திங்கள், டிசம்பர் 05, 2011

இப்போ தெரியுதா..... இப்போ....


நம் அனைவரின் மீதும் ஆண்டவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.

தலைப்பை பார்த்தவுடன், ஏதோ ஜெயலலிதாவிற்கு ஓட்டுப் போட்டவர்களைப் பற்றியது என்று எண்ணிக்கொள்ள வேண்டாம். இந்தியாவில் இருக்கும் எனது நண்பர்கள் பலபேருக்கு தொலைபேசிமுலமாகவும், முகநூலின் (FACEBOOK) மூலமகவும் ஜெயலலிதாவிற்கு ஓட்டுக்கேட்டவர்களில் நானும் ஒருவன். எங்க!! ஆற்காடு மாவட்டத்தை அழகிரி மாவட்டமாகவும், செங்கல்பட்டு மாவட்டத்தை செல்வி மாவட்டமாகவும், கன்னியா குமரி மாவட்டத்தை கனிமொழி மாவட்டமாக மாற்றிவிடுவார்களோ என்ற அச்சப்பாட்டில் செய்தது, ஆனால் இப்போது இவங்க பன்னுகின்ற அலப்பரையா பார்த்தா, புதுச்சேரியையும், தமிழகத்தையும் ஒன்னா சேர்த்து புரட்சித் தலைவி மாநிலமாக மாத்திருவாங்களோன்னு பயந்து இருக்கு, அது சரி அரசியல் எல்லாம் நமக்கு எதுக்கு, விசயத்துக்கு வருவோம்.

கன்னியமான கல்லூரியில், சின்சியரான பசங்கன்னா சிவில் இஞ்சினியராகத்தான் இருப்பாங்கங்கிறது பழமொழி (பழமொழி சொன்னா அனுபவிக்கனும், ஆராயக்கூடாது). 
என் கல்லூரி நண்பர்களிடம் இன்னும் அடிக்கடி பேசுவதுண்டு, அப்படி பேசும் போது “டேய் நாயே நீ அப்படி பன்னுனவந்தானடா “நீ மட்டும் ஒழுக்கமா, நீயும் தான் இப்படி பன்னுனன்னு ஏதாவது ஒரு பழய ஞாபகங்கள், கதைகள் எல்லாம் பேச்சா வரும். சமீபத்தில் எனது நண்பனுடன் பேசியதில், ஞாபகம் வந்த நிகழ்வுதான் இந்த பதிவு.

கல்லூரி இரண்டாம் வருடம், 
A, B, C, D, E ன்னு முதல்வருடத்தில் அனைத்து துறை மாணவர்களுடன் ஒன்றாக படித்துவிட்டு, சிவில் டிபார்ட்மெண்ட் பிளாகிற்கு (கட்டிடத்திற்கு) வந்த நேரம். வந்த புதுசு என்பதால், யாரிடமும் அப்போது புத்தம் இல்லை. வரும் ஆசிரியர்கள் அனைவரும், தங்களை அறிமுகப்படுத்துவதிலும், மாணவர்களை அறிமுகப்படுத்தச் சொல்லியுமாக ஒருவாரம் ஓடியது. அதுலயும் சின்சியர் சிகாமணி ஒருவர் இருந்தார், முதல் நாளே பாடம் எடுக்க ஆரம்பித்துவிட்டார். யாருக்கும் மனம் ஒப்பவில்லை. இப்படியாக ஒருவாரம் போய்விட்டது.

சம்பவநாள் அன்று, எப்போதுமே தாத்தா மாதிரியான சட்டை போடும் சின்சியர் சிகாமணி, அன்று சார்ட் சர்ட் போட்டிருந்தார். சார்டிலும் ரொம்ப சார்ட் சர்ட் அது, கிட்டத்தட்ட பேண்ட் போட்ட இடத்தில் இருந்து ஒரு இன்ஞ்தான் இரக்கம் இருந்திருக்கும். ஹைலேட் என்னனா, அவரு அன்னைக்கு பேண்டுக்கு ஜிப்பு போடலை. “லீ சார்ட்லியர் அப்பாரட்டஸ் என்ற ஒரு சிமெண்ட் தரத்தினை சோதனைசெய்யும் ஒரு கருவி பற்றி பாடம் எடுக்கத்தயாரானார்.

நான், அருன் பாபு, கார்த்திக், நாகவிஜயராஜன் முதல் பென்ஞில் இருந்துகொண்டு அவர் ஜிப் போடாதவிசயத்தை மற்ற மாணவர்களுக்கு பரப்பிக் கொண்டிருந்தோம். அந்த நேரத்தில்,  அவர் எங்களிடத்தில் புத்தகம் இல்லாத காரணத்தினால், இப்படித்தான் இருக்கும் என்று தன்னுடைய புத்தகத்தை நெஞ்சில் வைத்து காட்டிக் கொண்டிருந்தார். முதல் பென்ஞ்சில் இருந்த நாங்கள் வேண்டும் என்றே

“ சார் பின்னாடி உள்ளவங்களுக்கு தெளிவா தெரியலையாம் கொஞ்சம் தூக்கிக் காட்டுங்கான்னு சொல்ல. பாவம் நாங்க எதப்பற்றி சொன்னோம்னு கூட தெரியாம தலைக்கு பக்கத்துல புத்தகத்தவச்சி காட்டினார். அப்போவே ஜிப் பகுதியின் முக்கால்வாசி தெளிவாகத் தெரிய, வகுப்பில் சிரிப்பு சத்தம் கேட்க ஆரம்பித்த்து. அதோட மட்டும் நில்லாமல்

“சார் கடைசி பெஞ்சி பசங்களுக்கு தெரியல சார், இன்னும் நல்லா தூக்கினா, நல்லா தெளிவா தெரியும்னு நான் முதல் பெஞ்சில் இருந்து சொல்ல, மனுசன் தலைக்கு மேல, எக்கி நின்னு கையில புத்தகத்தை தூக்கி இப்போ தெரியுதா, இப்போ....ன்னு காட்டிக்கொண்டிருந்தார். அந்தநேரத்தில், அவருடைய தொப்புலே தெரிஞ்சிருந்தா, ஜிப் விசயத்தை நீங்களே நினைத்துப் பாருங்கள். நாங்க எதுக்கு சிரிக்கின்றோம் என்று கூட கேட்காமல் அவரும் சிரிச்சது தான் பெரிய சிரிப்பு எங்களுக்கு.

கடைசியாக சக மாணவன் ஒருவனுக்கு மனது கேட்காமல், காதில் போய் விசயத்தை சொல்ல, அவருடய ரியாக்சன் இருக்கின்றதே, 1000 சிவாஜி, 3000 கமல், 5000 விக்ரம் சேர்ந்தாகூட பன்னமுடியாது.

----------------------------------------------------------------------------யாஸிர்

3 கருத்துகள்: