------------------------------------------யாஸிர்.

5 கருத்துகள்: